என் மலர்
உள்ளூர் செய்திகள்

தியாகதுருகத்தில் தீ விபத்து
- சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார்
- திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார். இவர் தனது மெத்தை வீட்டில் மாடியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன. அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






