search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டால் அந்த பிரச்சனை வருமா?
    X

    ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொண்டால் 'அந்த' பிரச்சனை வருமா?

    • இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.
    • பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது

    அளவான குடும்பம் என்பது ஆரோக்கியமான வாழ்வை தருவது போல, மகத்துவமான சமூகம் உருவாக மக்கள் தொகை கட்டுப்பாடு அவசியமாகும்‌. தற்போது 794 கோடி மக்கள் தொகை கொண்ட உலகில் நாளுக்கு நாள் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதிகரித்து வரும் மக்கள் தொகையினால், மக்கள் அடர்த்தி அதிகரிப்பதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையை தடுக்கும் வகையில் உலகில் குடும்ப கட்டுப்பாடு (கருத்தடை) என்ற வழக்கம் தொடங்கியது. பெண்களுக்கு டியூபக்டொமி எனப்படும் சிகிச்சை மூலம் பெண்களின் கருப்பையில் உள்ள பெல்லோபியன் என்ற விந்தணு குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இதன் மூலம் விந்தணுக்கள் அவர்களின் கருப்பையினுள் செல்வது தடுக்கப்படுகிறது. இதுவரை பெண்கள் மட்டுமே கருத்தடை சிகிச்சையை செய்து வருகின்றனர்.

    இதேபோல், ஆண்களுக்கும் வாசக்டாமி எனப்படும் சிகிச்சை முறை உள்ளது. ஆனால் இதை மேற்கொள்பவர்களுக்கு பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படும் என்ற வதந்தி பரவியது. இதனால், இந்த சிகிச்சையை எடுத்துகொள்ள அனைவரும் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையை ஊக்குவிக்கவும், அனைவரிடத்திலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதியை சர்வதேச ஆண்கள் கருத்தடை தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.

    இன்றைய சூழலில் ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதினால் ஆண்மை குறைவு, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்ற கருத்து நிலவுகிறது.‌ ஆனால் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை 20 நிமிடங்களில் முடிந்து விடக்கூடிய மிகச்சிறிய அறுவை சிகிச்சையே. இதனால் உடலில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிகிச்சைக்கு பின்னரும் அவர்கள் தாம்பத்திய வாழ்வில் முன்பு போலவே ஈடுபடலாம்.

    ஒருவேளை நாம் திரும்ப குழந்தைபேறு வேண்டும் என்று விரும்பினால் தலைகீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் குழந்தைபேறு பெறும் வசதியும் இதில் உள்ளது. ஆனால் பெண்களில் இது சாத்தியமற்றது.‌ எனவே பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையில் ஈடுபடுவதை விட ஆண்கள் மேற்கொள்வதே மிகச்சிறந்தது‌ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சிகிச்சை மேற்கொண்டவர்கள் 3 மாதத்திற்குள் தாம்பத்திய‌ வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஏற்கனவே விந்துக்குழாயில் இருக்கும் விந்தணுக்களின்‌ மூலம் குழந்தைப்பேறு உருவாகக்கூடும். எனவே இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டவர்கள் மருத்துவர்களிடம் சோதனை மேற்கொண்ட பின்னரே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.

    சர்வதேச ஆண்கள் கருத்தடை தினத்தில் இந்த சிகிச்சை குறித்து அறித்து கொண்டு, பாதுகாப்பான முறையில் கருத்தடை மேற்கொள்ளலாம்.

    Next Story
    ×