search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore woman"

    சந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல உதவிய பெண் அரசு வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக14 ஆண்டுகள் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். #Veerappan
    கோவை:

    தமிழகம், கர்நாடக வனப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை கொல்ல தமிழக, கர்நாடக அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டன.

    அதன்ஒரு பகுதியாக, வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறையினர் தங்க வைத்தனர்.

    அப்போது அதிரடிப்படை தலைவராக இருந்த செந்தாமரைக் கண்ணன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகி வீரப்பன் குறித்த தகவல்களை பெறும் படி கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகபிரியா என்ற பெண்ணை நியமித்தார்.

    முத்துலட்சுமியுடன் நெருங்கி பழகிய சண்முகப்பிரியா, வீரப்பன் தொடர்பான தகவல்களை பெற்று அதிரடி படையினருக்கு தெரிவித்தார். இதை அடிப்படையாக கொண்டு வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    2004-ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து சண்முகப்பிரியாவுக்கு மத்திய அரசின் சார்பில் பரிசுத் தொகை , மாநில அரசின் சார்பில் தனியாக நிதி உதவியும், வீட்டுமனையும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகபிரியாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலம், பரிசுத்தொகை போன்றவை இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து சண்முகப்பிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-


    வீரப்பன் நடமாட்டம் குறித்தும் அவரது கண் பார்வை குறைந்து இருப்பது குறித்த தகவல்களை அதிரடிபடையினருக்கு தெரிவித்தேன். அதனை அடிப்படையாக கொண்டே வீரப்பனும், அவரது கூட்டாளியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வெகுமதி மற்றும் சலுகைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதிரடிப்படையினருக்கு பதவி உயர்வு, பரிசுத்தொகை கொடுத்து விட்டனர். ஆனால் 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் எனக்கு இதுவரை பரிசு தொகை கிடைக்கவில்லை.

    தற்போது எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மத்திய,மாநில அரசுகள் வெகுமதியும் சலுகைகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சினிமா டைரக்டர் ராம்கோபால் வர்மா ‘கில்லிங் வீரப்பன்’ என்ற பெயரில் படம் எடுப்பது தொடர்பாக என்னுடன் ஒப்பந்தம் செய்தார். ரூ.6 லட்சம் ஒப்பந்தம் போட்ட நிலையில் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகையை வழங்கவில்லை.

    இது தொடர்பாக ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தில் முறையிட்டும் இதுவரை எனக்கு நியாயம் கிடைக்கவில்லை

    இவ்வாறு அவர் கூறினார். #Veerappan
    கோவையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்க பேஸ்புக் மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சோமனூரை சேர்ந்த தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்த 38 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு கோவை சோமனூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் நட்பு ரீதியாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பெண் சென்னையில் இருந்து வடவள்ளி வந்து விட்டார். அதன் பின்னரும் சோமனூரை சேர்ந்தவர் நட்புடன் பேசி வந்தார். இதனால் அவரது பேஸ்புக்கிற்கு வடவள்ளியை சேர்ந்த பெண் தனது மகளுடன் இருக்கும் படத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவர் உன்னை விட உனது மகள் அழகாக இருக்கிறார் என கூறி அவரது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு விடுவேன். உனது மகள் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வடவள்ளி பெண் தனது பேஸ்புக்கில் சோமனூரை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததால் அப்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்தும் படி வடவள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் சோமனூரை சேர்ந்தவர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்ததல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள வடவள்ளி பெண் சென்னையில் வேலை பார்த்த போது இது போல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    ×