search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ்  கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் - 300 பேர் கைது
    X

    ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

    திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் - 300 பேர் கைது

    • காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து வரும் மத்திய பாஜக., அரசை கண்டித்தும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் செயல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவாயிலின் முன்பு தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து போலீசாரின் தடுப்பையும் மீறி ஊர்வலமாக ெரயில் நிலையத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×