என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள் இயக்கம்"
- சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் ஈரோட்டை அடைகிறது.
- ஈரோடு பயணிகள் ரெயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஈரோடு:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து வரும் 13-ந் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் 14-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஈரோட்டை அடைகிறது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் வரும் நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்படும்.
இதேப்போல் ஈரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ெரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு நான் தொட்டை சென்றடையும்.
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ரெயில் இயக்க ப்படும்.
ஜோலார்பேட்டை ெரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று தொடங்கி நாளை மறுநாள், 13 வரும் 21-ந் தேதி மற்றும் 23-ந் தேதி ஆகிய நாட்களில் ஈரோடு பயணிகள் ெரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் இன்றும், நாளை மறுநாளும், 13, 21, 28 ஆகிய தேதிகளில் ஜோலா ர்பேட்டை-திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






