search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail sentence"

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ந்தேதி ஈதன் கிரம்ப்ளே என்ற 15 வயது மாணவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்த வழக்கில் தற்போது 17 வயதாகும் ஈதன் கிரம்ப்ளேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஈதனின் தந்தை ஜேம்ஸ் கிரம்ப்ளே, தாய் ஜெனிபர் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. மகனை சரியாக கவனிக்கவில்லை என்றும் அவர்களது அலட்சியத்தால் ஈதன் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    விசாரணையின்போது புதிதாக வாங்கிய துப்பாக்கியை வீட்டில் பத்திரப்படுத்தவில்லை என்றும், தங்கள் மகனின் மனநலம் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளைப் பற்றி அலட்சியமாகச் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    வீட்டில் பாதுகாப்பற்ற துப்பாக்கி இருந்ததற்கான ஆதாரமும் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் மாணவன் ஈதன் தனது வீட்டு பாடத்தின்போது ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா, காயமடைந்த நபரின் படங்களை வரைந்துள்ளார்.

    இதையும் பெற்றோர் கவனிக்க தவறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கில் ஜேம்ஸ் கிரம்ப்ளே, ஜெனிபருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தடுக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிட்டதாக நீதிபதி தெரிவித்தார். அமெரிக்காவில் முதல் முறையாக துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவனின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார்.
    • வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சாவக்காடு திருவத்திரை பகுதியைச் சேர்ந்தவர் மொய்து (வயது 70). இவர் 14 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

    நீண்ட நாட்களாக இந்த தொல்லையில் இருந்த சிறுமி, ஒரு நாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் சாவக்காடு போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து மொய்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை சாவக்காடு முதலாவது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் மொய்துவுக்கு ஆயுள் தண்டனையும், 64 ஆண்டுகள் கூடுதல் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
    • ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    விழுப்புரம்:

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

    அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
    • சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.

    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.

    அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

    மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

    சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.

    • குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார்.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    திருவனந்தபுரம்:

    மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 28). இவர், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டில் கட்டுமான பணி நடந்தபோது, அங்கு ஒப்பந்ததாரராக இருந்து பணிபுரிந்த ராஜீவ், சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அதில், குற்றம் சாட்டப்பட்ட ஒப்பந்ததாரர் ராஜீவ்வுக்கு 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், குழந்தை மீது கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு 25 ஆண்டுகள், ஒரு குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகள், குழந்தையுடன் வெளிப்படையான பாலுறவு மற்றும் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு 3 ஆண்டுகள், கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்கு 2 ஆண்டுகள் என மொத்தம் 61 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

    சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ராஜீவ்வுக்கு ரூ.2.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

    • டோஷகானா வழக்கில் அவருக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்
    • உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

    பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5 கோடியே 25 லட்சம் ($635000) மதிப்பிலான பரிசுப் பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க கருவூலத்திற்கு கணக்கில் காட்டாமல் விற்று விட்டதாக 2022-ம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    டோஷகானா வழக்கு என வழங்கப்படும் இந்த வழக்கில் அவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் தாக்கல் செய்தது.

    விசாரணை நீதிமன்றம், நீண்ட விசாரணைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில், இம்ரான் கான் குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் இம்ரான் கான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடையும் விதித்து, அவருக்கு அபராதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும் அளித்தது.

    இதனையடுத்து அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் எதிராக இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ஆமிர் ஃபாருக் மற்றும் தாரிக் மெகமூத் ஜகான்கிரி ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது.

    இன்று இந்த டிவிஷன் பெஞ்ச், இம்ரான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா சமூக வலைதளமான எக்ஸில் (டுவிட்டர்) தெரிவித்தார்.

    இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை. அதே போல் வரவிருக்கும் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா இல்லை அவரது தகுதி நீக்கம் தொடருமா என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜூ சவுலவன் (வயது 52). இவரது மனைவி அஞ்சு அசோக். கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்த இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அங்குள்ள கெட்டரிங் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சஜூ சவுலவன் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சஜூ சவுலவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

    • ரூ.2000 அபராதம் விதிப்பு
    • ஜே.எம்.நீதிமன்றம் தீர்ப்பு

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32) இவரது நண்பர் கோபிநாத் (34) ஆகிய 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு திருவலத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றனர்.

    அப்போது எதிரே திருவலம் நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபிநாத் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ரிஸ்வான் என்பவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை ஜே.எம்.நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் நேற்று மாஜிஸ்திரேட் நவீன் துரைபாபு, ரிஸ்வானுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கதன நகரத்தை சேர்ந்தவர் துளசிராமன் (வயது 53). இவர் திருத்தணி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து மினி பஸ் வாங்குவதற்காக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அதற்கு ரூ.30 ஆயிரத்துக்கும் குறையாமல் தகுதி (சால்வன்சி) சான்றிதழ் வாங்கி வரும்படி வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதால் துளசிராமன் பள்ளிப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    ஆனால் தகுதி சான்றிதழ் வழங்க அப்போதைய பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம் (62) லஞ்சமாக ரூ.15 ஆயிரம் கேட்டார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் துளசிராமன் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை துளசிராமன் லஞ்சமாக கொடுத்தார். அவரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கிய தாசில்தார் திலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி வேலரஸ் தீர்ப்பு கூறினார். அதில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் திலகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    • விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜே.எம்.கோர்ட்டு-2 மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.
    • இளங்கோ மொபட்டை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு டூம்லைட் மைதானம் அருகே உள்ள டிமாண்ட் வீதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 56). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி காலை தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த மொபட்டை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாணிக்கம்பாளையம் வில்லரசன்பட்டியை சேர்ந்த பூபாலன் என்கிற விஜய் (26) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மொபட்டை பறிமுதல் செய்தனர். வழக்கில் புலன் விசாரைணையை முடித்து இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 25 நாட்களுக்குள் விசாரணை முடிந்து விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜே.எம்.கோர்ட்டு-2 மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய தெற்கு போலீஸ் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், காவலர்கள் நாகராஜ் குட்டி, குருசாமி, அனித்ராஜ், மணிவண்ணன் ஆகியோருக்கு வெகுமதி அளித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    ×