search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "find"

    • முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ளது எழுவணி கிராமம். இங்கு பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் செல்ல பாண்டியன், தாமரை கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிகளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதற்கு சான்றாக உள்ளன.

    ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமா ளுக்கும் தனித்தனியே கோவில்கள் அமைத்து அதிகளவில் நிவந்தங்கள் கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்துள்ளனர்.மக்களும் கோவில்களை பாதுகாத்து வந்தனர்.

    மேலும் அதிக எண்ணிக் கையிலான கோவில்கள் கால ஓட்டத்தில் சிதைந்து காணாமல் போய்விட்டன.இருப்பினும் தற்போது அதிகளவில் சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. இதன் மூலமாக நாம் முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது.

    தற்போது கிடைத்துள்ள விநாயகர் சிற்பமானது 3½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு துதிக்கையானது இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு காட்சியளிக்கிறது.மேலும் 4 கரங்களுடன் விநாயகரின் வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும், வலது கீழ் கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தை ஊரு ஹஸ்தமாக இடது தொடையில் வைத்தவாறும் ராஜ நீலாசனத்தில் அமர்ந்த வாறு காணப்படுகிறது. ராஜ லீலாசனம் என்பது இடது காலை நன்றாக மடக்கியும் வலது காலை செங்குத்தான நிலையில் வைத்திருக்கும் அமைப்பாகும்.

    முற்கால பாண்டி யர்களின் கோவில்கள் காணாமல் போயிருந்தாலும் அவர்கள் காலத்து சிற்பங்க ளும், கல்வெட்டுகளும் அதி களவில் கிடைத்து வரு கின்றன. இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆராமுது அம்பாள் சமேத ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. கிராமத்தில் இந்த கோவிலை புரணமைப்பு செய்ய வேண்டும் என கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு முதல் ஆலய திருப்பணிகள் தொடங்கியது. மீண்டும் ஊர் பொதுமக்கள் கூடி வீட்டிற்கு வீடு வரி வசூல் செய்து கோவிலின் திருப்பணியானது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலயத்தின் முன்பு புதிதாக மண்டபம் அமைப்பதற்காக நேற்று காலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    அப்போது கோயிலின் வலது பக்கத்தில் முதல் பள்ளத்தில் ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அம்மன் சிலையை பார்ப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் குவிந்தனர். அம்மன் சிலை கோவில் கருவிழி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்அல்லது வேறு ஏதும் உலோகத்தால் ஆனதா என ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அம்மன் சிலை கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×