search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1 மாணவரின் ஆடையை கழற்றி தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொல்லை: இருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு
    X

    பிளஸ்-1 மாணவரின் ஆடையை கழற்றி தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொல்லை: இருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு

    • மகனுக்கு நேர்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் காட்டூர் சக்தி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் டி.வி., வாஷிங்மெஷின், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாஷிங் மெஷின் பழுது நீக்க சென்றார் . அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது 39 வயது மனைவியும், பிளஸ்-1 படிக்கும் மகனும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

    இதில் மாணவனின் தாயாருக்கும், பழுது பார்க்க சென்ற சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்த அவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வாரத்தில் 2, 3 நாட்கள் சரவணன் அந்த வீட்டிற்கு சென்று மாணவனின் தாயாரிடம் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வழக்கம்போல் சரவணன் மாணவன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் அவரது தாயாரும் இருந்தார். அப்போது சரவணன் அந்த மாணவனின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் தொல்லை அளித்து உள்ளார். இந்த சம்பவத்துக்கு பின் அந்த மாணவன் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளானார்.

    இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு அவனது தந்தை வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பினார். மகன் வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருப்பதைக் கண்டு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரித்த போது தாயின் உதவியுடன் சரவணன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளான்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை மகன் மூலமாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சரவணன் மற்றும் அவனது தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகனுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுக்கு தாயே உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×