என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம்
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் பார்வையிட்டார்.
- அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை போன்றவற்றை வழங்கினார்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் ஊராட்சியில் செருகுடி தியாகராஜன், ஆராயி , பாஸ்கரன் ஆகியோர்களின் வீடு மின்கசிவு காரணமாக முழுவதும் தீபற்றி எரிந்து அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துவிட்டது.
தகவல் அறிந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய அறிமுக செயலாளர் நற்குணன் , தீப்பற்றி எரிந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ5000 பணமும், ஒன்றிய குழு உறுப்பினர் தமிழரசி ரூ.2000 பணமும் நிவாரண பொருட்களாக அரிசி, காய்கறிகள், வேட்டி, புடவை, பாய் போன்றவைகள் வழங்கினார்கள்.
உடன் மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம்,பாஸ்கரன், பூவராகவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் உத்திர.ராஜேஷ், பங்கேற்றார்.
Next Story






