

வடமதுரை:
எரியோடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னகுமரேசன், ஏட்டு குமரேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது எரியோடு வடக்குதெருைவ சேர்ந்த தங்கவேல்(58) என்பவர் தனக்கு சொந்தமான குடோனில் 50 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து குட்காவையும் பறிமுதல் செய்தனர்.