என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக்"
- தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர்.
- தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர்.
கோவில்பட்டி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பிரசாரத்தை தூத்துக்குடியில் மேற்கொண்டுள்ளார்.
இன்று கோவில்பட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். காலையில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ பேரவை போதகர்களை சந்தித்தார். பின்னர் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதனைத்தொடர்ந்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அப்போது அச்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க பல்வேறு உதவிகளை வழங்க வேண்டும். கோவில்பட்டியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதே போல் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் தமிழக பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவுகளில் கடலை மிட்டாயை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சிறு, குறு தொழில்கள் அதிகமாக செயல்பட்டால் தான் அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியிலும், நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்தியாவில் சிறு, குறு தொழில்களில் தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. எப்போதெல்லாம் இந்த தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த தொழிலுக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருந்தது.
இதனை குறைக்க சிறு, குறு தொழில் துறையினர் எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று 12 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க நடவடிக்கை செய்தோம். தமிழகத்தில் முன்பு தீக்குச்சி இறக்குமதிக்கு 5 சதவீதம் மாநில அரசு வரி இருந்தது. இதனை ரத்து செய்ய கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 5 சதவீத வரியையும் ரத்து செய்தார்.
தற்போது தீப்பெட்டி தொழிலுக்கு நெருக்கடியான சூழல் உள்ளதாக கூறுகின்றனர். இந்த தொழிலை காக்க பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த அரசு அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசிடம் இதுகுறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்கள். அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசிடம் பேசி பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கடலை மிட்டாய் என்றாலே கோவில்பட்டி தான் என்கிற அளவுக்கு இங்குள்ள கடலை மிட்டாய்கள் தரமானது என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். மற்ற பகுதிகளில் கோவில்பட்டி கடலை மிட்டாய் என போலியாக லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு கோவில்பட்டியில் உள்ள கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் லேபிள் தயாரித்து சோதனை முறையில் அதனை நடைமுறைபடுத்தலாம்.
நாடு செழித்தால் தான் உற்பத்தி பெருகும். தமிழ்நாட்டில் 70 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். இதற்காகத்தான் அ.தி.மு.க. ஆட்சியில் நீர்மேலாண்மை திட்டம் கொண்டு வரப்பட்டது. தி.மு.க. ஆட்சி அதனை கிடப்பில் போட்டு விட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தாமிரபரணி-வைப்பாறு திட்டம் நிறைவேற்றப்படும்.
இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவு விளைவிக்கப்படுவதாக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகத்தில் 3 எத்தனால் தொழிற்சாலைகள் தொடங்க திட்டமிடப்பட்டு 2 தொழிற்சாலைகள் செயல்பட தொடங்கி உள்ளது. இதற்கு 40 டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதற்கு வருங்காலத்தில் தினமும் எத்தனால் தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் டன் மக்காச்சோளம் தேவைப்படும். இதனால் அதன் விற்பனையும் அதிகரிக்கும்.
அதேபோல் பருத்தியும் அதே அளவு விளைவிக்கப்படுகிறது. தீப்பெட்டி, கடலை மிட்டாய் தொழில் சிறக்க அ.தி.மு.க. துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், தளவாய்சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கோவை:
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா? என்பதை அறிய 3 மாதங்களுக்கு முன்பு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை தொடங்கினர்.
குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் சிவசெல்வக்குமார் கூறியதாவது:-
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் கெடுவது மட்டுமின்றி, மனிதர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய முடிவு செய்தோம்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது ஆராய்ச்சியை தொடங்கினோம். இதற்காக நாங்கள் குழந்தைகளிடம் இருந்து ரத்தம் எடுக்காமல், வீணாகக்கூடிய நஞ்சு கொடிகளை சேகரித்து அதில் உள்ள ரத்தம் மூலமாக எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஆராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
எங்களது ஆரம்ப கட்ட பரிசோதனையில் நாங்கள் நஞ்சுக்கொடிகளில் உள்ள ரத்தத்தை எல்.இ.எம்.எஸ் என்ற கருவி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது அந்த ஆய்வில், சிசுக்களின் நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.
எனவே கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த வேண்டாம்.
இதேபோன்று விவசாயிகளின் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதா? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டோம்.
இதற்காக கோவை வேடப்பட்டி பகுதியில் 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா? என ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை, ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.
மேலும் பூச்சிக்கொல்லி தாக்கம் காரணமாக, அவர்களது ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தோம்.
பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.
நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
- பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார்.
- புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது.
கேரள மாநிலம், தொடுபுழா அருகே உள்ள மூலமட்டம் பகுதியை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேனாக்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து இல்லாத புதிய வகை பேனாவை கண்டுபிடிக்க அமலா தீர்மானித்தார். தொடர்ந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பயனாக பிளாஸ்டிக் இல்லாத புதிய பேனாவை அவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவுக்கு அரசின் தகுதி சான்றிதழ் நேற்று கிடைத்தது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கு அரசு ரூ.2 லட்சம் பரிசு வழங்கியது. ரூ.15, ரூ.20 ஆகிய விலைகளில் 2 வகையான பேனாக்களை அமலா உருவாக்கியுள்ளார். விரைவில் இந்த பேனாக்கள் விற்பனைக்கு வர உள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
- 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
- தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.
முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.
பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.
மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.
- ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் இன்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் கடையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரி கள் பறிமுதல் செய்த னர். இதுபோல மற்றொரு கடையில் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கடைகளிலும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபோல அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
- ராவுத்தர் கோவில் மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை பணி.
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் ஆனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது
இதில் பாதிரங்கோட்டை தெற்கு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கருப்பட்டி தெருவில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில், மற்றும் ஆண்டாாங்கொள்ளையில் உள்ள ராவுத்தர் கோவில், மற்றும் பள்ளி வளாக தூய்மை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர் மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொண்டனர்6வது நாள் நிகழ்ச்சி யாக மரக்கன்றுநடுவிழா நடைபெற்று மரக்கன்று களை தொடர்ந்து பராமரிப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர், செல்லத்துரை, தலைமை தாங்கினார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுதாகர், வரவேற்று பேசினார், மேலும் சிறப்பு விருந்தினராக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாரதிதாசன் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார், இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவன், அகத்தீஸ்வரன் நன்றி கூறினார்.
- அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
- பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு
கன்னியாகுமரி:
தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும்.
- கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில், திருவட்டார் வருவாய் வட்டம், குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட முதலாறு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர்அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி யான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
நாம் குடியிருக்கும் வீடு கள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை பேணி காத்திடும் வகையில், ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் உறிஞ்சுக்குழி அமைத்திட அனைவரும் முன்வர வேண்டும். இந்த உறிஞ்சுக்குழாய் அமைப்ப தற்கு ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான செலவினம் ஆகும்.
இந்த உறிஞ்சுக்குழாய் கிணறினை அமைப்பதனால் நம் வீட்டில் பயன்படுத்தும் கழிவுநீரானது குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க முடிவதோடு, அனைத்து நீர்நிலைகளிலும் ஆகாயத்தாமரை உட்பட தேவையற்ற கழிவு பொருட்கள் பெருகுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.
கன்னியாகுமரி மாவட் டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் முயற்சியிலும், குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் புழக்கத்தில் இல்லாத காலக்கட்டங்களில் பனை ஓலைகளால் உரு வாக்கப்பட்ட கூடை கள், தாமரை இலை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தினோம் அப்பொருட்களை தற்போதும் பயன்படுத்திட பொதுமக்களாகிய நீங்கள் முன்வர வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் அனைவரும் முன்வரும்போது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலு மாக அகற்றிட முடியும்.
இன்றைய சூழலில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுவதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கப்படுகிறது. போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக காவல்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ லர்கள் வாயிலாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
6-ஆம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் உங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கை களை முற்றிலுமாக கண்காணிப்பதோடு, அவர்க ளிடையே அதிகளவில் கலந்துரையாட முன்வர வேண்டும். அவ்வாறு உங்கள் குழந்தைகளிடையே பேசும்போது அவர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, வாழ்வில் உயர் நிலையை எட்ட முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கௌசிக், மாவட்ட ஊராட்சித்தலைவர் மெர்லியன்ட் தாஸ், தனித்துணை ஆட்சியர் திருப்பதி, இணை இயக்குநர் (வேளாண்மை) ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷூலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமாரி, வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜித் ஜெபசிங்குமார், ஆதிதிராவிடர்துறை தனி வட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
- தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மீனம்பாக்கம் :
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை, உணவகம், பழக்கடை, காய்கறி மற்றும் பூக்கடைகளில், பிள்ளா நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடைகளில் விற்பனை, பயன்பாட்டிற்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட 26 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1200 அபராதம் விதித்த னர். கடையின் உரிமையா ளர்கள், தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அல்லது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த ஆய்வின்போது துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அலுவலக பணியா ளர்கள் உடனிருந்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்று வது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி னார்.மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மாவட்டத்திற்கே உரித்தான இயற்கை வளத்தையும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் பேணி காக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில பொது நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இருந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு தடவை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனை வரும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் கடைகளுக்கு செல்லும்போது துணி பைகள், கூடைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்த வேண்டும்.
மேலும், உங்கள் வீடுகளின் அருகாமையிலோ அல்லது கடைகளிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி னால் துறைசார்ந்த அலுவல ர்களிடம் தகவல் தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் எதிர் காலத்தில் அனைவருக்கும் பிரச்சினையாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தை நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட அளவிலான சிறப்பு பணிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகி றது.
இவ்வாறு அவர் பேசி னார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி (தேசிய நெடுஞ்சாலை), தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அலு வலர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்






