search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்
    X

    வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்

    • கூட்ட நெரிசல் ஏற்பட்டது
    • விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மீன்மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் இருந்து மீன்கள் கொண்டு வரப்படுகிறது.

    அதைத்தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில், டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் மீன்கள் விற்பனைக்காக வருகின்றன.

    இங்கிருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. வேலூர் மீன்மார்க்கெட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    அதிகாலையில் மொத்த விற்பனையும், காலை 7 மணிக்கு மேல் சில்லறை விற்பனையும் நடக்கிறது. அன்றைய தினம் அதிகளவு மீன்கள் விற்பனையாகும். இதில் புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக கடந்த மாதம் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனை மந்தமாக இருந்தது. புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

    மீன்கள் விற்பனை மட்டுமின்றி ஆடு, கோழி, நண்டு உள்ளிட்ட புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து விற்பனையும் வெகுஜோராக நடந்தது. அதிக அளவில் கூட்டம் குவிந்ததால் மீன் மார்க்கெட் வளாகம் நிரம்பி வழிந்தது. இதனால் சற்று நெரிசல் ஏற்பட்டது.

    பெரும்பாலான மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. சிலவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது.

    ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ. 1100 முதல் ரூ.1500-க்கும், இறால் ரூ.250 முதல் ரூ.300-க்கும், வவ்வால், கட்லா மீன்கள் ரூ.250-க்கும் விற்பனையானது. அதேபோல் சங்கரா மீன் ரூ.250 முதல் ரூ.300-க்கும், நெத்திலி ரூ.150-க்கும், நெய்மீன் ரூ.100 முதல் ரூ.120-க்கும், ஜிலேபி ரூ.80 முதல் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    Next Story
    ×