search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் கைது
    X

    ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் கைது

    • மானாமதுரையில் ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை கைது செய்தனர்.
    • சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர். ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை டி.எஸ்.பி.கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய், கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

    Next Story
    ×