search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pothole"

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நூற்றுக்கணக்கான அடியார்கள் தினமும் 18 ஆயிரம் பன்னிரு திருமுறைகளை முற்றோதுகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை கோயிலில் தோணி யப்பர் ,உமாமகேஸ்வரி சட்டநாதர் ஆகிய சுவாமிகள் மூன்று நிலைகளில் காட்சி தருகின்றனர்.

    திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 24ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நடைபெறும்.

    திருப்பணிகளை அடுத்து யாகசாலை அமைப்பதற்கு மேற்கு கோபுரம் வாசல் நந்தவனப் பகுதியில் பள்ளம் வெட்டிய போது 493 தேவாரம் தாங்கிய செப்பேடுகள் மற்றும் 22 ஐம்பொன் சுவாமி விக்கிர கங்கள் கிடைக்கப்பெற்றது.

    கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறும் போது இவ்வாறு சுவாமி சிலைகள், செப்பேடுகள் கிடைத்த தகவல் பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி தருமபுரம் ஆதீனம் ஏற்பா ட்டின் படி திருஞானசம்பந்தர் சந்நிதியில் பன்னிரு திருமுறைகள் முற்றோதுதல் தொடங்கி நடைபெறுகிறது.

    தமிழகம் எங்கும் உள்ள பலநூறு அடியார்கள் பங்கேற்று 18000 பன்னிரு திருமுறைகளை நாள்தோறும் முற்றோது கின்றனர். இதனை தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.

    அடியார்களுடன் தருமபுரம் ஆதீன மடத்து கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் ஓதுவார் மூர்த்திகளும் பன்னிரு திருமுறைகளை முற்றோதுதலில் பங்கேற்றுள்ளனர்.

    இதில் தமிழ்சங்க தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், திருக்கோவில் பாதுகாப்பு பேரவை பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட முறையற்ற சாலைகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. #SC #PotholeDeaths
    புதுடெல்லி:

    சமீபகாலங்களில் சாலையில் உள்ள மேடு பள்ளங்களினால் ஏற்படும் விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மும்பையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்திலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மோசமான சாலைகளினால் தங்கள் உயிரை இழந்தவர்களுக்கு நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. மேலும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    மேலும், சமீபத்திய ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், பயங்கரவாதத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட பராமரிக்கப்படாத சாலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, சாலை பாதுகாப்பு தொடர்பான உச்சநீதிமன்ற குழு இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. #SC #PotholeDeaths
    ×