search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் எம்எல்ஏக்கள்"

    • 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    இமாச்சல பிரதேசத்தில் எப்படியும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா உள்ளது. அதே போல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆர்வத்துடன் இருக்கிறது.

    ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா குதிரை பேரம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதனால் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதா பக்கம் தாவி விடாமல் இருப்பதற்காக அவர்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பத்திரமாக ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தனி பஸ்கள் மூலம் அவர்கள் அங்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் பூபேந்திர சிங்கோடா ஆகியோர் செய்து வருகின்றனர். இந்த பணிகளை காங்கிரஸ் மேலிடம் அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உன்னிப்பாக கவனித்து வருகிறார். இன்று பிற்பகல் அவர் சிம்லா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக இந்த தேர்தல் முடிவு அமைந்து உள்ளதால் இமாச்சலப்பிர தேசத்தில் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஆளும் கட்சி வெற்றி பெறுவது இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் இம்முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    அதே சமயம் இந்த வரலாற்றை முறியடித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற துடிப்பில் பாரதிய ஜனதா உள்ளது. இதனால் இமாச்சல பிரசேத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குஜராத் சட்டசபையில் நேற்று கடும் அமளி ஏற்பட்டது.
    • இதனால் 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபை நேற்று காலை கூடியதும் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா எழுந்து, அரசு ஊழியர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்களின் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா மறுப்பு தெரிவித்தார். உடனே சுயேச்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அரசு ஊழியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

    அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை இருக்கைகளுக்குச் சென்று அமரும்படி சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காததால், அவர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை சட்டசபை விவகாரத்துறை மந்திரி ராஜேந்திர திரிவேதி கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை நேற்று ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை அவைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை.
    • கோவா எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோ நீக்கம்.

    கோவா மாநிலத்தில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 25 சட்டசபை உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான காங்கிரசிற்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

    இன்று அம்மாநில மழைக்கால சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவா எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, திகம்பர் காமத், கேதர் நாயக் மற்றும் ராஜேஷ் ஃபல்தே சாய் ஆகிய ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முதலமைச்சருடன் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், கோவா மாநிலத்திற்கு சென்று அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்குமாறு அக்கட்சியின் எம்.பி முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சதித்திட்டத்தை மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் தீட்டியதாக கோவா காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டி உள்ளார்.

    கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது ஜனநாயகம் அல்ல, பண நாயகம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்து காங்கிரஸ் எம்எஏக்கள், மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையின் வழக்குகளை எதிர்கொள்கிறார்களா என்பது குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகாவில் மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
    பெங்களூர்:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது. இதையடுத்து ஜே.டி.எஸ், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

    புதிய மந்திரிசபை பதவி ஏற்றது முதல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முதலில் இலாக்காக்கள் ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

    இறுதியில் காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியது. குமாரசாமியே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக நீடிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அதற்கு பலனாக பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜே.டி.எஸ். கட்சி கூட்டணி சேர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இலாகா ஒதுக்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் காங்கிரசிலும் ஜே.டி.எஸ். கட்சியிலும் மந்திரி பதவி கிடைக்காத தலைவர்கள் பலர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

    காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காததால் எம்.பி.பட்டீல், சதீஸ்ஜார்கிகோளி, எச்.கே. பட்டீல், எம்.டி.பி. நாகராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    எம்.பி. பட்டீல் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தினார். தனக்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் எம்.பி. பட்டீல் தெரிவித்தார்.

    இதையடுத்து எம்.பி. பட்டீலை துணை முதல்- மந்திரி பரமேஸ்வர், கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி கிருஷ்ணபைரே கவுடா ஆகியோர் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார்கள்.

    அதேபோல் முதல்-மந்திரி குமாரசாமியும், எம்.பி. பட்டீலை சந்தித்து பேசினார். அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. அவர் தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுத்தே தீரவேண்டும் என்று அடம்பிடித்தார்.

    இதையடுத்து மேலிட அழைப்பின் பேரில் எம்.பி. பட்டீல் மற்றும் அதிருப்தியாளர்கள் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர்.

    எம்.பி. பட்டீலை சமாதானப்படுத்திய ராகுல் காந்தி, அடுத்தக்கட்டமாக மந்திரிசபை விரிவாக்கத்தின் போது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றார்.

    இதை ஏற்க மறுத்த எம்.பி.பட்டீல் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தனக்கு துணை முதல்-மந்திரி பதவி கட்டாயம் வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் திட்டவட்டமாக தெரிவித்ததுடன் லிங்காயத் சமூகத்தை புறக்கணித்தால் நாடாளுமன்ற தேர்தலில் வட கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிவித்தார். இதை ஏற்க ராகுல்காந்தி மறுத்துவிட்டார். இதனால் ராகுல்காந்தியுடன் எம்.பி.பட்டீல் நடத்திய ஆலோசனை தோல்வியில் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராகுல்காந்தியை சந்தித்து விட்டு வெளியே வந்த எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-


    எனக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றோ, துணை முதல்-மந்திரி பதவி வேண்டும் என்றோ மாநில தலைவர் பதவி வேண்டும் என்றோ ராகுல்காந்தியிடம் எந்தவிதமான கோரிக்கையும் வைக்கவில்லை.

    நான் ஒரு தனி ஆள் அல்ல, என்னுடன் எம்.பி. நாகராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    ராகுல்காந்தியிடம் நான் பேசியது, அதற்கு அவர் கொடுத்த விளக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெங்களூருவுக்கு சென்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்து ஆலோசனை நடத்த உள்ளேன். அதன்பிறகு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இது காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை. இதனை 4 சுவர்களுக்குள் பேசி முடிக்க வேண்டும். எந்தவொரு வி‌ஷயத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது. மல்லிகார்ஜுனகார்கே மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.

    இந்த நிலையில் எம்.பி. பட்டீல் நாளை (11-ந் தேதி) பெங்களூருவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கூட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ள 40 எம்.எல்.ஏ.க்கள்வரை கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi #MBPatil
    ×