search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 பேர் பலி"

    • பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நில அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    • கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கு அருகிலுள்ளது கண்ணனூா். இந்த ஊரானது 14-ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசா்களின் தலைநகரமாக விளங்கியது.

    சோழப் பேரரசா் மூன்றாம் ராஜராஜருக்கு உதவவுதற்காக, மைசூா் பகுதியிலிருந்து சோழநாட்டுக்கு வந்த ஹொய்சள அரசா்கள், 90 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனா்.

    இக்காலக் கட்டத்தில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என எழுச்சியுடன் இருந்தது. இக்கோயிலில் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அர. அகிலா ஆகியோா் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அளவுகோல்களையும், 14-18-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்தனா்.

    இவற்றை மேலும் ஆய்வு செய்ததில், இக்கோயில் மூன்றாம் ராஜராஜா் காலத்தில் கட்டப்பட்டிருப்பதும், பொதுக்காலம் 1221-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் இந்த வளாகத்தில் பொறிக்கப்பட்ட அந்த மன்னிரின் 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்பதும் தெரியவந்துள்ளது. இக் கோயில் இறைவனை கழுகிறை நாயனாா் என்றழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆய்வில் கண்டறியப்பட்ட 3 அளவுகோல்களுள் 87 செ.மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கு இடையில் விமானத்தில் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது கட்டுமானத்துக்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோல் ஆகும்.

    முக்தீசுவரத்துக்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டதில், கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நல்லதம்பி மகன் காவுடை நயினான் என பொறிக்கப்பட்டிருப்பது, கோயில் திருப்பணியில் பங்கேற்றவரின் பெயராக இருக்கக் கூடும் என்று ஆரராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
    • 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .

    இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    ஆந்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சாலை விபத்து பற்றி கேள்விப்பட்ட முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் 14 பேர் பலியானதை பற்றி அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திராவின் கர்னூலில் நடைபெற்ற சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
    ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    அமராவதி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள வேல்துருத்தி என்ற பகுதியில் தனியார் பேருந்தும் ஜீப்பும் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மீட்புப்பணிகளின் போது அப்பகுதி மக்கள் திரண்டு உதவு செய்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரி கொலை வழக்கில் கைதான அபூர்வா திவாரிக்கு டெல்லி சாகேத் நீதிமன்றம் 2 நாள் போலீஸ் காவல் பிறப்பித்துள்ளது. #RohitShekharTiwari #ApoorvaTiwari
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதும், அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தின் மனைவி அபூர்வா, உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 

    ரோகித்தின் தாயார் உஜ்வாலா அளித்த தகவலின் பேரில் மருமகள் அபூர்வாவிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் உறுதியானது. விசாரணையின் முடிவில் அபூர்வாவை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே, டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி ஆஜர்படுத்தப்பட்டார். தொடர் விசாரணைக்காக அபூர்வா திவாரியை 2 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், போலீஸ் காவல் முடிந்து சாகேத் நீதிமன்றத்தில் அபூர்வா திவாரி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை விசாரிக்க இருப்பதால், அபூர்வா திவாரிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #RohitShekharTiwari #ApoorvaTiwari
    கென்யா நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பஸ் விபத்தில் குழந்தை, பெண்கள் உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். #KenyaBusAccident
    நைரோபி:

    கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டேரா பகுதியில் இருந்து நைரோபி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் மசாகோஸ் பகுதியில் வந்தபோது லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 11 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #KenyaBusAccident
    கோவை அருகே நடந்த ரூ.1 கோடி நகை கொள்ளை வழக்கில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு கடந்த 7-ந் தேதி காரில் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை நவக்கரை அருகே வழிமறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போது கொள்ளை கும்பல் பற்றிய முழு தகவல்கள்கள் தெரிய வந்தது.

    அதன்பேரில் திருச்சூரை சேர்ந்த ரெனூப்(வயது 34), கண்ணன்(38), எர்ணாகுளத்தை சேர்ந்த ஹபீப்(41), பத்தினம்திட்டாவை சேர்ந்த விபின் சங்கீத்(28) இடுக்கி ரின்சாத் சித்திக் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதில் ரெனூப் நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இவருக்கு கடையில் இருந்து நகைகள் வெளியே கொண்டு செல்லப்படும் அனைத்து தகவல்களும் தெரியும். வேலை பறிபோன ஆத்திரத்தில் அவர் தனது நண்பர் ஹபீப்பிடம் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார்.ஹபீப் தனது நண்பரான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ்(23) என்பவரின் உதவியை நாடினார்.

    அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாதிக் உசேன்(25), வேலூரை சேர்ந்த ரிஸ்வான் செரிப்(27), ஸ்ரீபெரும்புதூர் ராஜசேகரன் (33), சென்னை புளியந்தோப்பு அத்திக் பாஷா(25), பெங்களூரை சேர்ந்த மெகபூப்பாஷா (26), சென்னையை சேர்ந்த அப்துல் ரஹிம்(26) சையது ரஹிம், மற்றொரு பைரோஸ் மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைரோஸ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    கைதான பைரோசுக்கு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொள்ளையடித்த நகைகளில் பெரும்பகுதியை இவர் தனது அண்ணன் அகமது சலீம், தாய் சமா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளுடன் அகமது சலீம், சமா ஆகியோர் திருப்பதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய போது அங்குள்ள போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.

    தற்போது ஆந்திர சிறையில் இருக்கும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களிடம் இருந்து கொள்ளை நகைகளை மீட்கவும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    நகை கடை கொள்ளையர்களை பிடித்த டி.எஸ்.பி. வேல்முருகன், இன்ஸ்பெக்டர் தூய மணி தலைமையிலான தனிப்படையினரை ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டினார்கள். #tamilnews
    கஜா புயல் தாக்கத்தின் காரணமாக நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 94 நிவாரண முகாம்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #GajaCyclone
    நாகை:

    கஜா புயல் இன்று நள்ளிரவு பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கஜா புயல் தாக்கத்தின் காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூரில் 94 நிவாரண முகாம்களில், 14,455 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வேதாரண்யத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்களுக்கு தேவையான  உணவுப் பொருட்களை வழங்க உத்தரவிட்டார். முகாம்களில் இருப்பவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினத்தில் மட்டும், 10,692 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூரில் குடிசை பகுதியில் வசித்த மக்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். #GajaCyclone 
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Syria #USledstrikes
    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.



    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பினர்  தெரிவித்துள்ளனர். #Syria #USledstrikes 
    சந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் அரசு வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக14 ஆண்டுகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். #Veerappan
    கோவை:

    தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை கொல்ல தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

    அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

    அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும் படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

    முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    2004-ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து சண்முகப்பிரியாவுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகை , மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-


    வீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிபடையினருக்கு தெரிவித்தேன். அதனை அடிப்படையாக கொண்டே வீரப்பனும், அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.

    தற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார். ரூ.6 லட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

    இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார். #Veerappan
    14 வயதில் மாயமானவர், 10 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபராக பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் ஒட்டியம்பாக்கம் சாலையில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் நமத்தோடு கிராமம்.

    இவருக்கு குழந்தை இல்லாததால் தனது தம்பி விஸ்வநாதனின் மகனான சதாசிவம் (வயது 14) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு ராமச்சந்திரன் தத்தெடுத்து, சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார்.

    சதாசிவத்தை மேடவாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்தார். 13-8-2008 அன்று பள்ளிக்கு சென்ற சதாசிவம், அதன்பிறகு மாயமானார். அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் சதாசிவம் கிடைக்காததால், பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

    பள்ளி சென்ற சதாசிவத்துக்கு, தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் மறந்தது. இதனால் வழிதவறி நின்ற அவரை சிலர் மீட்டு வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் சேர்த்ததாக தெரிகிறது.

    2010-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள அந்த தனியார் இல்லத்தின் கிளைக்கு சென்ற சதாசிவம், அங்கு தனியார் சோப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தசாமி, தனக்கு குழந்தை இல்லாததால் சதா சிவத்தை வளர்ப்பதாக கூறி அவரை தன்னுடன் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார்.

    தற்போது சதாசிவத்துக்கு 24 வயது ஆகிறது. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.

    சதாசிவத்துக்கு, திருவொற்றியூர் காலடிபேட்டையை சேர்ந்த லோகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பரானார். அப்போது சதா சிவம், தனக்கு தலையில் அடிபட்டதால் பெற்றோர் பற்றி நினைவுக்கு வரவில்லை. அவர்களை கண்டுபிடிக்க உதவும்படி நண்பர் லோகேசிடம் கேட்டார்.

    இருவரும் வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கிருந்த சதாசிவத்தின் வங்கி கணக்கு புத்தகத்துக்கு கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதில் அவரது பள்ளி அடையாள அட்டை நகல் இருந்தது. அதில் அவரது தந்தை பெயர் ராமச்சந்திரன் எனவும், சித்தாலபாக்கம் எனவும் இருந்தது.

    இதையடுத்து இருவரும் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜிடம் நடந்த விவரங்களை கூறி, பெற்றோரை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டனர்.

    பரங்கிலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்தபோது, 2008-ம் ஆண்டு சதாசிவம் மாயமானதாக ராமச்சந்திரன் புகார் மனு அளித்து இருப்பது தெரிந்தது. அதில் இருந்த முகவரியை வைத்து சித்தாலபாக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர், 2008-ம் ஆண்டு மாயமானது தனது தம்பி விஸ்வநாதனின் மகன் சதாசிவம் என தெரிவித்தார். இதையடுத்து 14 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

    அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராமச்சந்திரன், இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள தனது தம்பி விஸ்வநாதனுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக விஸ்வநாதன், தனது மனைவி அன்னலட்சுமி மற்றும் குடும்பத்துடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தார். மாயமான தங்கள் மகன், 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களை தேடி வந்து இருப்பதை கண்டதும், அவரை கண்ணீருடன் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.

    பின்னர் பெற்றோருடன், சதாசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். தனது பெற்றோருடன் சேர உதவிய போலீசாருக்கும், நண்பர் லோகேசுக்கும் சதாசிவம் மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். 
    ×