search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் தொல்லை"

    • ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார்.
    • இளம்பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார்.

    பெங்களூரு:

    பெங்களூரு தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லே அவுட் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் தோசை ஆர்டர் செய்தார்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஆகாஷ் (27) என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த தோசையை மாலை 6.45 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார். இதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுத்தார்.

    இதையடுத்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தண்ணீர் கேட்டார். இதனால் அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார். உடனே ஆகாஷ் படிக்கட்டு வழியாக இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தென்கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆகாஷ் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உணவு டெலிவரி செய்து வருவதும், இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர் என்பவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

    • பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக பெண் டாக்டர் புகார் தெரிவித்து இருந்தார்.
    • புகாரை விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

    விருதுநகர்:

    விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ரேடியோ கிராபராக பணியாற்றி வந்தவர் சுனில் (வயது 40). இவர் மீது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், மருத்துவ கல்லூரி டீனிடம் புகார் அளித்தார். தனக்கு பாலியல் ரீதியாக சுனில் தொந்தரவு கொடுத்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் பேரில், இதுகுறித்து விசாரிக்க 5 பெண் மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவின் பரிந்துரையின்பேரில் ரேடியோ கிராபர் சுனிலை பணியிடை நீக்கம் செய்து, டீன் சங்குமணி உத்தரவிட்டார்.

    • 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வரன் (26). இவர் வீரபாண்டி பகுதியில் டையிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் பணியின் இடைவேளையில் வெளியே வந்த போது அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஞானேஸ்வரன் அத்துமீறியது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியர் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன்(35). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் சமூகஅறிவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக இதேபள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியில் திரண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இதனைதொடர்ந்து கம்பம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    • குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
    • ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சம்பவத்தன்று நள்ளிரவு சென்று குளியலறையில் இருந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் சந்தேகமடைந்து வீட்டின் குளியல் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.அப்போது ஆகாஷை சிறுமியின் தாய் பிடிக்க சென்றபோது அவரை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததின் பேரில் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • மகனுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் காட்டூர் சக்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங்மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் பழுது நீக்க சென்றார் . அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது 39 வயது மனைவியும், பிளஸ்-1 படிக்கும் மகனும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

    இதில் மாணவனின் தாயாருக்கும், பழுது பார்க்க சென்ற சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாரத்தில் 2, 3 நாட்கள் சரவணன் அந்த வீட்டிற்கு சென்று மாணவனின் தாயாரிடம் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வழக்கம்போல் சரவணன் மாணவன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அவரது தாயாரும் இருந்தார். அப்போது சரவணன் அந்த மாணவனின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் தொல்லை அளித்து உள்ளார். இந்த சம்பவத்துக்கு பின் அந்த மாணவன் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளானார்.

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அவனது தந்தை வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார். மகன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பதைக் கண்டு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரித்த போது தாயின் உதவியுடன் சரவணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளான்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுக்கு தாயே உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, நாகர்கோவில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஒரு புகார் கொடுத்து உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நான் பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நர்சிங் படிப்பதற்காக விண்ணப்பித்து உள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தை மது அருந்தி விட்டு வந்து எனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். இதனால் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    ஆனால் அவர் வெளிநாட்டு வேலைக்குச் சென்றதால் சிறிது காலம் எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த அவர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை மீது மகள் பாலியல் ரீதியான புகார் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×