என் மலர்
நீங்கள் தேடியது "Special trains run"
- சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
- 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.
கோவை,
சபரிமலை சீசனை முன்னிட்டு பெல்காம்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சபரிமலை சீசனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநிலம் பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07357), நாளை காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோன்று, கொல்லம்-பெல்காம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07358), வரும் 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.
பெல்காம்-கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07361), வரும் டிசம்பர் 4-ந் தேதி முதல் 2023 ஜனவரி 15-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 11.30 மணிக்கு பெல்காமில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம்-பெல்காம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07362), வரும் டிசம்பர் 5-ந் தேதி முதல் 2023 ஜனவரி 16-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில், மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு பெல்காம் சென்றடையும்.
கர்நாடக மாநிலம் ஹுப்ளி- கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07359) வரும் 27-ந் தேதி மதியம் 2.40 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லம்-ஹுப்ளி இடையிலான சிறப்பு ெரயில் (எண்:07360) வரும் 28-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 8 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.
இந்த ெரயில்கள் சாஸ்தான்கோட்டா, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பால்க்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ெரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் ஈரோட்டை அடைகிறது.
- ஈரோடு பயணிகள் ரெயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
ஈரோடு:
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிரா மாநிலம் நான் தெட்டில் இருந்து வரும் 13-ந் தேதி மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் 14-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஈரோட்டை அடைகிறது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் வரும் நவம்பர் மாதம் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ெரயில் இயக்கப்படும்.
இதேப்போல் ஈரோட்டில் வரும் 15-ந் தேதி காலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ெரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு நான் தொட்டை சென்றடையும்.
ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை தோறும் நவம்பர் 26-ந் தேதி வரை இந்த சிறப்பு ரெயில் இயக்க ப்படும்.
ஜோலார்பேட்டை ெரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று தொடங்கி நாளை மறுநாள், 13 வரும் 21-ந் தேதி மற்றும் 23-ந் தேதி ஆகிய நாட்களில் ஈரோடு பயணிகள் ெரயில் திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் இன்றும், நாளை மறுநாளும், 13, 21, 28 ஆகிய தேதிகளில் ஜோலா ர்பேட்டை-திருப்பத்தூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






