என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    • மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழாவில் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டார்.
    • சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார்.

    மத்தியப் பிரதேச விளையாட்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. 

    இந்த விழாவில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அப்போது அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேட்டிங் செய்ய ஜடேஜா அவருக்கு பந்துவீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • ஜடேஜா முதல் போட்டியில் 44 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
    • 2-வது போட்டியில் 56 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஜடேஜா இடம் பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் முதல் இரண்டு போட்டிகள் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த நிலையில் ஜடேஜாவின் ஃபார்ம் கவலை அளிக்கவில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.

    இது குறித்து முகமது சிராஜ் கூறியதாவது:-

    ஜடேஜா ஃபார்ம் குறித்து இந்திய அணியில் எந்த ஒரு கவலையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு விக்கெட் வீழ்த்துவதுதான் விசயம். அவர் ஒரு விக்கெட் வீழ்த்திவிட்டால், பின்னர் அவரை வேறொரு வீரராக பார்ப்பீர்கள்.

    இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்தார்.

    ஜடேஜா சமீப காலமாக 2900 ரன்கள் விட்டுக்கொடுத்து 32 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு நாள் போட்டியில் 209 போட்டிகளில் 232 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    • இந்தியாவுக்கு 549 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்தது.
    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது.

    கவுகாத்தி:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனையடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் அடித்திருந்தது. தென் ஆப்பிரிக்கா அணி மொத்தம் 314 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    இந்த சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 549 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுதர்சன் 2 ரன்களுடனும், குல்தீப் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    இந்த இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. அனில் கும்ப்ளே - 84 விக்கெட்டுகள்

    2. ஜவகல் ஸ்ரீநாத் - 64 விக்கெட்டுகள்

    3. ஹர்பஜன் சிங் - 60 விக்கெட்டுகள்

    4. அஸ்வின் - 57 விக்கெட்டுகள்

    5. ஜடேஜா - 52 விக்கெட்டுகள் 

    • சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது
    • அதற்கு பதிலாக ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு சிஎஸ்கே கொடுத்தது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் வழங்கி விட்டன.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக இத்தனை வருடங்கள் விளையாடிய ஜடேஜவை சிஎஸ்கே அணி விட்டுக்கொடுப்பதா என ரசிகர்கள் கொந்தளித்து வந்தனர். மேலும் கடைசியாக ஜடேஜா ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சோக பாடல் பாடி வந்தனர்.

    இதனால் ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு சென்றது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் விளக்கமளித்தது. அதில் இரு நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியே இந்த டிரேட் முறை நடந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் தன்னை ராஜஸ்தான் அணியில் எடுத்துக்கொள்ளுமாறு ஜடேஜா கேட்டுக் கொண்டதாக ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது சென்னை ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    எதனால் இந்த முடிவு இருக்கலாம் என்பது குறித்து ரசிகர்கள் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தோனி இந்த சீசனுடம் வெளியேறுவதால் இந்த முடிவை எடுத்திருக்காலம் என ஒரு சிலரும், என்னதான் சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தாலும் நமக்கான மதிப்பு இங்கு கிடைக்கவில்லை அதனால் தான் சென்றிருக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது.
    • 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட வேண்டும்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா, சாம் கர்ரனை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
    • சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.

    அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் கேப்டன் பதவியை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தான் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை ஜடேஜா தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
    • சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதால் இந்த முறை அணியை வலுப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருகிறது.

    அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது. சிஎஸ்கே அணியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரவீந்திர ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் திறமையான வீரர். அவர் பல ஆண்டுகளாக அணிக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' அணியில் இடம் பெற வேண்டும்.

    என கூறினார்.

    ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது.

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.

    இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.

    இந்நிலையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கேவுக்கு கொடுத்து, ஜடேஜா, சாம் கரணை ராஜஸ்தான் ராயஸ் அணி பெறுவதற்கான வர்த்தகத்திற்கு இரு அணிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த தொடர்பான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார்.
    • அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை பரிமாற்றம் முறையில் எடுக்க சென்னை சூப்பா கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்கு ஈடாக ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டுள்ளதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்சின் முக்கியமான வீரர்களில் ஒருவரான ஜடேஜா 2012-ம் ஆண்டு முதல் அந்த அணிக்காக ஆடுகிறார். கடந்த சீசனில் ரூ.18 ேகாடிக்கு தக்கவைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் அணியின் நலனுக்காக ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தோனி துணிந்து விடுவார் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக முகமது கைப் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கிய 2008-ம் ஆண்டில் இருந்தே தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகிறார்கள். இதில் தோனி சென்னை அணியை விட்டு ஒரு போதும் வெளியேறியதில்லை. சாம்சன், ஜடேஜா வர்த்தக பரிமாற்றம் வெற்றிகரமாக நடந்தால் இதுவே தோனியின் கடைசி ஐ.பி.எல். சீசனாக இருக்கும். சாம்சன் சி.எஸ்.கே.-வில் இணைந்து தோனி மற்றும் அணி நிர்வாகத்துடனும் எளிதில் பழகி விட்டால் ஒரு வேளை அவரிடம் கேப்டன்ஷிப்பை ஒப்படைத்து விட்டு பாதியிலேயே தோனி விலக வாய்ப்புள்ளது.

    சி.எஸ்.கே. ஏற்கனவே ஜடேஜாவை கேப்டனாக்கி பார்த்தது. ஆனால் அது தனக்கு சவுகரியமாக இல்லை என கூறி பாதியிலேயே ஜடேஜா ஒதுங்கி விட்டார். இனி, நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணியை வழிநடத்தக்கூடிய ஒரு வீரரை கொண்டு வருவதையே தோனி விரும்புவார்.

    கடந்த முறை சி.எஸ்.கே. அணி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்த தடவை வலிமையாக மீண்டு வந்து மற்றொரு முறை சாம்பியன் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பதே அவரது மிகப்பெரிய லட்சியமாகும். தொோனிக்கு அணியின் நலன் தான் மிகவும் முக்கியம். எனவே அணியின் நலனுக்காக ஜடேஜாவை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை நிச்சயம் தோனி செய்வார்.

    என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே. அணிக்கு சரியான தேர்வாக இருப்பார். அவரால் 3, 4, 5 என எந்த பேட்டிங் வரிசைகளிலும் களம் இறங்கி, மிடில் ஓவர்களில் சிக்சர்கள் அடிக்க முடியும். தோனியை போல் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாகவும் செயல்பட முடியும். அது மட்டுமின்றி சாம்சன் தென்இந்தியாவை (கேரளா வீரர்) சேர்ந்தவர் என்பதால் அவருக்கும், சென்னை ரசிகர்களுக்குமான உறவு நன்றாக இருக்கும். அவர் சென்னை அணியின் அடுத்த அடையாளமாக மாறுவார். அதனால் தான் சாம்சனுக்காக சி.எஸ்.கே. இவ்வளவு தீவிரம் காட்டுகிறது. சாம்சன், சி.கே.எஸ்.வுடன் இணைவது உறுதி என்றால், தோனியுடன் அவர் பலமுறை பேசி இருப்பார். திரைமறைவு பேச்சுவார்த்தைகளும் நடந்திருக்கும்.

    இவ்வாறு கைப் கூறியுள்ளார்.

    • சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் ஜடேஜா, துபே, பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது.
    • அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூறியது.

    மும்பை:

    ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் பட்டியலை பிசிசிஐக்கு ஐபிஎல் அணிகள் இம்மாதம் இறுதிக்குள் வழங்க வேண்டும்.

    இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் ஏலத்திற்கு முன்பே தங்களது வீரர்களை வேறு அணிக்கு மாற்றிக் கொள்ள ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி முயற்சி செய்து வருகிறது. ஆனால் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றால் தங்களுக்கு ஜடேஜா, துபே, மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் பிரேவிஸ் ஆகியோரை கொடுக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி கூறியது. இதற்கு சிஎஸ்கே அணி ஒப்புக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அதற்கு பதிலாக ஜடேஜாவையும் சாம் கரணையும் கொடுப்பதாக சிஎஸ்கே கூற, அதற்கு ஜடேஜாவையும் பதிரனாவையும் தருமாறு ராஜஸ்தான் கூறியது. இதனையும் சிஎஸ்கே மறுத்துள்ளது.

    இதன் மூலம் சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது உறுதியாக உள்ளது. அவருடன் செல்லும் மற்றொரு வீரர் பத்திரனா, துபே ஆகியோரை கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. அதனால் ஜடேஜாவுடன் செல்லும் சிஎஸ்கே வீரர் யார் என்பது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

    மேலும் அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்த ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது வருத்தமாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் பெற்று கொடுத்த வெற்றி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். 

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற இருப்பது உறுதியானது.
    • சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர்

    கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரரான சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் - ஜடேஜாவை வர்த்தகம் செய்துகொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சஞ்சு சாம்சன் - ஜடேஜா இருவரும் ரூ.18 கோடி மதிப்பு கொண்ட வீரர்களாக உள்ளனர், ஆனால், நேரடி வர்த்தகத்திற்கு பதிலாக ஜடேஜாவுடன், டெவால்ட் ப்ரேவிஸையும் சேர்த்து ராஜஸ்தான் அணி கேட்பதால் அதனை ஏற்க சிஎஸ்கே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    • ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
    • உலக கோப்பை என்பது இன்னும் முடிக்கப்படாத வேலையாக உள்ளது.

    இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீ்ந்திர ஜடேஜா, 2027ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ஜடேஜா, டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார்.

    தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜடேஜாவுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்த நிலையில், 2027 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட விரும்புகிறேன் என ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜடேஜா கூறியதாவது:-

    இது என் கையில் இல்லை. என்றாலும் 2027 உலக கோப்பையில் விளையாட நான் விரும்புகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு என்னை தேர்வு செய்யாததற்கு அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் சில விசயங்களை கொண்டுள்ளனர்.

    அது தொடர்பாக என்னிடம் பேசினார். இது என்னை அணி அறிவிக்கப்பட்டு என்னுடைய பெயர் அதில் இடம் பெறவில் என்று ஆச்சர்யப்படவைக்க விரும்பவில்லை. கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் என்னிடம் பேசியது சிறந்த விசயம். அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்.

    உலகக் கோப்பையில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அது போட்டிக்கு முந்தைய போட்டிகளைப் பொறுத்தது. மேலும் நான் அவற்றில் சிறப்பாகச் செயல்பட்டால், அது நன்றாக இருக்கும். கடந்த முறை நாங்கள் இறுதி போட்டியில் வந்து தோல்வியடைந்தோம். எனவே உலக கோப்பை என்பது முடிக்கப்படாத வேலையாக இருக்கிறது.

    இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.

    அஸ்திரேலியா தொடரில் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் செல்லி விரும்பவில்லை என அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார். அக்சர் படேல் அணியில் உள்ளதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    ×