என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு
- துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
- பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சிஅலுவலகம் துவக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகில் இரண்டு செல்போன் கோபுரங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மூன்றாவதாக இதன் அருகில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் செல்போன் டவரினால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு பள்ளி குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணி செய்யும் இடத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






