search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன் டவர்"

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நாகர்கோவில் :

    மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த தனி நபர் ஒருவரின் இடத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அந்த இடத்தில் டவர் அமைக்கும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே இதை பரிசீலனை செய்து குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் இந்த தனியார் செல்போன் டவரை நிறுத்தி, இப்பகுதியில் இருந்து 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    தக்கலை :

    தக்கலை அருகே கோதநல்லூர் முட்டைக்காடு பாறையங்கால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடை பெற்றது.

    இதன் அருகில் கல்லாம் பொத்தை, கோயிக்காவிளை, கிருஷ்ணன் நகர், செக்காலர் தெரு, குலாலர் தெரு, வழிக்கலாம்பாடு போன்ற ஊர்களில் நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் தொடக்க பள்ளி, கோவில்கள், சர்ச் போன்ற வை உள்ளன. டவர் அமைத் தால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் செல்போன் டவர் அமைக்கும் வேலையை தனியார் நிறு வனம் தொடங்கியதாக கூறப் படுகிறது. இதை அறிந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் செய்த னர். போராட்டத்தில் கோத நல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் பிரேமா குமாரி, துணைத்தலைவர் டேவிட், வார்டு உறுப்பி னர்கள் அம்பிகா, சுனிதா, அஜிதா மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குமார புரம் கிராம நிர்வாக அலு வலர் கலைசெல்வன், கொற்றிகோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அரசின் உரிய அனுமதி பெற்று வேலை செய்யலாம் என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 5 மணி நேரம் நடந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    • பொதுமக்கள் போராட்டம்
    • பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    குழித்துறை :

    குமரி மாவட்டம் மேல்புறத்தை அடுத்த மதில்தாணி என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதால் தக்க நட வடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதுபோல செல்போன் டவர் அமைக்க முறையான அனுமதியும் பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் அவர்கள் கூறும் போது, சிட்டுக்குருவிகள் செத்து மடிவதாகவும், அயனி மரங்கள் பட்டு போவதாகவும், பொது மக்களுக்கு கதிர்வீச்சு அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் அப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திடீர் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் பொதுமக்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அப்பகுதியை விட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையெழுத்துக்கள் போட்டு மீண்டும் புகார் அளிக்க உள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்களை ஒன்று கூட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பணிகள் தடுத்து நிறுத்தம்
    • மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன்.

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட மாவிளை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் நடவடிக்கைளை தனியார் நிறுவனம் தொடங்கியது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில வாரங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக இப்பகுதியில் உள்ள மக்கள் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். அதன்பேரில் உடனடியாக பணிகள் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    அப்போது கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜஸ்டின், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயராணி, கருங்கல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் வினோ மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது.
    • அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராம த்தில் தனியாருக்கு சொந்த மான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செல்போன் டவர் பொது மக்களின் குடியிரு ப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலை யில் காலை 8 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அவலூ ர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடு ப்பதாக கூறியதின்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரைமணி நேரம் போ க்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட மேல பெருவிளை பகுதியில் தனியார் இடத்தில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடந்த சில மாதங்களாக டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் டவர் அமைப்பதற்கான பணியை அந்த நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சி காய்க்கும் போராட்டத்திலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட் டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க அதற்கான பொருட்கள் இன்று காலை கொண்டுவரப்பட்டது.

    இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். செல்போன் டவர் அமைப்பதற்கு கொண்டு வந்த பொருட்களை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

    தொடர்ந்து அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் திரண்டனர். அவர்கள் அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் அருள் சபிதா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிப்பள்ளம் போலீசாரும், அதிரடி படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    டவர் அமைக்கும் பணியை கைவிட்டால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கேயே அமர்ந்து போராடி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி கவுன்சிலர் அருள் சபிதா கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்த செயலையும் செயல்படுத்த விடமாட்டேன். குடியிருப்பு பகுதியில் மினி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக இந்த டவர் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இல்லா விட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சிஅலுவலகம் துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மூன்றாவதாக இதன் அருகில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் செல்போன் டவரினால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு பள்ளி குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யும் இடத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    • செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர்,சுந்தர கணேசன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடம்பத்தூர் துணை மின் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் செல்போன் டவர் அமைக்கும் பணியை இரவில் தொடர்ந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தை முற்றுகையிட்டனர். மேலும் கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம். பணி தொடர்ந்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்றனர்.

    • தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா கேர்மாளம் பஞ்சாயத்து, திங்களூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேர்மாளம் பஞ்சாயத்தில் கேர்மாளம், சி.கே.பாளையம், ஜோகனூர், ஜெ.ஆர்.எஸ்.புரம், கானகரை, குடியூர், சி.பி.தொட்டி, ஒருத்தி, தலுதி போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம்.

    இப்பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லை. இங்கு, 10-ம் வகுப்பு வரை உள்ள 5 பள்ளிகள் செயல் படுகின்றன. கொரோனா காலத்தில் இங்குள்ள பள்ளி குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் கூட பங்கேற்க முடியவில்லை.

    அங்கிருந்து 12 கி.மீ., தூரம் சென்றால் கர்நாடகா மாநிலத்தின் டவர் இணைப்பு கிடைக்கும். அல்லது 9 கி.மீ. மலைப்பகுதியை கடந்தால் சத்தியமங்கலம் டவர் கிடைக்கும். 

    ஆனால், மலைப் பகுதியில் டவர் இல்லாததால், போன் பயன்படுத்த முடியவில்லை. குன்றி, திங்களூர் பகுதியில் தனியார் டவர் தற்போது அமைத்துள்ளனர்.

    திங்களூரில் 'ஏ' கிராமப் பகுதியில் தனியார் டவர் இருந்தும், கேர்மாளம் பகுதியில் பயன்படாது. எனவே இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செல்போன் டவர் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.
    • மோசடிச் செயலை கண்டால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம்.

    செல்போன் டவர்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கான மத்திய தொலைத்தொடர்புத் துறை, எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    செல்போன் டவர்களை நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், தனிநபர்கள்,அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதில் தொலைத் தொடர்புத்துறை மற்றும் டிராய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை. அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம்,ஏஜென்சி, தனிநபர் பணம் கேட்டால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவும், நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்கவும்.

    இதுபோன்ற மோசடிச் செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகாரளிக்கலாம். மேலும் கூடுதலாக, தொலைத் தொடர்புத்துறையின் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×