search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    22 தெருநாய்களை வலைவீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
    X

    மாநகராட்சி ஊழியர்கள் நாய்களை பிடித்த போது எடுத்த படம்.

    22 தெருநாய்களை வலைவீசி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

    • ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.
    • பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள அந்தோணிபுரம் ஓடைப்பகுதியில் சமீபகாலமாக தெரு நாய் கடித்துக் குதறியதில் 19 பேர் காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள், தெரு நாய்களை பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

    அதன் பேரில் மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் , அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 22 -க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர். பின்னர் அந்த நாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

    தெருக்களில் சுற்றி தெரியும் நாய்களை தொடர்ந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×