என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார் நாகேந்திரன்"

    • டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
    • யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கியுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார்.

    இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்ற நயினார் நாகேந்திரன் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.

    யாத்திரையின்போது மக்களிடம் இருந்துபெறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை நிர்மலா சீதாராமனிடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார்.

    யாத்திரையின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கியதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசிய நிலையில் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    டெல்லிக்கு செல்லும் நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அஞ்சலை தலை வெளியீட்டு விழாவிலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்கிறார். 

    • பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.
    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார்.

    வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் அமித்ஷா கூட்டணி விரிவாக்கம், தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தமிழகம் வரும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூற வாய்ப்பு உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
    • அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

     

    மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

     

    அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

    நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

     

    முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை.
    • முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.

    மதுரை தொண்டி சாலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில், ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை  மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து உத்தங்குடியில் நடைபெற்ற அரசு நநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஒரு லட்சத்து 211 பயனாளிகளுக்கு 174 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

    மேலும், 3 ஆயிரத்து 65 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விழாவில் பேசிய அவர், அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பழகும் மண்ணில் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபமே ஒளிரும் என தெரிவித்தார். 

    இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,

    "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சரை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நான் அவரை பலகோணங்களில் பார்த்துள்ளேன். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை. அவர்கள் வேண்டுமானால் அங்காளி, பங்காளியாக இருக்கலாம்.

    நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகத்தான் பழகுகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தீர்ப்புக்கு பின் 144 தடை உத்தரவு என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.   

    தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய பெருமக்களுக்கும் வருத்தம் இல்லை. இதற்கு எதிராக வழக்குகளும் இல்லை. தீபாவளிக்கு பிறகு பெரும்பான்மையான மக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் மக்களை சந்தோஷப்படுத்துவதை விட்டுவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில்கொண்டு அங்காளி, பங்காளி என்ற வார்த்தையை வாக்குவங்கிக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்தார்.

    • நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது.
    • சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சொல்வதற்கு யு.ஜி.சி.க்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி. வழங்க முடியும். அதனை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. மாநிலத்தால் இயங்கும் பல்கலைக்கழகத்தின் முழு உரிமை.

    உச்சநீதிமன்றம் யு.ஜி.சி. உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி. ஆனால் அதனை விட்டு மீதி பணிகளை யு.ஜி.சி. செய்கிறது. மத்திய அரசின் ஏவலர்களாக சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி.யும் வந்து விட்டது.

    பா.ஜ.க.வின் மாநில தலைவரும், சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை நேற்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காட்டி உள்ளார். அதனை நயினார் நாகேந்திரன் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.

    மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரெயில் தேவை. அதை சொல்வதை விட்டுவிட்டு நயினார் நாகேந்திரன் மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் என்ன நியாயம் உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும்.

    அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைப்பதால் அமைதியாக இருக்கும் தமிழகத்தை, கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது.

    சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தி வரப்படுகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பெரியார் அண்ணா, கலைஞர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் என வழி வழியாக ஆட்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்றார். 

    • சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.
    • பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது.

    மண்ணடி:

    திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கருத்து கூறுகையில்,

    வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த செயல் நடைபெறலாம், தமிழ்நாட்டில் நடக்காது.

    சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது.

    சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது.

    பா.ஜ.க.விடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது என்றார். 

    • அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
    • சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா?

    தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி கன

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்," திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?

    கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?

    கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள்.
    • எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும்.

    சென்னை:

    அம்பேத்கர் நினைவு நாளையொட்டி துறைமுகம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி போல் ஆக்கத் துடிப்பதாக கூறுகிறார்கள். அயோத்தி என்ன இந்தியாவில்தானே இருக்கிறது. இங்கிலாந்திலா இருக்கிறது. அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி என்னவாக இருந்தாலும் சரி, ராமர் போல் ஆட்சி வர வேண்டும்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணுக்கு பக்கத்தில் தர்கா இருப்பது ஊருக்கே தெரியும். அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கு மட்டும்தான் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதற்கும் தர்கா தரப்பில் இருந்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    அப்படி இருக்கும்போது மதக்கலவரம் எப்படி வரும்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் என்ன பாதகம் ஏற்படுகிறது. சனாதன தர்மத்தை அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சபதம் போட்டார். அதற்கான ஆரம்பகட்ட வேலையாகத்தான் இதை பார்க்கிறோம்.

    அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் பற்றி 2021-ம் ஆண்டு முதல் என்றாவது பட்ஜெட்டில் அறிவித்தது உண்டா?

    மத்திய அரசு அறிக்கை கேட்ட பிறகுதான், அறிக்கை தயார் செய்தார்கள். அதுவும் முறையாக இல்லை. ரெயில் பயணத்திற்கும், பஸ் பயணத்திற்கும் 2 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால் மெட்ரோ ரெயில் வேண்டாம் என்பதாகத்தானே அர்த்தம்.

    ஒரு நிலையம் கட்ட குறைந்தது 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் 10 மீட்டர் அளவுக்கு 3 நிலையங்கள் கட்டுவதற்கு இடம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த குறைகளைத்தான் நிவர்த்தி செய்ய மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் தி.மு.க. செய்யும் வளர்ச்சி அரசியலா?

    தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இது வளர்ச்சியை கொடுக்காதா? நாங்கள் வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தி.மு.க. என்ன அரசியல் செய்கிறது என்பதை மக்கள் உணருவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது.

    எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தி.மு.க. கூட்டணிக்குள்தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரசுக்கு அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்களா? விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள்? பேச்சுவார்த்தை தொடங்கட்டும், அப்போது இந்த குழப்பம் வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
    • திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.

    * தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.

    * திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    * சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    • அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றவர்.
    • ஜெயலலிதா மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    சென்னை:

    ஜெயலலிதா நினைவு நாளையொட்டி தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அரசியலில் இரும்புப் பெண்மணியாக இருந்து, அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்று, மக்கள் இதயங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றிருக்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளில் அன்னாரை நினைவு கூர்கிறேன்.

    பெண்கள் முன்னேற்றம், தமிழக நலன், ஒன்றுபட்ட இந்தியா என்று பல வகைகளில் அவர் மேற்கொண்ட உறுதிமிக்க அரசியல் பயணம் என்றென்றும் அவர் புகழைப் பறைசாற்றும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×