

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து, கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையன் என்பவரது மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.