search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் தட்டுப்பாடு"

    • டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
    • கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது.

    ஆறுகள் அனைத்தும் வறண்டுள்ளதால் போதிய நீர் கிடைக்காமல் வால்பாறை வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கி உள்ளன.

    டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.

    அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கோழிக முத்தி முகாமில் இருந்து வரகலியாறு வழியாக வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிகளுக்கு கலீம், பேவி, காவேரி ஆகிய 3 யானைகள் நேற்று அழைத்து வரப்பட்டன.

    டாப்சிலிப் பகுதியில் போதிய நீர் கிடைக்காததால் இந்த மூன்று யானைகள் மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ள முகாமில் மூன்று யானைகளும் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.
    • கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பெருநகர பகுதியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அங்கு குறைந்துள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு குடிநீர் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் கிடைக்க பொதுமக்கள் சுமார் 5 நாட்கள் வரை காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. 5 ஆயிரம் லிட்டர் டேங்கர் குடிநீர் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது

    இதனால் சாமானிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் நிலைமை மோசமாகி விட்டது.

    இதே நிலை நீடித்தால் கோடை காலத்தில் கடுமையான நெருக்கடியை ஐதராபாத் பெருநகரம் சந்திக்கும் என கவலையடைந்துள்ளனர்.

    கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள பெரும் பணக்காரர்கள் கூட உடற்பயிற்சி மையம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கழிவறைகளிலும் குளித்து வருகின்றனர்.

    அதே நிலை விரைவில் ஐதராபாத்தில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
    • தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணிக்கு குடிநீரை பயன்படுத்த தடை.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வழக்கத்திற்கு மாறாக கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவியுள்ளது. கர்காடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், தனது வீட்டின் ஆழ்துளை கிணற்றில் கூட தண்ணீர் வறண்டு விட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் பெங்களூரு மக்களுக்கு குடிநீர் கிடைக்க அம்மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா நீர் வாரியம் குடிதண்ணீரை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    கார் கழுவுதல், தோட்டம், கட்டுமான வேலை, நீரூற்று சாலை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு குடிநீரை பயன்படுத்த கர்நாடகா நீர் வாரியம் தடைவிதித்துள்ளது. இந்த உத்தரவை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பருவமழை சரியான அளவிற்கு பெய்யாத காரணத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    • நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது.
    • தென்னை நார்கழிவுகள், கரும்புசோகை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம்.

    குடிமங்கலம் :

    கோடை காலத்தில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பயிர் மேலாண்மை உத்திகள் குறித்து வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து கோவை வேளாண் பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:- கோடை காலங்களில் பயிர்களுக்கு ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் வெப்ப அயர்ச்சி உற்பத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் தாக்கம் உடனடியாக தெரிந்துவிடுகிறது. ஆனால் வெப்ப அயற்சியின் காரணமாக ஏற்படும் மாற்றம், இலைகளின் அளவு மற்றும் வடிவத்தின் வாயிலாகவும், மகசூல் குறைவதன் வாயிலாகவும் தெரிகிறது. நீர் தட்டுப்பாட்டை போக்க மேலாண்மை செய்ய, பயிர்களுக்கு மூடாக்கு முறைகளையும் வெப்ப அயர்ச்சியை குறைக்க நீராவிபோக்கை குறைக்கும் முறைகளையும் செயல்படுத்தினால் அதிக மகசூல் கொடுக்கும்.

    நிலப்போர்வை அல்லது மூடாக்கு அமைப்பதன் வாயிலாக நீர் ஆவியாதலை குறைத்து கிடைக்கும் நீரை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். மூடாக்கின் அமைப்பதால் களை கட்டுப்பாடு மற்றும் நுண்ணுயிர் பெருக்கத்தை ஏற்படுத்தி மண்ணை உயிர்ப்போடு வைத்திருக்கலாம்.சில சமயம் துணை பயனாக களைக்கட்டுப்பாட்டு செலவு குறைவதால் நீர்பற்றாக்குறை இல்லாத இடங்களில் கூட நிலப்போர்வை முறை பின்பற்றப்படுகிறது.பயிர் எச்சங்களை 5 முதல் 10 செ.மீ., தடிமன் அளவுக்கு சராசரியாக பரப்பி விடுதல் வேண்டும். இதற்கு ெஹக்டேருக்கு 5 முதல் 10 டன் என்ற அளவிற்கு பயிர் எச்சங்கள் தேவைப்படலாம்.

    தென்னை நார்கழிவுகள், ஓலைகள், கரும்புசோகை, கரும்புச்சக்கை என கிடைக்கும் பொருட்களை வைத்து மூடாக்கு அமைக்கலாம். இவற்றை கையாள்வதற்கும், பரப்புவதற்கும் ஏற்ப சிறிய துண்டுகளாக இருப்பது அவசியம்.

    நெகிழி மூடாக்கில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களினால் தாள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் தடிமன் 20 முதல் 25 மைக்ரான் வரை இருக்கும். கருப்புநிறம் கொண்ட தாள்கள், மண்ணின் வெப்பநிலையை அதிகரிக்க செய்கிறது. வெள்ளை நிற நிலப்போர்வையில் கருப்பு நெகிழி மூடாக்கைவிட வெப்பநிலை குறைவாக இருக்கும்.

    சொட்டுநீர் குழாய்களை சரியாக வரிசைப்படுத்தி அதன் மீது போர்வையை போர்த்திய பின் அதன் ஓரங்களில் மண் அணைக்க வேண்டும். பயிரின் இடைவெளிக்கு ஏற்ப சீரான இடைவெளியில் துளைகள் இட வேண்டும். அதன்பின் நாற்று விதைகளை நடலாம்.

    வெப்ப அயர்ச்சியை தவிர்க்க நீராவி போக்கினை கட்டுப்படுத்தியும், இலைகளில் வெப்பநிலையை மாற்றக்கூடிய திரவங்களை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்தும் திரவங்களை சமீப காலமாக மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இதில் வெவ்வேறு வகையான செயல்திறன் கொண்ட திரவங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், அவற்றின் நோக்கம் வெப்ப அயர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே.

    உதாரணமாக திரவ நுண்ணுயிரான மெத்தைலோபாக்டீரியாவை காலை அல்லது மாலை வேளைகளில் இரண்டு சதவீத கரைசலை ஒரு லிட்டர் நீரில் 20 மில்லி அளவில் தெளித்து பயன்படுத்தலாம். அப்போது பச்சையத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இதனால் மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.இதனை பூ மற்றும் காய் பிடிக்கும் போதும், வறட்சியான நேரங்களிலும் பயன்படுத்துவது சிறந்தது. அதேபோல் கயோலின் என்ற மருந்து, களி மண் கலந்தது போன்று இருக்கும். இதை தண்ணீரில் 5 சதவீதம் என்ற அளவில் தெளிக்கும் போது வெப்ப நிலை மற்றும் நீராவிப்போக்கு ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டு வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது.
    • மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி நகரின் தண்ணீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி தண்ணீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள். மீதமுள்ள தண்ணீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள்.

    டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் தண்ணீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. வழக்கமாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

    அதே நேரத்தில் அரியானா மாநிலத்தில் யமுனையில் அதிகப்படியான மணலை அள்ளியதால்தான் தண்ணீர் வற்றிப்போனதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருக்கிற தண்ணீரும் ரசாயனம் கலந்திருப்பதால் அதை சுத்திகரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது.
    • குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மின்சாரம் தடைபடுவதால் குடிநீர் சுத்திகரிக்கும் பணி மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியவசிய தேவைகளுக்குகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் நெருக்கடியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகள் குளிக்காமலேயே பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

    நீர்த்தேக்கங்கள் வறண்டுள்ள நிலையில், பம்பிங் ஸ்டேஷன்களுக்கும் மின்சாரம் கிடைக்காததால், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியாவின் சில பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் குழாய்கள் வறண்டு காணப்படுகின்றன. மக்களின் குடிநீர் தேவைக்காக தற்காலிக தண்ணீர் தொட்டிகள் வைக்கப்படுகின்றன.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி சோஷாங்குவே நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் சாலையில் கற்கள் மற்றும் கழிவுகளை கொட்டி கண்டன முழக்கமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தாமஸ் மபாசா கூறுகையில், 'தண்ணீர் கிடைக்காததால் எனது பிள்ளைகள் குளிக்காமல் பள்ளிக்கு செல்லவேண்டி உள்ளது. சில சமயங்களில் நடு இரவில் தண்ணீர் வந்தால், குழந்தைகளை எழுப்பி குளிக்க வைக்கலாம் என்று காத்திருப்போம்' என்றார்.

    இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில், பொதுமக்கள் முதல்வர் மற்றும் மந்திரிகளின் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தொடங்கியுள்ளனர்.
    சிம்லா:

    இமாச்சலப்பிரதேசம் தலைநகரான சிம்லா பிரபல சுற்றுலாத் தளமாகும். தற்போது கோடைக்காலம் என்பதால் அங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிம்லா நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் போதிய நீர் இல்லாத காரணத்தால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 22 மில்லியன் லிட்டர் தேவை என்ற நிலையில், தற்போது 18 மில்லியன் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது. அதுவும், லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சொகுசு ஓட்டல்கள் மூடப்பட்டன. முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுமக்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய துயரம் உள்ளது. இதனால், கொதிப்படைந்த பலர் முதல்வர் மற்றும் மந்திரிகள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 
    ×