search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கசிவு"

    • சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.
    • இதில் 2 சிலிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி -திண்டிவனம் சாலையில் ஊரணித்தாங்கல் கிராம எல்லையில் தனியார் கியாஸ் குடோன் உள்ளது. தீபாவளி சீசன் என்பதால் இன்று அதிகாலையில் சிலிண்டர்களை சப்ளை செய்வதற்காக நேற்று இரவு ஊழியர்கள் அவர்கள் கொண்டு செல்லும் டாட்டா ஏ.சி. மற்றும் மினி வேன் ஆகியவைகளில் சிலிண்டர்களை ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்று விட்டனர் .சுமார் 6 வேன்களில் 400-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு இருந்தன.

    இன்று அதிகாலை 4.30 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி வைக்கப்பட்ட மினி வேனில் இருந்து சிலிண்டர் வெடித்ததால் திடீரென வேன் தீப்பிடித்தது. இது மிக உயரத்தில் தெரிந்ததால் இது குறித்து அங்கு இரவு காவலில் இருந்த பரசுராமன் ஓடிச் சென்று அருகில் இருந்த டீக்கடைக்காரர் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த டீக்கடைக்காரர் விரைந்து வந்து இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    விபத்து ஏற்பட்ட சுமார் 10 நிமிடங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சி2 லிண்டர்கள் வெடித்து மினி வேன் முழுவதும் எரிந்தது. மேலும் அருகில் இருந்த ஒரு மினி வேன் பகுதியாக எரிந்தது. உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால் வேன்களில் இருந்த 400 சிலிண்டர்கள் மற்றும் குடோனில் இருந்த சுமார் 100 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வேனில்இருந்த பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு 2 சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள மேல்வலையாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியசாமி(வயது45), விவசாயி. இவரது மனைவி அம்பிகாபதி(45). இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். நேற்றிரவு பெரியசாமி தனது மனைவியுடன் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் அங்குள்ள மோட்டாரை இயக்கி உள்ளார். இதில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. அப்போது அருகில் நின்ற கொண்டிருந்த அவரது மனைவி அம்காபதி கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் அவரையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மடப்புரம் பெரிய சாவடி குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது45). கீற்று முடியும் தொழில் செய்யும் இவரது கூறைவீடு இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.

    இதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகருகே கூறைவீடு இருந்ததால் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கலைவாணன் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஜெய பிரதாபன் , மணிமாறன், ஜெகதீஷ், கருணாநிதி , சுரேஷ், பிரேமா, நடராஜன் உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முதலுதவி பெற்று 12 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் கருணாநிதி. சுரேஷ். சரவணன் ஆகிய மூன்று பேர் பேர் பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ் நிஷா சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
    • அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.

    தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.

    உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.

    • தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா?

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மணத்திடல் கிராமம் புது தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50) தொழிலாளி.

    இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார்.

    இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது திடீரென வீட்டில் இருந்து புகை கிளம்பியது. சிறு நேரத்தில் மள மளவென தீப்பிடித்து எரிய தொடங்கின.

    இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அப்போது தீப்பிடித்து வீட்டிலிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது . இதில் வீடு கட்டிடம் தரைமட்டமாகியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருவையாறு தீயணைப்பு நிலையம் மற்றும் நடுக்காவேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .

    அதன்பேரில் நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருப்பினும் வீட்டில் இருந்த நகை, பணம், ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின . ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆகியதாக கூறப்படுகிறது .

    இது குறித்து போலீசார், மின் கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக வீடு இழந்து பாதிக்கப்பட்ட சேகர் குடும்பத்திற்கு தாசில்தார் பழனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் கவுதமன் ஆகியோர் ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மேட் மற்றும் சீட் தயாரிக்கும் தனியார் கம்பெனிகளில் இருந்து வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யப்படு கிறது.

    இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

    தொழிற்சாலையில் இருந்த குடோனில் தீ பரவியதால் அங்கிருந்த சுமார் 300 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்க மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் பற்றி எரிந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியும் எரிந்தது.

    இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. அருகில் உள்ள புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம், செய்யூர், அச்சரைப்பாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்த தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் தீப்பற்றியதும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார்
    • திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார். இவர் தனது மெத்தை வீட்டில் மாடியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன. அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
    • தீ அணைக்கப்பட்ட நிலையில், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    சென்னை சூளைமேடு அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்ததால், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

    அறையில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ அணைக்கப்பட்ட நிலையில், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    • வீட்டில் அனைவரும் விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
    • வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று தீபாவளியை வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து அனைவரும் அதே பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர். 

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் தீயணைப்பு நிலை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்தது ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் போராடி அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எலக்ட்ரானிக் பொருள்கள் துணிமணிகள் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அனை வரும் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கரையான வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீட்டில் உரிமையாளர் ரங்கநாதனுக்கு பணம் மற்றும் உணவுப் பொரு ள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்தது குறிப்பி டத்தக்கது.

    • நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது.
    • தீ மளமளவென கூரை முழுவதும் பரவியதால் வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அகர கீரங்குடி ஊராட்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

    தூங்கிக்கொண்டிருந்த கிருபாகரன் குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

    தீ மளமளவென எரிந்து கூரை முழுவதும் எரிந்ததால் உயிர்சேதம் தவிர்த்து, வீட்டில் வைத்திருந்த பணம், துணிகள் பொருள்கள் எரிந்து சாம்பலானது.

    இத்தகவலை அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    மயிலாடுதுறை வருவாய் ஆய்வாளர் முத்துசாமி, தாசில்தார் சார்பாக அரசு வழங்கும் முதல் கட்ட நிவாரணமாக ரூ. 5 ஆயிரமும் அரிசி, பாய், போர்வை, மண்ணை வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு வீட்டுப் பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

    ×