திண்டுக்கல் அருகே 50 கிலோ குட்காவுடன் ஒருவர் கைது

புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.எரியோடு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

எரியோடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகுமரேசன், ஏட்டு குமரேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது எரியோடு வடக்குதெருைவ சேர்ந்த தங்கவேல்(58) என்பவர் தனக்கு சொந்தமான குடோனில் 50 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com