search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delay in coming"

    • திருப்புல்லாணியில் மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.
    • இந்த மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சியில் மீன் மார்க்கெட் இல்லாமல் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகள், பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக திருப்புல்லாணி பகுதியில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது.

    குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் மீன்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. முன்னாள் மாவட்ட தலைவர் அப்துல் வகாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாததால் திருப்புல்லாணி ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் விற்பனை மீன்களை செய்வதை தடுத்து நிறுத்தினால் மீனவர்கள் மீன் மார்க்கெட்டின் உள்ளே விற்பனை செய்யும் நிலை உருவாகும்.

    இது குறித்து அதிகாரி களுக்கு பலமுறை கோரிக்கை மனு அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது. மேலும் திருப்புல்லாணி பஸ் நிறுத்தத்திற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சிறுவர் பூங்கா சேதமடைந்தது கருவேல மரங்கள் நிறைந்த காடாக உள்ளது.

    அந்த இடத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்.குடிநீர் திட்டத்திற்காக முஸ்லிம் தெருவில் உடைக்கப்பட்ட சாலைகள் இன்னும் சரி செய்யாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர் என்றார்.

    ×