search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US led coalition"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியாவில் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார். #ISISleader #Syriastrike #UScoalition
    டமாஸ்கஸ்:

    சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருநாட்டு எல்லைகளில் உள்ள மலைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வேட்டையாட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழியாகவும் வான்வழியாகவும் அதிரடியாக தாக்குதல் நடத்துகின்றன.

    அவ்வகையில், கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹேல்மன்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், சிரியா நாட்டில் நேற்று அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அல் உமரய்ன் என்பவர் கொல்லப்பட்டதாக கூட்டுப்படையின் செய்தி தொடர்பளர் சீன் ரியான் இன்று தெரிவித்துள்ளார்.

    இடதுபுறம்: அமெரிக்க வீரர் பீட்டர் கசிக்

    கூட்டுப்படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவந்த அபு அல் உமரய்ன், அமெரிக்க ராணுவ வீரர் பீட்டர் கசிக் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், ரஷியா படைகளின் துணையுடன்  பல பகுதிகளில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் போராளிகள் குழுவை சேர்ந்த சுமார் 270 பேர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் இன்று அறிவித்துள்ளது. #ISISleader #Syriastrike #UScoalition



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Syria #USledstrikes
    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.



    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பினர்  தெரிவித்துள்ளனர். #Syria #USledstrikes 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிரியா நாட்டின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையோரம் அமெரிக்க படைகள் ஐ.எஸ் பயங்கவாதிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Syria
    பெய்ரூட்:

    சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலர் பதுங்கி இருக்கின்றனர். இவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போரை கண்காணித்து வரும் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

    ஆனால் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்கப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. #Syria
    ×