என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka Congress"
- குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம்.
சென்னை:
சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :-
ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.
குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.
காவிரி விவகாரத்தை அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், துணை முதல்வர் பரமேஸ்வரா இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. உறுப்பினர்களிடையே சில காரணங்களால் அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது அவர்கள் தொகுதி சார்ந்த பிரச்சினைகள் மட்டும்தான். கூட்டணி அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அரசுக்கும், அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கும் இடையிலான அனைத்து பிரச்சினைகளும் பேசி தீர்க்கப்படும். சில காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்து தங்கள் பக்கம் இழுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி ஊடக தகவல்களின் அடிப்டையில் போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சரவையில் காங்கிரசுக்கு வழங்கவேண்டிய 6 இடங்கள் குறித்து கேட்டதற்கு, சித்தராமையா வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் இறுதி செய்யப்படும் என்றார் பரமேஸ்வரா. #Parameshwara #KarnatakaCongress






