search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் மார்க்கெட்"

    • கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
    • வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சென்னை:

    சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.

    வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.

    இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-

    விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கூட்ட நெரிசல் ஏற்பட்டது
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

    அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.

    இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அதிகாலையில் மொத்த விற்பனையும், காலை 7 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். இதில் புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக கடந்த மாதம் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    மீன்கள் விற்பனை மட்டுமின்றி ஆடு, கோழி, நண்டு உள்ளிட்ட புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து விற்பனையும் வெகுஜோராக நடந்தது. அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் மீன் மார்க்கெட் வளாகம் நிரம்பி வழிந்தது. இதனால் சற்று நெரிசல் ஏற்பட்டது.

    பெரும்பாலான மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. சிலவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.

    ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 1100 முதல் ரூ.1500-க்கும், இறால் ரூ.250 முதல் ரூ.300-க்கும், வவ்வால், கட்லா மீன்கள் ரூ.250-க்கும் விற்பனையானது. அதேபோல் சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    • மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    ராமநாதபுரம்

    திருப்புல்லாணி ஊராட்சி யில் மீன் மார்க்கெட் இல்லாததால் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல் வேறு சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற் படுத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக திருப் புல்லாணி பகுதியில் சாலை யோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் சாமி ஆலயத்திற்கு செல்லும் வழியில் மீன்களை விற் பனை செய்து வருவ தால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாத தால் திருப்புல்லாணி ஊரா ட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலை யோரங்களில் விற்பனை செய்யப்படும் மீன் வியா பாரிகளை தடுத்து நிறுத்தி னால் மீனவர்கள் மீன் மார்க்கெட் உள்ளே விற் பனை செய்யும் நிலை ஏற் படும். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    • ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் குறிப்பிட்ட இனவகை மீன்கள் கிடைக்காமல் இருந்தது.

    மீன்களின் விலையும் உச்சத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து ஏற்கனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் தமிழகத்தில் வழக்கமாக கிடைக்கும் மீன் வகைகள் தற்போது மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது.தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு இன்று ஏராளமான லாரிகளில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் காலையிலிருந்து மார்க்கெட்டுக்கு குவிய தொடங்கினர். தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட்டில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதை போல் இறைச்சி கடைகளிலும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது.

    • தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.
    • மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னையில் மீன்கள் விலை அதிகரித்தாலும் மீன்கள் வாங்க இன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    தமிழகத்தில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 -ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடைகாலத்தில் விசைப் படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்லாது. வருகிற 14-ந் தேதி தடைகாலம் முடிகிறது.

    சென்னை திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்ல வில்லை. சென்னை காசி மேடு துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுது பார்க்கும் பணியிலும் மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் தமிழகத்து மார்க்கெட்டுகளுக்கு வருகின்றன. இதனால் மீன்விலை அதிகரித்து உள்ளது.

    சென்னை சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று விற்பனை செய்யப்பட்ட மீன் விலை வருமாறு:-

    சங்கரா கிலோ-ரூ.300, நெத்திலி- ரூ.250, வஞ்சிரம்-ரூ.1000,இறால்-ரூ.350,நண்டு -ரூ.400,சீலா-ரூ.400, வவ்வால் -ரூ.700, கட்லா-ரூ.300, சுறா -ரூ.450, மத்தி-ரூ.200 மீன்பிடி தடையால் அனைத்து மீன்கள் விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது.

    பொதுமக்கள் சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க ஆயிரக் கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். மீன்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மீன்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல நொச்சிக் குப்பம், பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் இன்று திரண்டனர். இதனால் அங்கு மீன் விற்பனை களைகட்டியது.

    • வேலூர் பழைய மீன் மார்க்கெட்டில் தகராறு
    • போலீஸ் நிலையத்துக்குள் ஓடி உயிர் தப்பினார்

    வேலூர்:

    வேலூர் எஸ்.எஸ்.கே. மானியம் பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது 26). பிரபல ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    வேலூர் கோட்டை பின்புறம் நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் நேதாஜி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் இன்று காலை மார்க்கெட்டில் பலாப்பழம் அறுத்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திருமலைக்கும், சரவணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை வெட்ட முயன்றார்.

    இதனால் உயிருக்கு பயந்த சரவணன் திருமலையிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச் சென்ற திருமலை பழைய மீன் மார்க்கெட் அருகே சரவணனை மடக்கிப் பிடித்து கத்தியால் கழுத்தில் குத்தினார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த சரவணன் அங்கிருந்து தெற்கு போலீஸ் நிலையத்திற்கு ஓடினார். அங்கிருந்த போலீசார் திருமலையை மடக்கி பிடித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கத்திக்குத்தில் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப் பகலில் வியாபாரி ஒருவரை ரவுடி ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.
    • சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை கலங்கரை விளக்கம்-பட்டினப்பாக்கத்தை இணைக்கும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது:-

    புதிதாக அமைக்கப்படும் மீன் மார்க்கெட்டில் உள்ள 366 கடைகள் இழுவிசை தன்மை கொண்ட கூரையுடன் செயல்படும். 1,240 சதுர மீட்டரில் மீன் கடைகளும், 164 சதுர மீட்டரில் மீன் கொட்டும் இடங்களும் அமைகிறது.

    இதனால் காற்றோட்டத்துடன் காணப்படும். இங்கு வாகன நிறுத்தும் வசதி மேம்படுத்தப்படும். ஒரே நேரத்தில் 155 மோட்டார் சைக்கிள்கள், 62 கார்களையும் நிறுத்த முடியும். பெண்களுக்காக 13 கழிப்பறைகளும், ஆண்களுக்காக 7 கழிப்பறைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

    படகுகள் வந்ததும் இந்த மீன் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்கிவிடும். மேலும் இரவு நேரத்தில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு ஒன்றும் அமைக்கப்படும்.

    மேலும் மழைநீர் கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் அமைக்கப்படும்.

    சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் ரூ.8.5 கோடி செலவில் அமையும் இந்த சந்தையில் 50 சதவீத மராமத்து பணிகள் நிறைவடைந்து உள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த 2 மாதங்களுக்குள் முடிவடை யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் புதிய சந்தை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்புல்லாணியில் மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • இந்த மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் மீன் மார்க்கெட் இல்லாமல் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக திருப்புல்லாணி பகுதியில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் மீன்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் விற்பனை மீன்களை செய்வதை தடுத்து நிறுத்தினால் மீனவர்கள் மீன் மார்க்கெட்டின் உள்ளே விற்பனை செய்யும் நிலை உருவாகும்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் திருப்புல்லாணி பஸ் நிறுத்தத்திற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்தது கருவேல மரங்கள் நிறைந்த காடாக உள்ளது.

    அந்த இடத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்.குடிநீர் திட்டத்திற்காக முஸ்லிம் தெருவில் உடைக்கப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர் என்றார்.

    • மீன் மார்க்கெட்களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும்.
    • அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பெருமாள் கோவில்களுக்கு சனிக்கிழமைகளில் செல்வதோடு வீடுகளில் அசைவம் சமைக்காமலும், சாப்பிடாமலும் விரதம் இருப்பது வழக்கமாகும். இது மட்டும் இன்றி புரட்டாசி மாதங்கள் சனிக்கிழமைகளில் நாமம் போட்டு நாராயண கோபால எடுத்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு பெரும்பாலான வீடுகளில் தங்களுக்கு தேவையான அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியவுடன் தங்கள் விரதமுறையை பொதுமக்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் தொடங்கியது.

    இதன் காரணமாக எப்போதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களிலும் , சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதி காணப்படும். இந்த நிலையில் இன்று புரட்டாசி தொடங்கியதால் கடலூர் துறைமுகம், மீன் மார்க்கெட்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை தொடர்ந்து கூட்டம் இன்றி காணப்பட்டாலும் சிக்கன், மட்டன் மற்றும் மீன் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இது மட்டும் இன்றி அசைவ ஹோட்டல்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த வாடிக்கையாளர்களே இருந்ததை காண முடிந்தது.   

    • பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் உள்ளது.
    • இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி ரத்தினம்பிள்ளைகாய்கறி மார்க்கெட்டில்மீன் மார்க்கெட் உள்ளது.இது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் அங்காடியை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கடை வைத்துள்ள மின் வியாபாரிகளிடம் குறைகள் கேட்டார்.

    பழுதடைந்துள்ள மீன் அங்காடியைஉடனடியாக பழுது நீக்கி தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அவருடன்நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகேசன்,துப்புரவு அலுவலர் ஜெயச்சந்திரன் கவுன்சிலர் சோழன், திமுக பிரமுகர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது
    • மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை 

    கோவை மீன் மார்க்கெட்டிற்கு கடல் மீன்கள் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் தற்போது மீன் பிடிக்க தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டி–னம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து மட்டுமே தற்போது மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    மேலும் தமிழகத்திலிருந்து மீன்கள் கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலை குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் விற்கப்படும் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    பெரிய வஞ்சரம் ரூ.1100க்கும், சின்ன வஞ்சரம் ரூ.900க்கும், விளமீன் ரூ.500க்கும் பாறை ரூ.550க்கும், சங்கரா ரூ.400க்கும், நெத்திலி ரூ.350க்கும், மத்தி ரூ.250க்கும்,கருப்பு வாவல் ரூ.1000க்கும், வெள்ளை வாவல் ரூ.1400க்கும், ராமேஸ்வரம் நண்டு ரூ.700க்கும், சாதா நண்டு ரூ.400க்கும், கிளிமின் ரூ.400க்கும் சாலமன்ரூ. 1100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மீன்கள் விலை உயர்வால் பொதுமக்கள் குறைந்த அளவிலான மீன்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், கேரளாவில் தடைக்காலம் என்பதால் தமிழகத்தில் பிடிக்கக்கூடிய மீன்களை கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் கோவை மீன் மார்க்கெட்டுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளது. கேரளாவில் தடைக்காலம் முடிந்த பின்னர் மீன்கள்விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 83 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ட்ஸுக்குஜி என்ற மீன் மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளாக இயங்கி வந்தது. வகைவகையான புத்தம்புது மீன்கள் மற்றும் பழங்கள் கிடைக்கும் இந்த மார்க்கெட் உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் என்ற சிறப்பிடத்தை பிடித்திருந்தது.

    2020-ம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக தலைநகர் டோக்கியோவின் மத்திய பகுதியில் உள்ள இந்த மீன் மார்க்கெட்டை அகற்றிவிட்டு, வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.


    இதையடுத்து, நேற்று இந்த மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது. கடைசி வியாபாரமாக 162 கிலோ எடையுள்ள சூரை மீன் நல்ல விலை போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Tsukijifishmarket #fishmarketshutsdowns
    ×