search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருவர் கைது"

    • காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.
    • தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    சென்னிமலை,

    சென்னிமலை அருகே ஈங்கூரில் இரும்பு உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சத்தியமூர்த்தி (47) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கிளை நிறுவனத்தில் இருந்து ரூ.23 லட்சம் பணத்தை காரில் எடுத்து சென்றார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் அவரை காருடன் கடத்தி சென்றனர். இதையடுத்து காருக்குள் அவரை கட்டி ப்போட்டு பணத்தை பறித்து சென்றனர்.

    இது குறித்து சென்னி மலை தனிப்படை போலீ சார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி, காமராஜர் ரோட்டை சேர்ந்த சுரேஷ் (27), என்பரை போலீசார் கைது செய்தார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்த வழக்கில் தொட ர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் குளத்துார், கண்ணங்குடி அருகே கள்ளர் தெரு மனோகர் (29), நவநீதன் (27), இளையராஜா (31), மற்றும் கோவை செட்டிபாளையம் காந்திஜி ரோட்டை சேர்ந்த அலெக்சாண்டர் (32) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடை த்தனர்.

    இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய புது க்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்வரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தினை இது வரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.23 லட்சம் பணத்துடன் சென்ற முக்கிய குற்ற வாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

    • 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது.
    • முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தோப்பிருப்பு துணை மின் நிலையத்தில் கடந்த 7-ந் தேதி 250 கிலோ எடையுள்ள அலுமினிய மின் காயில் காணாமல் போனது. காணாமல் போன அலுமினிய காயில் ஒயரை மின்துறை ஊழியர்கள் தேடிவந்தனர். அப்பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது தொடர்பாக தோப்பிருப்பு துணை மின் நிலைய இளநிலை மின் பொறியாளர் ரவி (வயது 56) பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக போலலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் குட்டியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் திருடியதாக தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் முருகன் அளித்த தகவலின்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.
    • அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசாரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சில சமூக விரோத கும்பல்கள் கஞ்சா பயிரிட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் நக்சல் தடுப்பு போலீசார் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூம்பாறை, கீழான வயல் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளத்துரை (வயது50) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    அப்போது அவர் சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. உடனே அவரை நக்சல் தடுப்பு போலீசார், கொடைக்கானல் போலீசாருடன் இணைந்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து சுமார் 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடைக்கா னல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    • கனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து, கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • எரியோடு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    வடமதுரை:

    எரியோடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகுமரேசன், ஏட்டு குமரேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது எரியோடு வடக்குதெருைவ சேர்ந்த தங்கவேல்(58) என்பவர் தனக்கு சொந்தமான குடோனில் 50 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    வீராம்பட்டினத்தில் மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வீராம்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 34). இவரது மனைவி அரியாங்குப்பம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வர்மா, பிரகாஷ், சுந்தர் ஆகிய 3 பேரும் அவரை கிண்டல் செய்தனர்.

    அவர் வீட்டுக்கு வந்து ஜெயராஜியிடம் கூறினார். அவர் வந்து என் மனைவியை ஏன் கிண்டல் செய்கிறாய்? என கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயராஜை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் வீராம்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் உதயசிங் (35). ஜிப்மர் ஊழியர். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் வந்த போது, 3 பேர் சாலையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை உதயசிங் ஓரமாக நில்லுங்கள் என கூறினார். எங்களை எப்படி ஓரமாக நிற்க சொல்லலாம்? என கூறி அவர்கள் உதய சிங்கை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உதயசிங் அரியாங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×