search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தடை"

    • சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன.
    • கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது

    சென்னை:

    சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தெரு நாய்களால், தெருக்களில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அவற்றை பிடித்து சென்று கருத்தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் தெரு நாய்களை பிடிப்பதற்காக 16 சிறப்பு வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 பணியாளர்கள், ஒரு டிரைவர் உள்ளனர். நாய்களை பிடிக்க 64 வலைகள் உள்ளன. சென்னையில் கடந்த 2 வருடங்களில் மொத்தம் 26,671 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 15,695 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 10,976 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • 2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சி மலைப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆண்டியம்மாள் (34). இவர்களுக்கு முறையே 9,7,5 வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 4வது முறையாக கருவுற்ற ஆண்டியம்மாள் கடந்த வாரம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

    அவரது குழந்தை பிறப்பு குறித்த விவரம் அறிந்த திண்டுக்கல் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் ஆண்டியம்மாளை கருத்தடை செய்து கொள்ளுமாறு கூறினர். ஆனால் எங்கள் ஊரில் இதுபோன்ற பழக்கம் கிடையாது. எனவே நான் கருத்தடை செய்துகொள்ள மாட்டேன் என கூறினார். கூலி வேலை பார்க்கும் உனது கணவரால் 4 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எவ்வாறு சமாளிப்பீர்கள்.

    மீண்டும் குழந்தை பிறந்தால் உங்களுக்குதான் கஷ்டம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆண்டியம்மாள் எங்கள் வாரிசாக ஆண்பிள்ளை பிறந்தவுடன் கருத்தடை செய்து கொள்கிறேன். அதுவரை கருத்தடை செய்து கொள்ள மாட்டேன் என தெரிவித்தார். டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் அறிவுரை கூறியும், ஆண் குழந்தை பிறக்கும் வரை கருத்தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என உறுதியாக கூறிவிட்டார்.

    இதுகுறித்து அவரது கணவரிடம் பேசியபோதும் அதே கருத்தை தெரிவித்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த மற்ற பெண்களும் ஆண்டியம்மாளிடம் அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை.

    2 குழந்தைகள் இருந்தாலே தற்போதைய காலகட்டத்தில் அவர்களை வளர்த்து வேலை வாங்கி கொடுப்பது என்பது சவாலான காரியம். இதன் காரணமாகவே தமிழக அரசு கருத்தடை அவசியத்தை வலியுறுத்தி வருகிறது. ஆனால் கிராமப்புற பெண்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. பயம் மற்றும் அறியாமை காரணமாக கருத்தடைக்கு மறுத்து வருகின்றனர். மேலும் ஆண் குழந்தைதான் குடும்ப வாரிசு என்று நினைக்கின்றனர். இதுபோன்ற சிந்தனை மாறவேண்டும். எந்த குழந்தையாக இருந்தாலும் தங்களால் வளர்த்து சாதனையாளராக்க முடியும் என்ற எண்ணம் வளரவேண்டும் என்றனர்.

    • குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் சார்பில் நகர மன்ற தலைவர் மன்னை த.சோழராஜனிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் வேல்முருகன், விலங்கியல் ஆர்வலர்கள் விவேக், அண்ணாதுரை, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், ஜெயக்குமார், ஜான்சன் லயன்ஸ் சங்கம் சந்தோஷ், ஜே.சி.ஐ சங்கம் நந்தகுமார் உட்பட பலர் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மன்னார்குடி நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மனித நேயத்தோடு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறை களின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மன்னார்குடி நகரத்தில் தற்சமயம் சுமார் 6000 தெரு நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தத் தெரு நாய்கள் உணவுக்காக அலையும் நிலையில் உணவு கிடைக்காத சூழலில் வெறிபிடிக்க வாய்ப்பு உள்ளது.

    விரைவாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை யெனில், தெரு நாய்கள் அதிகரித்து உணவு கிடைக்காமலும், குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே, நமது மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிகின்ற அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, அதற்கான நவீன அறுவை சிகிச்சை கூடம், தெருநாயை பிடிப்பது முதல் அறுவை சிகிச்சை செய்து முடித்து பிடிபட்ட இடத்திலேயே விடுவது வரையிலான பணிகளை உறுதிப்படுத்த வேண்டும்.

    நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்ற கொண்ட நகர் மன்ற தலைவர் சோழராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.
    • பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஓடைப்பகுதியில் சமீபகாலமாக தெரு நாய் கடித்துக் குதறியதில் 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் , அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர். பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை தொடர்ந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா 21-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனர் பிரேமலதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை இரு வாரவிழா கடந்த 21-ந்தேதி முதல் வருகிற 4-ந்தேதி வரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதனையொட்டி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுரையின்படி ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை விழிப்புணர்வு ரதத்தை தென்காசி மாவட்ட இணை இயக்குனரும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் டாக்டருமான பிரேமலதா, குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரதம் மூலம் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சையின் சிறப்பம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வெள்ளைச்சாமி, மகப்பேறு பிரிவு முதன்மை குடிமை மருத்துவர் புனிதவதி, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் ஸ்வர்ணலதா, கார்த்திக், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் முருகன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் டேவிட் ஞானசேகர், புள்ளி விபர உதவியாளர் வேலு, வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர்கள் , செயின்ட் மேரி செவிலியர் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.
    • பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது

    அளவான குடும்பம் என்பது ஆரோக்கியமான வாழ்வை தருவது போல, மகத்துவமான சமூகம் உருவாக மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியமாகும்‌. தற்போது 794 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதிகரித்து வரும் மக்கள் தொகையினால், மக்கள் அடர்த்தி அதிகரிப்பதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை தடுக்கும் வகையில் உலகில் குடும்ப கட்டுப்பாடு (கருத்தடை) என்ற வழக்கம் தொடங்கியது. பெண்களுக்கு டியூபக்டொமி எனப்படும் சிகிச்சை மூலம் பெண்களின் கருப்பையில் உள்ள பெல்லோபியன் என்ற விந்தணு குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதன் மூலம் விந்தணுக்கள் அவர்களின் கருப்பையினுள் செல்வது தடுக்கப்படுகிறது. இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.

    இதேபோல், ஆண்களுக்கும் வாசக்டாமி எனப்படும் சிகிச்சை முறை உள்ளது. ஆனால் இதை மேற்கொள்பவர்களுக்கு பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படும் என்ற வதந்தி பரவியது. இதனால், இந்த சிகிச்சையை எடுத்துகொள்ள அனைவரும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கவும், அனைவரிடத்திலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதியை சர்வதேச ஆண்கள் கருத்தடை தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

    இன்றைய சூழலில் ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதினால் ஆண்மை குறைவு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற கருத்து நிலவுகிறது.‌ ஆனால் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை 20 நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய மிகச்சிறிய அறுவை சிகிச்சையே. இதனால் உடலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் தாம்பத்திய வாழ்வில் முன்பு போலவே ஈடுபடலாம்.

    ஒருவேளை நாம் திரும்ப குழந்தைபேறு வேண்டும் என்று விரும்பினால் தலைகீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் குழந்தைபேறு பெறும் வசதியும் இதில் உள்ளது. ஆனால் பெண்களில் இது சாத்தியமற்றது.‌ எனவே பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது‌ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சிகிச்சை மேற்கொண்டவர்கள் 3 மாதத்திற்குள் தாம்பத்திய‌ வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஏற்கனவே விந்துக்குழாயில் இருக்கும் விந்தணுக்களின்‌ மூலம் குழந்தைப்பேறு உருவாகக்கூடும். எனவே இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்ட பின்னரே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

    சர்வதேச ஆண்கள் கருத்தடை தினத்தில் இந்த சிகிச்சை குறித்து அறித்து கொண்டு, பாதுகாப்பான முறையில் கருத்தடை மேற்கொள்ளலாம்.

    • காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம்.
    • இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

    நம் நாட்டில் கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு மட்டும் இல்லை, அது குறித்து எண்ணற்ற தவறான நம்பிக்கைகளும், கருத்துகளும் உள்ளன. சிலர் அதைப் பாவம் என நினைக்கிறார்கள். சிலர் அதை இன்பத்துக்கு இடைஞ்சல் என நினைக்கிறார்கள்.

    பொதுவாக, கருத்தடை வழிமுறைகள், தற்காலிக முறைகள், நீண்டகால முறைகள், நிரந்தர முறைகள் என மூன்றுவகைப்படும். தற்காலிக முறைகளில் காண்டம் எனப்படும் உறை, கருத்தடை மாத்திரை, அவசரநிலை மாத்திரை, கருத்தடை பேட்ச், கருத்தடை வளைவுகள், ஸ்பெர்மசைட், டயாப்ரம், கேப், கருத்தடை ஊசி ஆகியவை அடங்கும். நீண்டகால முறைகளில் காப்பர் டி, கான்ட்ராசெப்டிவ் இம்பிளான்ட் ஆகியவையும் நிரந்தர முறையில் டியூப்பக்டமி, வாசக்டமி ஆகியவையும் அடங்கும். இதில் ஆணுறையும், வாசக்டமியும் ஆண்களுக்கானவை மற்றவை பெண்களுக்கானவை

    காப்பர் டி(Copper T) ஒரு நீண்டகால கருத்தடை சாதனம். மாதவிலக்கின் இறுதி நாளில், பெண்களின் பிறப்புறுப்பின் வழியாக மருத்துவரால் உள்ளே பொருத்தப்

    படும் கருத்தடை சாதனம் இது. இது பல்வேறு அளவுகளில் வருகிறது. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை ஆயுள்கொண்டது.

    ஹார்மோன்கள் கொண்ட காப்பர் டி, பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பை அடர்த்தியாக்கி, விந்துக்கள் எண்டோமெட்ரியத்தை அடைவதைத் தவிர்க்கும், ஹார்மோன்கள் இல்லாத காப்பர் டி, காப்பர் அணுக்களைச் செலுத்தி விந்துக்களின் இயக்கத்தைத் தடுக்கும். மேலும், இதை, விரும்பும்போது அகற்றி, கருத்தரிக்கலாம். காப்பர் டி தோல்வி அடைய 1 சதவிகித வாய்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், இது சில பெண்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட்கான்ட்ராசெப்டிவ் இம்ப்ளான்ட் எனப்படும் சிறிய குச்சி போன்ற கருத்தடை சாதனம், மருத்துவரால் பெண்களின் கைப்பகுதியில் செலுத்தப்படும். இது சினைமுட்டை வெளியேற்றத்தைத் தடுக்கும். மேலும், பிறப்புறுப்பின் மியூக்கஸ் சுரப்பின் அடர்த்தியை அதிகரித்து, விந்து உட்செல்வதையும் தடுக்கும் என்பதால் மிகவும் பாதுகாப்பான கருத்தடை சாதனம் இது.

    ஒருமுறை உட்செலுத்திக்கொண்டால், மூன்று வருடங்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வரை கருத்தடை செய்யும். விரும்பினால் இதை அகற்றிக்கொண்டு கருத்தரிக்கலாம். ஒரு சதவிகிதம் மட்டுமே தோல்வி அடைய வாய்ப்பு உள்ள இம்ப்ளான்ட் சாதனம் இது. சிலருக்கு ஒவ்வாமையை

    ஏற்படுத்தக்கூடும்.

    ×