என் மலர்
செய்திகள்

ஜப்பான் தலைநகரில் உள்ள உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 83 ஆண்டுகளாக இயங்கிவந்த உலகின் மிகப்பெரிய மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது.
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ட்ஸுக்குஜி என்ற மீன் மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளாக இயங்கி வந்தது. வகைவகையான புத்தம்புது மீன்கள் மற்றும் பழங்கள் கிடைக்கும் இந்த மார்க்கெட் உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் என்ற சிறப்பிடத்தை பிடித்திருந்தது.
2020-ம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக தலைநகர் டோக்கியோவின் மத்திய பகுதியில் உள்ள இந்த மீன் மார்க்கெட்டை அகற்றிவிட்டு, வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று இந்த மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது. கடைசி வியாபாரமாக 162 கிலோ எடையுள்ள சூரை மீன் நல்ல விலை போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Tsukijifishmarket #fishmarketshutsdowns
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ட்ஸுக்குஜி என்ற மீன் மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளாக இயங்கி வந்தது. வகைவகையான புத்தம்புது மீன்கள் மற்றும் பழங்கள் கிடைக்கும் இந்த மார்க்கெட் உலகிலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் என்ற சிறப்பிடத்தை பிடித்திருந்தது.
2020-ம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் நடத்த தீர்மானித்துள்ளது. இதற்காக தலைநகர் டோக்கியோவின் மத்திய பகுதியில் உள்ள இந்த மீன் மார்க்கெட்டை அகற்றிவிட்டு, வேறிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று இந்த மார்க்கெட் நிரந்தரமாக மூடப்பட்டது. கடைசி வியாபாரமாக 162 கிலோ எடையுள்ள சூரை மீன் நல்ல விலை போனதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீன் மார்க்கெட் இருந்த இடத்தில் பல அடுக்குகளை கொண்ட வாகன நிறுத்துமிடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Tsukijifishmarket #fishmarketshutsdowns
Next Story






