search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடமுழுக்கு"

    • கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு.
    • சோகோ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் நடக்கும் இந்த குடமுழுக்கு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    கும்பகோணம்:

    தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் வருகிறார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் அவர் அங்கிருந்து காரில் அரியலூர், ஜெயங்கொண்டம், அணைக்கரை வழியாக திருப்பனந்தாள் வருகிறார்.

    திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் மாணிக்கநாச்சியார் அம்மன் கோவில், மனக்குன்னம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது.

    சோகோ குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தலைமையில் நடக்கும் இந்த குடமுழுக்கு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருப்பனந்தாள் அருகே உள்ள ஒழுகச்சேரி மெயின் சாலையில் தஞ்சை மாவட்ட தமிழ் சேவா சங்கம் சார்பில் சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நிகழ்ச்சியில் சிவநிதா குழுவினரின் பரதநாட்டியம், சிவகுலத்தார் பண்பாட்டு கலாசார நாடகம், அனியமங்கலம் சிவகுலத்தார் பறையாட்டம், ஒப்பேரி, நாதஸ்வரம், தவில், சிவவாத்திய கச்சேரி ஆகியவை நடக்கிறது.

    இதில் சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகிறார். இதில் தமிழ் சேவா சங்க மாநில அமைப்பாளர் பாவேந்தன், வாயுசித்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா முடிந்ததும் இரவு 7 மணிக்கு ஜெயங்கொண்டம், அரியலூர் வழியாக காரில் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

    கவர்னர் திருப்பனந்தாள் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், தஞ்சை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் ஆகியோர் சிதம்பரநாதபுரம், மனக்குன்னம், ஒழுகச்சேரி ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

    • 2, 3 மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணிக்கு மேல் முத்து மாரியம்மனுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலவஞ்சி கிழக்கு காவா குளக்கரையில் பகுதியில் அமைந்துள்ளது மழை மாரியம்மன், முத்துமாரியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் திருப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு நாளை (ஞாயிற்றுகிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளன.

    நாளை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மழை மாரியம்மனுக்கும், காலை 9 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் முத்து மாரியம்ம னுக்கும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    முன்னதாக இன்று நவசக்தி ஹோமமும், பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை முதல் காலை யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து 2, 3 மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.

    நாளை குடமுழுக்கு முடிந்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    இரவு 10 மணி அளவில் நாட்டுப்புற இரட்டையர்கள் திருப்பத்தூர் சேவியர், கந்தர்வகோட்டை முருகையா இணைந்து நடத்தும் திருப்பத்தூரான் கலைக்குழுவின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை புலவஞ்சி கிழக்கு கிராமவாசிகள் மற்றும் பஞ்சாயத்தார்கள் செய்து வருகின்றனர்.

    • பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.
    • குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி தலையாமழை கீராந்தியில் சிங்கமகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரத னைகள் நடைப்பெற்றது.

    தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்களில் மல்லாரி ராகம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

    சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தை கருட பகவான் சுற்றிவர சிங்கமகா காளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.

    • காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி- விஸ்வரூபம், காலசந்தி பூஜைகள் ஆகியவை நடந்தது.
    • தொடர்ந்து, மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் (கிருஷ்ணன் கோவில்) குடமுழுக்கு நடைபெற்றது.

    இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 60 வருடங்கள் கடந்த நிலையில் அறநிலையத்துறையினர் கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர்.

    இதன்படி கோவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி-விஸ்வரூபம், காலசந்தி பூஜை, நித்யஹோமம், மூலமந்திரஹோமங்கள் கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. 9.45 மணிக்கு மூலஸ்தான தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை முன்னிட்டு இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 30-ந்தேதி சிவகங்கை பூங்காவில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அன்றைய தினம் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கின. தொடர்ந்து, 1-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

    இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாகசாலைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்பருஷாஹூதி, திரவ்யாஹூதி, பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு சாவடி காமாட்சி அம்மன், விநாயகர் சன்னதி கலசங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. அதன்பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மேள வாத்தியங்களுடன் ராஜகோபுர விமானத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் பின்னர் ராஜகோபுரத்தில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுப்பிரமணியர் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. அப்போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதையடுத்து மகா அபிஷேகம் செய்யப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா, துணை ஆணையர் சூரியநாராயணன், செயல் அலுவலர் அய்யம்மாள், தக்கார் உமாமகேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நிலமேகம், மேயர் சண்.ராமநாதன், கீழவாசல் தி.மு.க. பகுதி செயலாளர் நீலகண்டன், விளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி (எ) சோமரத்தின சுந்தரம் கவுன்சிலர் கண்ணுக்குஇனியாள்,

    தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு துணை தலைவர் கோவிந்தராஜ், அ.ம.மு.க. பூக்கார பகுதி செயலாளர் செந்தில்குமார், தஞ்சை தொகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க தலைவர் எம்.எஸ். வசந்த், அ.தி.மு.க. மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், கோட்டை பகுதி செயலாளர் சாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் அமைந்துள்ள பகுதிகளில் ஆங்காங்கே தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானம், உணவு பொட்டலங்கள் வழங்கினர்.

    தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    • விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை எம்.ஆர். நகர், பாரத் கல்லூரி பின்புறம் அமைந்துள்ளது. வேங்காச்சி முனியாண்டவர் கோவில். இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது.

    தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாகபூஜை, திரவ்யஹூதியும், பூர்ணாஹீதியும் நடந்தது. பின்னர் கடம்புறப்பாடு நடந்து 11 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சதானந்தம் செய்திருந்தார்.

    ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சவுமியா ஜனார்த்தனன், சச்சிதானந்தம், கார்த்திக் பூஜாரி, ராஜேந்திரன், ஜவஹர், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    முன்னதாக தருமபுரம் ஆதீனம் சார்பில் முதல்-அமைச்சருக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, தருமை ஆதீன வானொளி, தொலைக்காட்சி ஒளி ஒலி பதிவகத்தை திறந்து வைத்தும், பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டார்.

    பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது, முதல்-அமைச்சர் ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.2 லட்சம் கொடுத்து திருப்பணிகளை தொடங்கி வைத்தார் என்றார்.

    தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்:-

    தருமபுரம் ஆதீனத்திற்கும் எங்களுக்கும் தமிழ் நட்பு மட்டுமல்ல குடும்ப நட்பும் உண்டு.

    நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளை பார்த்து வியந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல்-அமைச்சரின் செயல்பாடுகள் ஆட்சிக்கு மட்டுமல்ல கோவிலின் விடியலுக்கும் சாட்சியாக உள்ளது என பல்வேறு மடாதிபதிகள் பாராட்டி வருகிறார்கள்.

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் அரசாக தமிழக அரசு உள்ளது.

    தருமபுரம் ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் பல்வேறு ஆதீனங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது போதுமானது.

    விழாவில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆதீன நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் மகாபாரதி, முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ் விஜயன், ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, நகர்மன்ற தலைவர் செல்வராஜ், ஆதீனம் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், திருக்கடையூர் கோவில் கூடுதல் கண்காணிப்பாளர் மணி உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மாணவ- மாணவிகள், ஆதீனம் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுயாட்சி பெற்ற கோவிலாக மாற்ற வேண்டும்.
    • கிராம கோவில் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது. மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் துரை.கோவிந்தராஜன் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தேசிய பொது செயலாளர் வக்கீல் சந்திரபோஸ், தேசிய துணை தலைவர் டாக்டர் பழனிக்குமார், தமிழ்நாடு, பாண்டிச்சேரி முஸ்லீம் ராஷ்டிரிய மன்ஞ்ச் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஷாகுல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் புலவர் ஆதி.நெடுஞ்செழியனின் தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு என்னும் நூலை சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் வெளியிட்டு பேசினார்.

    இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் சைவ, வைணவ, ஆதீனங்களின் வழிகாட்டுதல்படி தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பை விரிவுபடு த்தி வளர்க்க வேண்டும். சிதிலமைந்து இடிபா டுகளுடன் உள்ள சைவ, வைணவ கோவில்களை கண்டறிந்து புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்திட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் சுப்பிரமணியர், பழனி தண்டாயுதபாணி ஆகிய கோவில்களை சுயாட்சி பெற்ற கோவில்களாக மாற்றிட வேண்டும். கிராம கோவில் ஒன்றை அரசு அமைத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவே ற்றப்பட்டன.இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கிராம கோயில் திருப்பணி செம்மல் யுவராஜ் அமிழ்தன், தாணி கோட்டகம் ராமலிங்கம், தஞ்சை மகேந்திரன், எம்.குமார், பரசுராமன், சத்தியலெட்சுமி, சம்பத், கோவிந்தராஜ், பூபதி, எஸ்.எம்.டி.முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தேசிய திருக்கோயிகள் கூட்டமைப்பு மையக்குழு உறுப்பினர் காசிராஜன் நன்றி கூறினார்.

    • எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாச்சாரியரை காணலாம்.
    • மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தேவாசுரர் பாற்கடலை கடைந்தபோது மந்திர மலை பாரம் அதிகமாகிக் கடலுக்குள் செல்ல ஆரம்பித்தது. கடலுக்குள் மலை செல்லாத வண்ணம் திருமால் ஆமை உருவெடுத்து மந்திர மலையைத்தன் முதுகில் சுமந்து கடலைக் கடைய உதவியருளினார்.இது தான் (கமடம்) கூர்ம அவதாரம்.

    வருணன் மேற்கு திசைக்கு அதிபதி இதனால் தான் அவனுக்கு காட்சித் தந்த பெருமாளும் மேற்கு திசை நோக்கி கமடேஸ்வரராக சேவை சாதிக்கிறார்.

    தெய்வத்திரு தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் விஸ்வகர்ம ஜெகத்குருவின் ஆத்ம நண்பரும், அநேக திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழாவினை செய்தவரும், சிறந்த தேவி உபாசகருமாகிய தெய்வத்திரு தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோவிலின் சைவ ஆகம பூஜை விதிப்படி நடத்த திருமழிசை சிவத்திரு ஈ.ஷண்முக சிவாசாரியார் அவர்களை நியமித்தனர் விஸ்வகர்ம பெருமக்கள்.

    அவர் மிகவும் பாடுபட்டு ஸ்ரீகாளிகாம்பாளின் அருளை உலக மக்கள் அறிய வைத்தார். அவர் 1961 செப்டம்பர் 21-ல் தேகவியோகம் ஆன பின் அவருடைய இளைய குமாரர்கள் தேவியின் நித்ய பூஜை சிறப்புற நடைபெற உறுதுணையாகத் திகழ்கின்றனர்.

    இக்கோவிலின் திருப்பணியிலும் இதன் முன்னேற்றத்திலும் சைவத்திரு. டாக்டர். தி.ஷ. சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

    குலபூஷணம் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் அவர்கள் இந்து தர்மத்தைக் கட்டி காத்து இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்யும் மகத்தான பணியில் திலகமாக விளங்கினார்.

    எங்கெல்லாம் குடமுழுக்கு விழாக்கள் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் சிவாசார்யர் அவர்களைக் காணலாம். உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் செய்து வைக்கும் குட முழுக்கு விழாக்கள் பலப்பல, விழாக்கள் மூலம் வரும் தொகையை காளிகாம்பாள் தேவிக்கே திருப்பணிக்கே அளித்து வந்துள்ளார். இது யாம் அறிந்த உண்மை.

    வெள்ளிக்கிழமைகள் தோறும் கன்னி பூஜை நடத்திடவும் கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடந்திடவும் ஏற்பாடு செய்ததும் சிவாசாரியாரின் பெரு முயற்சியே திருக்கோவில் வளர்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சிவத்திரு டாக்டர் தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார் ஆவார்.

    அவர் தேகவியோகம் ஆனபின், அவரது இளைய செல்வராகிய தி.சா.காளிதாஸ் சிவாசாரியார் `தந்தையர் ஒப்பர் மகள்' என்பதற்கிணங்க காளிகாம்பாள் கோவில் வளர்ச்சியில் அறங்காவலர்களும் ஆசார்யர்களும் இணைந்து அற்புதமான மேலைக்கோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

    திருக்கோவில் வளர்ச்சிக்கு 1. மூர்த்தம், 2. குருக்கள், 3. அறங்காவலர்கள் மூவரும் இணைவது தான் சக்தி மயம். மூர்த்தம் காளிகாம்பாள், குருக்கள்- குரு வடிவில்- தாயைக் காட்டுவித்தல்.

    அறங்காவலர் அறவழியில் நின்று ஆலயத்திற்கு சேவை நெய்தல், ஆலய பணியே அறப்பணி, அதற்கே தன்னை அற்பணி என்று அருட்பணி செய்தல்.

    இவ்மூவகை அம்சமும் திகழ்வது சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோவிலே ஆகும். உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை...!

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நூற்றுக்கணக்கான அடியார்கள் தினமும் 18 ஆயிரம் பன்னிரு திருமுறைகளை முற்றோதுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை கோயிலில் தோணி யப்பர் ,உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றனர்.

    திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 24ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நடைபெறும்.

    திருப்பணிகளை அடுத்து யாகசாலை அமைப்பதற்கு மேற்கு கோபுரம் வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் வெட்டிய போது 493 தேவாரம் தாங்கிய செப்பேடுகள் மற்றும் 22 ஐம்பொன் சுவாமி விக்கிர கங்கள் கிடைக்கப்பெற்றது.

    கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறும் போது இவ்வாறு சுவாமி சிலைகள், செப்பேடுகள் கிடைத்த தகவல் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி தருமபுரம் ஆதீனம் ஏற்பா ட்டின் படி திருஞானசம்பந்தர் சந்நிதியில் பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் தொடங்கி நடைபெறுகிறது.

    தமிழகம் எங்கும் உள்ள பலநூறு அடியார்கள் பங்கேற்று 18000 பன்னிரு திருமுறைகளை நாள்தோறும் முற்றோது கின்றனர். இதனை தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.

    அடியார்களுடன் தருமபுரம் ஆதீன மடத்து கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் ஓதுவார் மூர்த்திகளும் பன்னிரு திருமுறைகளை முற்றோதுதலில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் தமிழ்சங்க தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், திருக்கோவில் பாதுகாப்பு பேரவை பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது.
    • கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிழக்கு ஆமைகுளத்து ஐயனார் கோவில் தனி சன்னதியில் ஆஞ்சநேயர் அருள் பாலித்து வருகிறார்.

    இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது முன்னதாக விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையில் தொடங்கியது இதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு ஆகி ஆஞ்சநேயர் கோயில் கோபுர கலசத்தில் புனிதரின் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது பின்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

    ×