முனியாண்டவர் கோவில் குடமுழுக்கு

விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கு நடந்தது.
குடமுழுக்கு நடந்தது.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை எம்.ஆர். நகர், பாரத் கல்லூரி பின்புறம் அமைந்துள்ளது. வேங்காச்சி முனியாண்டவர் கோவில். இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பூர்ணாஹூதி, முதல் கால யாகபூஜை நடந்தது.

தொடர்ந்து இன்று காலை 2-ம் கால யாகபூஜை, திரவ்யஹூதியும், பூர்ணாஹீதியும் நடந்தது. பின்னர் கடம்புறப்பாடு நடந்து 11 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயந்தி சதானந்தம் செய்திருந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் சவுமியா ஜனார்த்தனன், சச்சிதானந்தம், கார்த்திக் பூஜாரி, ராஜேந்திரன், ஜவஹர், முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com