search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமி சிலை"

    • ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
    • இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி ஊராட்சி சீகனப்பள்ளி கிராமத்தில் புதிதாக கங்கம்மா கோவிலை அனைத்து சமுதாய ஊர் மக்கள் சேர்ந்து கட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர்.

    நேற்று இரவு ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

    அப்போது இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர். அதன்பின்பு கீழ் சாதியினர் தூக்க மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு எற்பட்டது.

    அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த பேரிகை போலீசார்கள் சண்டை சச்சரவு செய்ய வேண்டாம் என்று சாமி சிலையை எடுத்து செல்ல தடை விதித்தது.

    இதனால் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தி இருந்தது.
    • உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடை திறந்தபோது அங்கு உள்ள 63 நாயன்மார் சாமி சிலைகளின் துணிகளை அகற்றியும், அதன் மேலிருந்த சிமெண்டால் கட்டப்பட்ட கலசம் போன்ற அமைப்புகளை உடைத்தும், உண்டியல்களின் சீல்களை சேதப்படுத்தியும் இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அதிகாரி மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் ராஜகோபுரத்தில் பதுங்கி இருந்த சேவூர் அருகே சாவக்காட்டுப்பாளையம் அரவங்காடு தத்தனூரை சேர்ந்த தையல் தொழிலாளி சரவணபாரதி (வயது 32) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கு பணம் தேவைப்பட்டதால் குறுக்கு வழியில் திருடலாம் என நினைத்து அவினாசி வந்த அவர், கடந்த 22-ந் தேதி மாலை கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, அங்கேயே அமர்ந்து அவர் உண்டியலை உடைத்து திருடலாம் என்று திட்டமிட்டு கோபுரத்துக்குள் ஏறி மறைந்துள்ளார்.

    பின்னர் இரவு 11 மணிக்கு கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி கோவிலுக்குள் இருந்த பித்தளை வேலை எடுத்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளார். இரவு முழுவதும் கோவிலுக்குள் இருந்தவர் அவ்வப்போது மனநிலைக்கு ஏற்ப இவ்வாறு செய்துள்ளார். கோவிலில் சாமி சிலைகள் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. எந்த அரசியல் அமைப்பையும் சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை துரிதமான முறையில் விசாரித்து சம்பவம் நடந்த அன்றே வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னுதித்த நங்கை அம்மன் இன்று சுசீந்திரம் வந்தடைந்தது
    • தமிழக-கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, வேளி மலை குமாரசுவாமி விக்கிர கங்கள் கடந்த 24-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

    10 நாட்கள் நவராத்திரி விழாவுக்கு பிறகு சுவாமி விக்கிரகங்கள் 7-ந் தேதி அங்கிருந்து புறப்பட்டன. வழிநெடுக பக்தர்கள் திரண்டு சுவாமி விக்ரகங்களை வரவேற்றனர். 8-ந் தேதி காலையில் குமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளைக்கு சுவாமி விக்கிரகங்கள் வந்தடைந்தது.

    தொடர்ந்து குழித்துறை சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்,இரவிபுதூர் கடை, சாமியார் மடம், காட்டாதுரை அம்மன் கோவில், அழகிய மண்டபம் , வைகுண்ட புரம், மணலி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய முறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வைகுண்டபுரத்தில் தொழிலதிபர் அழகி விஜி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மணலியில் கரை கண்டார் கோணம், சித்தி விநாயகர் கோவில் நிர்வாகிகள் சார்பில் சுவாமி விக்கிரகங்களுக்கு தால பொலியிட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

    இதில் கவுன்சிலர் உண்ணி கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பத்மநாபபுரம் கோட்டைவாசல் முன் வரை 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தால பொலிவுடன் தீபமேற்றி வரவேற்பளிக்கப்பட்டது.

    பத்மநாபபுரம் அர ண்மனை வாசல் முன் சுமார் ஒரு மணி நேரம் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் திரண்டு தால பொலியிட்டு சுவாமி விக்கிரகங்களுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் சிறப்பு பூஜைகளுக்கு பின் மண்டபத்தில் அமர்த்தப் பட்டார். வேளிமலை குமாரசாமி, குமார கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன் இன்று (திங்கட்கிழமை) காலையில் சுசீந்திரம் புறப்பட்டார். பக்தர்கள் சிறப்பான முறையில் வர வேற்பு கொடுத்த நிலை யில் மணலி முதல் பத்மநாதபுரம் அண்ணா சாலை முதல் பத்மநாபபுரம் வரை போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது.

    இன்று காலை 9.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன், சுசீந்திரம் ரதவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சுவாமி கோவிலை வந்தடைந்ததும், தமிழக-கேரள போலீசார் இசை கருவிகளை முழங்கி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் அணிவகுப்பு மரியாதையும் செய்தனர். அதன்பிறகு முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • புதையல் ஆசையால் தோண்டிய பள்ளத்தில் கூழாங்கற்கள் கிடைத்தது


    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள மொரசப் பல்லி ஊராட்சியை சேர்ந்தது நலங்காநல்லூர் கிராமம் இந்த கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அதே கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் என்பவர்க்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

    பழமையான கோவில்

    இவரது நிலத்தில் பல நூற் றாண்டுகள் பழமை வாய்ந்த நாகாலம்மன் கோயில் நடுக்கல்லுடன் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் இந்த கோயிலுக்கு சென்று கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

    சாமி சிலைகள் திருட்டு

    மேலும் இங்கு புதையல் இருப்பதாக கிராம மக்கள் நம்பி வருவதாக கூறப்படு கிறது. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதியன்று மாலை சுமார் 3 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரில் வந்த 5 பேர் கும்பல் ஒன்று கடப்பாரை மண்வெட்டி கொண்டு நாகாலம்மன் கோயிலுக்கு சென்று சுமார் 2 அடி ஆழம் தோண்டி அங்கிருந்த 3 நாகாலம்மன் சிலைகளை காரில் கடத்தி சென்றனர்.

    இதனை பார்த்த அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் சென்று கேட்டபோது நிலத்தடி நீர் மட்டம் பார்க்க வந்ததாக ஏமாற்றி திசை திருப்பினர். தகவலறிந்த கிராம மக்கள் அவர்களை விரட்டி சென்ற போது மின்னல் வேகத்தில் காரில் தப்பித்து சென்றனர்.

    இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் நலங்கா நல்லூர் கிராம மக்கள் புகார் கொடுத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு , சப் இன்ஸ் பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் காரில் சிலைகளை கடத்திய மர்ம கும்பல் யார் என தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மொரசப்பல்லி ஊராட்சி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த ராம் (26) என்பவர் கும்பலுக்கு உடந்தையாக ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து ராமை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ராமின் சகோதரியின் கணவர் ராமச்சந்திரன் (32) குடியாத்தம் பார்வதியாபுரம் சேர்ந்தவர் இவரது நண்பரான கூட நகரம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (29) என்பவர் நண்பர் ராமச்சந்திரனிடம் பாழடைந்த பழைய கோயில் உள்ள தா தன்னிடம் புதையல் எடுக்கும் ஆட்கள் உள்ளனர் என கூறி பணம் தருவதாக ஆசை காட்டியதால் ராமச்சந்திரன் தன்னுடைய மைத்துனர் ராமிடம் நலங்கா நல்லூர் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோயில் குறித்து கூறிஉள்ளார்.

    இதைத்தொடர்ந்து, புதையல் எடுக்கும் மந்திர வாதியான அணைக்கட்டு தாலுகா டி.சி.குப்பம் அருகே வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த உழவர் உழைப்பாளர் நலச்சங்க மாநில துணை பொதுச் செயலாளர் ஹபிபுல்லா (45) மற்றும் அந்த அமைப் பைச் சேர்ந்த அவரது நண்பரான வேலுார் பாகாயம் பகுதியில் வசிக்கும் ஆதம்பாஷா (32) என்பவரும் ராமச்சந்திரன் மற்றும் விஜயனுடன் சேர்ந்து, மொரசப்பல்லி ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராம் (26), அவரது தந்தை செல் வம் (55) ஆகியோரை அழைத்துக்கொண்டு, ஹபி மச் புல்லாவுக்கு சொந்தமான நம்பர் பிளேட் இல்லாத கட் சொகுசு காரில் நலங்கா ல்நல்லுார் வந்துள்ளனர்.பின்னர், நாகாலம்மன் கோயிலுக்கு சென்று நிலத் தடி நீர்மட்டம் பார்க்க வந்ததாக கிராம மக்களி டம் பொய் சொல்லி, புதை யலுக்கு ஆசைப்பட்டு தோண்டியுள்ளனர்.

    ஆனால், அதில் வெறும் கூழாங்கற்கள் மட்டுமே கிடைத்ததாக வும், சிலைகளை கடத்து வதாக எண்ணி கிராம மக்கள் துரத்தியதால், காரில் தப்பியதாகவும் போலீசாரிடம் அந்த கும்பல் தெரிவித்தது.

    கூழாங்கற்கள் கிடைத்தது

    இதையடுத்து, பேர ணாம்பட்டு போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர். 

    • தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
    • நவராத்திரி விழா பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது.

    கன்னியாகுமரி:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் இருந்த போது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது.

    பின்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம்சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி சுவாமி விக்ரகங்கள் 23-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 22-ந்தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்து சேர்கிறது. 23-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையு டன் தொடங்கும்.முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல் லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 23-ந்தேதி 7.30 முதல் 8.30-க்குள் நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தமிழக தொழில்நுட்பத்துறை தகவல் அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தமிழக கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறிய தும் அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதியம் மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய் யப்படும். அங்கிருந்து அரண் மனை தேவாரக்கட்டு சரஸ் வதிதேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளி மலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். இந்த பவனி

    அக்.25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங் கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட் டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவி லிலும் பங்கேற்ககின்றனர்.

    பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு பத்மனாபபுரம் வந்தடையும்.

    • திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆராமுது அம்பாள் சமேத ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. கிராமத்தில் இந்த கோவிலை புரணமைப்பு செய்ய வேண்டும் என கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு முதல் ஆலய திருப்பணிகள் தொடங்கியது. மீண்டும் ஊர் பொதுமக்கள் கூடி வீட்டிற்கு வீடு வரி வசூல் செய்து கோவிலின் திருப்பணியானது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலயத்தின் முன்பு புதிதாக மண்டபம் அமைப்பதற்காக நேற்று காலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    அப்போது கோயிலின் வலது பக்கத்தில் முதல் பள்ளத்தில் ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அம்மன் சிலையை பார்ப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் குவிந்தனர். அம்மன் சிலை கோவில் கருவிழி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்அல்லது வேறு ஏதும் உலோகத்தால் ஆனதா என ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அம்மன் சிலை கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி லிங்கேசுவரர் கோவிலுக்குள் சென்ற வாலிபர் ஒருவர், மூலஸ்தானத்தில் உள்ள சாமி சிலையுடன் சேர்ந்து செல்பி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று அமாவாசை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது சாமி தரிசனம் செய்ய வந்த வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தில் மூலஸ்தானத்தில் உள்ள லிங்கேசுவரருடன் தான் இருப்பது போல் செல்போனில் செல்பி எடுத்தார்.

    இதை பார்த்த மேலும் சில பக்தர்கள் தாங்களும் செல்பி எடுக்க முயன்றனர். கோவில் அர்ச்சகர்கள் செல்பி எடுத்த நபரை பிடித்து செயல் அலுவலர் அழகேசனிடம் அழைத்து சென்றனர். அவர் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த துரை (35) என்பது தெரிய வந்தது. அவரிடம் கோவிலுக்குள் மூலஸ்தான சுவாமியை படம் பிடிக்க கூடாது என்று செயல் அலுவலர் எச்சரித்து அனுப்பினார். இந்த சம்பவம் கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×