search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "one arrest"

    திருச்சியில் மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளர் பணிக்காக பணம் கொடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ஏமாந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புத்தூர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருச்சி மின் வாரியத்தில், உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. அதற்கு பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம் என்று செந்தில்குமாரிடம், நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து தனது உறவினருக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்கும்படி, செந்தில்குமார் கடந்த 2017 -ம் ஆண்டு ரூ.12 லட்சத்தை நாகராஜனிடம் கொடுத்துள்ளார்.

    பணம் கொடுத்து வருடங்கள் கடந்த நிலையில், வேலை வாங்கி கொடுக்காததால், பணத்தை தந்துவிடுங்கள் என்று செந்தில்குமார் கேட்டுள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருகிறேன் என்று நாகராஜன் கூறியுள்ளார்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உதவி ஆணையர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை தேடி, விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில், நாகராஜன் ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை, தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, நாகராஜனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

    புதுவையில் மழைக்கு ஒதுங்கி நின்ற போது தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் புதுநகரை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 16-ந்தேதி மாலை புதுவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் நிகழ்ச்சி முடிந்து அண்ணா சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு ஒதுங்கி நின்றார்.

    அப்போது குடிபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களுக்குள்ளேயே தகராறு செய்து இடித்து தள்ளிக் கொண்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் ஜெயபிரசாத் மீது விழுந்தார். இதனை ஜெயபிரசாத் தட்டி கேட்டார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒன்று சேர்ந்து அங்கு கிடந்த கற்களை எடுத்து ஜெயபிரசாத்தை தாக்கி விட்டு தப்பினர்.

    இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி, போலீஸ் ஏட்டு ஜெய்கணேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கண்டக்டர் தோட்டத்தை சேர்ந்த கலையரசன் (23), கோவிந்தசாலையை சேர்ந்தவர்கள் சாமிக்கண்ணு (30), பிரான்சிஸ் ரெமோ (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவரை தாக்கிய கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த பூனை மணியை (30) தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உருளையன்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த பூனை மணியை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×