search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைவாழ் மக்கள்"

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
    • பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.

    இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

    பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.

    எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.

    தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.

    • இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
    • அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம். அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும்,

    அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும்.

    இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும். தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

    • நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார்.
    • சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓய்வெடுத்தார்.

    கோவை:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். அங்குள்ள சிறுகுன்றா வனத்துறை விருந்தினர் மாளிகையில் இரவு அவர் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை 6 மணிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடைபயணமாக சின்கோனா மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பொதுமக்கள் அடிப்படை வசதிகள் உள்ளிடட பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அந்த குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீர்த்து வைப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    பின்னர் அவர் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கான ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் பின் பேறுகால தாய்-சேய் மனநலம் பேணுவதற்கான பயிற்சியை தொடங்கி வைத்தார். பயிற்சி கையேட்டையும் அவர் வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ.50 லட்சம் செலவில் பெரியபோது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட வட்டார பொது சுகாதார கட்டிடம், அரிசி பாளையத்தில் ரூ.50 லட்டசம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார கட்டிடம், ரூ.38 லட்சத்தில் கட்டப்பட்ட அரசம்பாளையம் துணை சுகாதார நிலையம் ஆகியற்றை மக்களின் பயன்பாட்டிக்காக திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகள் முடிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று இரவு கோவையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

    • மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
    • 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    மலைவாழ்மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    போராட்டத்தின்போது மலைவாழ் மக்கள் தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ.சண்முகம் தலைமையிலும், மாநில மலைவாழ் மக்கள் சங்கத் துணைத் தலைவா் செல்வம், எஸ்.ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து போராட்டக்காரா்களுடன் வனத்துறையினா் 4 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் போராட்டக் குழுவோடு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில், முதல்கட்டமாக மலைவாழ் மக்களின் 200 ஆண்டு கோரிக்கையான திருமூா்த்தி மலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைத்து கொள்ள அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.

    தளி பேரூராட்சி மூலமாக இதற்காக விரைவில் நிதி ஒதுக்கி டெண்டா் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதர கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    • வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.
    • பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வன அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் இன்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதைக்கு செல்ல கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், ஆறுகளை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும், குடிநீர், செல்போன் கோபுரம், சமுதாயக்கூடம், பள்ளி, அங்கன்வாடி, ரேஷன் கடை, மருத்துவமனை, வீடு, வேளாண்மை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

    வன உரிமை சட்டப்படி வழங்கியுள்ள பட்டாவில் மக்களுக்கு பயன்படாத நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் உடுமலையில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

    பெட்டி, படுக்கை, சமையல் பொருட்களுடன் வந்த மலைவாழ் மக்கள் வன அலுவலர் அலுவலகம் முன்பு அண்டாவில் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் இரவு அங்கேயே படுத்து தூங்கினர். இன்று 3-வது நாளாக போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த மதுசூதனன், குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், நகர செயலாளர் தண்டபாணி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி பஞ்சலிங்கம் உட்பட மலைவாழ் மக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர்.

    இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மலைவாழ் மக்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் உடுமலையில் இருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு 500 பேர் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    • மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
    • குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

     உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்து ள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.

    தொட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

    இந்தநிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ்மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாத வர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாலை அமைக்க கோரிக்கை

    மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர். திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன.
    • இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை,ஈசல்தட்டு,பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.

    அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை ,பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய்,நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு,தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. அது மட்டுமின்றி ஆடு,மாடு,கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து முற்றிலுமாக குறைந்து போனதால் மலைவாழ் மக்களால் விவசாயத் தொழிலில் ஈடுபட முடியவில்லை. மேலும் சுய தொழிலுக்கு உதவிகரமாக இருந்த தைலப்புற்கள், சீமாறு தயாரிக்க பயன்படும் கீற்றுகள் வறட்சியின் காரணமாக கருகிவிட்டது. ஆனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பைக் கொண்டு பிழைப்பு நடத்தி வந்தனர்.

    மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயத் தொழில் தடைபட்டதால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வந்தது. இதனால் மலைவாழ் மக்கள் கவலை அடைந்தனர்.மேலும் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளை நிலங்களை தயார்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்குதல் குறைந்து. இதமான சீதோசன நிலை நிலவுகிறது. அத்துடன் சாகுபடிக்கு தயார் செய்யப்பட்ட நிலங்களும் புத்துணர்வு பெற்று உள்ளது. இதனால் மலைவாழ் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளதுடன் சாகுபடி பணிக்கு தயாராகி வருகின்றனர். தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கினால் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட காத்திருக்கின்றனர்.

    • கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    • மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலைபுலிகள் காப்பகத்தில் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரக ங்கள் உள்ளன. வன ப்பகுதியில்உள்ள செட்டில்மெ ண்ட்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

    இவ்வசதிகளை செய்து தருமாறு அவர்கள் வனத்துறையிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள குழிப்பட்டி, மாவடப்பு, புளிய ம்பட்டி, கருமுட்டிஉட்பட மலைவாழ் கிராமங்களில் இருந்து சமவெளிக்கு வர நேரடி இணைப்பு ரோடு இல்லை.கடந்த சிலஆண்டுகளுக்கு முன்தேவனூர்புதுாரில் இருந்து, மயிலாடும்பாறை வழியாகநல்லார் காலனி வரை ரோடுஅமைக்கப்பட்டது.ஆனால்கருமுட்டிவரை ரோடு அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மலைவாழ் கிராம மக்களும், மலையடிவார பகுதியில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளும் பாதிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கருமுட்டி திட்ட ரோடு பணிகளை மேற்கொள்ள பலஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரோடு அமைக்கப்பட்டால் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பல மலைவாழ் கிராமங்களை இணைக்க முடியும்.இத்திட்ட த்தை செயல்படுத்த வேண்டும் என காண்டூர் கால்வாய் பணிகள் நடக்கும் போதே அப்பகுதியினர்அரசை வலியுறுத்தினர்.பலஆண்டு கால போரா ட்டத்துக்குப்பிறகு நபார்டுதிட்டத்தின் கீழ் வறப்பள்ளம் வரை ரோடு அமைக்கப்பட்டது.வறப்ப ள்ளத்தில் பாலம் அமைத்து மலைவாழ் கிராமம் வரை இத்திட்டத்தை முழுமை ப்படுத்தினால் 300க்கும் அதிகமான தோட்டத்து சாளைகளில் வசிக்கும் மக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறுவார்கள்.

    மாவடப்பு உட்பட பல செட்டி ல்மெண்ட்களுக்கு உடுமலை பகுதியிலிருந்து செல்ல வசதி இல்லை. அவசர தேவைக்காக கூட பல கி.மீ., தூரம் சுற்றி வரும் நிலை தவிர்க்கப்பட்டு அவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பிரச்னையில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில்13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.
    • குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல.

    சென்னை:

    மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய எஸ்.ஐ.யின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல, நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு.

    குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

    இவர், தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர்நகரில் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தும் வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை குல தொழில்களிலேயே ஈடுபடுத்தி வருகின்றனர்.

    இதையறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்தார்.

    இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 11 குழந்தைகளையும் பென்னாலூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×