search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 3 மணிநேரம் போராடி அணைத்தனர்
    X

    மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- 3 மணிநேரம் போராடி அணைத்தனர்

    • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மேட் மற்றும் சீட் தயாரிக்கும் தனியார் கம்பெனிகளில் இருந்து வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யப்படு கிறது.

    இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

    தொழிற்சாலையில் இருந்த குடோனில் தீ பரவியதால் அங்கிருந்த சுமார் 300 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்க மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் பற்றி எரிந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியும் எரிந்தது.

    இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. அருகில் உள்ள புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம், செய்யூர், அச்சரைப்பாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்த தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் தீப்பற்றியதும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×