search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓம் பிர்லா"

    • ஓம் பிர்லாவின் இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
    • அஞ்சலி பிர்லா 2019-ம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார்.

    மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

    மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அஞ்சலி பிர்லாவிற்கு எதிரான பதிவுகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இந்த வழக்கில், எக்ஸ், கூகுள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

    • சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
    • இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி ஓம் பிர்லா தேர்வாகியுள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட ஓம் பிர்லாவுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்.

    மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த அஞ்சலி பிர்லா தனது தந்தையின் செல்வாக்கினால் தேர்வு எழுதாமலேயே ஐ.ஏ.எஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகளை அஞ்சலி பிர்லா மறுத்துள்ளார். தன் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று நோக்கத்தில் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில், தன் மீது அவதூறு பரப்பும் இத்தகைய சமூக வலைத்தள பதிவுகளை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பல எம்.பி.க்கள் பாரத் மா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.
    • ஓவைசி பதவி ஏற்றபின் ஜெய் பாலஸ்தீனம் என கோஷமிட்டார்.

    தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பின்போது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். உறுதி மொழி எடுத்த பின் ஜெய் ஹிந்த், ஜெய் அரசமைப்பு போன்று கோஷம் எழுப்பினர். திமுக எம்.பி.க்கள் பலர் கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்க, முக ஸ்டாலின் வாழ்க, உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர்.

    ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்று கடைசியில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டார். எம்.பி.க்கள் பலர் பாரத் மதா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.

    இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின்போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது. உறுதி மொழிக்கான படிவத்தின் முன்பாகவும், பின்பாகவும் எந்த வார்த்தைகளையும் சேர்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    • இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    • எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    பாராளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது இந்துக்களை தொடர்புபடுத்தி ராகுல்காந்தி பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டது. அதுபோல அக்னிவீர் திட்டம் பற்றி அவர் குறை கூறி இருக்கும் பகுதியும் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது தான் பேசியது சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் சபை குறிப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

    எனது உரையின் கணிசமான பகுதி சபை குறிப்பு நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    எனது கருத்துகளை பதிவுகளிலிருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அதில் தெரிவித்துள்ளார்.




     


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
    • துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சட்ட விதிகளின்படி பாராளுமன்ற மக்களவையை நடத்துவதற்கு சபாநாயகரும், துணை சபாநாயகரும் தேர்வு செய்யப்பட வேண்டும். சபா நாயகர் இல்லாத நேரத்தில் சபையை நடத்த வேண்டிய முழு பொறுப்பும் துணை சபாநாயகருக்கு உண்டு என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை ஆளும் கட்சியும், துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளும் பெறும் வகையில் ஒருமித்த கருத்து இதுவரை மரபுபோல இருந்து வந்தது.

    ஆனால் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மத்தியில் பா.ஜ.க. தனிப்பெரும் பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளால் கேட்க இயலவில்லை.

    பா.ஜ.க.வும் துணை சபாநாயகர் பதவிக்கு யாரையும் தேர்வு செய்யவில்லை. அதற்கு பதில் சபையை நடத்துவதற்கு எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில் துணை சபாநாயகர் பதவியை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்று தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாத் எம்.பி.யை களம் இறக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பிரசாத் எம்.பி. அயோத்தி ராமர் கோவில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கிறார். தலித் இனத்தை சேர்ந்தவரான இவரை துணை சபாநாயகர் தேர்வுக்கு முன்நிறுத்துவதன் மூலம் பா.ஜ.க.வுக்கு மிக கடுமையான சவாலை ஏற்படுத்த முடியும் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை பற்றி பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஆலோசனை நடத்தினார்கள். துணை சபாநாயகர் பதவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுக்கும் என்று முதலில் தகவல் வெளியானது.

    பிறகு துணை சபாநாயகர் பதவியையும் பா.ஜ.க.வே வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது. துணை சபாநாயகர் மூலம் முக்கிய முடிவுகளை எட்ட முடியும் என்பதால் பா.ஜ.க. தலைவர்கள் மிக தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் பதவியை கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பாமல் விட்டதுபோல இந்த தடவையும் கைவிட்டு விட பா.ஜ.க. தீர்மானித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சபாநாயகர் ஓம்பிர்லா பாராளுமன்ற மக்களவையை வழிநடத்த 10 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழுவை அமைத்து அறிவித்துள்ளார்.

    அந்த எம்.பி.க்கள் குழுவில் ஜெதாம்பிகை பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலிப்சைக்கியா (4 பேரும் பா.ஜ.க.), குமாரி செல்ஜா (காங்கிரஸ்), ஆ.ராசா (தி.மு.க.), ககோலி கோஸ் (திரிணாமுல் காங்கி ரஸ்), கிருஷ்ணபிரசாத் (தெலுங்குதேசம்), அவதேஸ் பிரசாத் (சமாஜ்வாடி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    என்றாலும் துணை சபா நாயகர் பதவி தொடர்பாக விரைவில் தெளிவான முடிவு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள்.
    • மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்- ராகுல் காந்தி.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது நீட், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

    அப்போது சபாநாயகரையும் விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் பிரதமர் மோடியின் முன் தலை வணங்கியதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    நீங்கள்தான் (சபாநாயகர்) மக்களவையின் இறுதி நீதிபதி. உங்களுடையதுதான் கடைசி வார்த்தை. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையை வரையறுக்கிறது. சபாநாயகர் இருக்கையில் இரண்டு பேர் அமர்ந்து இருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் மற்றும் ஓம் பிர்லா ஆகியோர் அமர்ந்துள்ளனர்.

    நான் சில விசயங்களை கவனித்தேன். நாங்கள் உங்களை கைக்கொடுத்து வரவேற்கும்போது, நீங்கள் என்னிடம் நேருக்கு நேர் பார்த்தபடி கைக்குலுக்கினீர்கள். மோடி உங்களுடன் கைக்குலுக்கியபோது நீங்கள் தலை வணங்கி அவருடன் கைக்குலுக்கினீர்கள்" என்றார்.

    அப்போது பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஆனால் ஓம் பிர்லா நமது பாரம்பரியம்படி மூத்தவர் என்பதால் தலை வணங்கினேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஓம் பிர்லா கூறுகையில் "பிரதமர் இந்த அவையின் (மக்களவை) தலைவர். நமது கலாச்சாரம், பாரம்பரியம் தன்னைவிட மூத்தவர்கள்களுக்கு தலைவணங்க வேண்டும் என சொல்கிறது. நான் அவற்றை கற்றுள்ளேன்.

    இந்த இருக்கையில் இருந்து என்னுடைய கலாச்சாரப்படி மூத்தவர்களுக்கு தலைவணங்குவது, தேவைப்பட்டால் காலை தொடுவது கூட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்றார்.

    அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "மக்களவையில் சபாநாயகரை விட பெரியவர் யாரும் கிடையாது, எல்லோரும் அவருக்கு தலை வணங்க வேண்டும். நான் உங்களுக்கு தலை வணங்குவேன்" என்றார்.

    • சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர்.
    • யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக மக்களவையில் பேசும்போது தன்னுடைய மைக்ரோபோன் ஆஃப் செய்யப்பட்டது எனக் கூறினார். எதிர்க்கட்சிகளும் சபாநாயகர்தான் மைக்கை ஆஃப் செய்ததாக விமர்சித்தினர்.

    இந்த நிலையில் இன்று மக்களவையில் ஓம் பிர்லா இது தொடர்பாக பேசினார். அப்போது மைக்கின் ரிமோட் கன்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று கூறினார். மேலும், எவ்வாறு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பான விவகாரம் என்றும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "சபாநாயகர் என்பவர் தீர்ப்பு வழங்கக் கூடியவர் அல்லது உத்தரவு பிறப்பிக்கக் கூடியவர். யாருடைய பெயர் அறிவிக்கப்படுகிறதோ, அவர்கள் எழுந்து பேசலாம். தலைவரின் அதாவது சபாநாயகரின் கட்டளைப்படி மைக் கையாளப்படுகிறது. சபாநாயகர் இருக்கையில் அமரும் நபரிடம் மைக்ரோபோனை ஆஃப் செய்யக்கூடிய ரிமோட் கன்ட்ரோல் கிடையாது.

    இந்த விவகாரம் சபாநாயகர் இருக்கையின் கண்ணியம் தொடர்பானது. இந்த இருக்கையில் அமர்ந்தவர்கள் இதுபோன்ற ஆட்சேபனைகளை தெரிவிக்கக் கூடாது. கே. சுரேஷ் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துள்ளார். சபாநாயகர் இருக்கை மைக்கை கட்டுப்படுத்துகிறதா?.

    இவ்வாற பிர்லா தெரிவித்தார்.

    • கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர்.
    • தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா செய்யப்பட்டார். ராஜஸ்தானைச் சேர்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பல்ராம் ஜாகருக்கு பிறகு 39 வருடங்கள் கழித்து இரண்டு முறை மக்களவை சபாநாயகர் ஆகும் பெருமையை ஓம் பிர்லா பெற்றுள்ளார்.

     

    இந்நிலையில் மக்களவையில் சபாநாயகராக பதவியேற்றுள்ள பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லா கடந்த நாட்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். நீண்ட நெடிய அரசியல் பின்னணி கொண்ட ஓம் பிர்லா ராஜஸ்தானை சேர்நதவர் ஆவார். கடந்த 2003 முதல் 2013 வரை ராஜஸ்தான் மாநில கோட்டா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஓம் பிர்லா கடந்த 2014 தேர்தலில் பாஜக சார்பில் கோட்டா தொகுதியின் எம்.பியாக தேர்வாகி பாராளுமன்றம் சென்றார்.

    கடந்த 1991 ஆம் ஆண்டு அமிதா பிர்லாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது 2 மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் அஞ்சலி பிர்லா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து அகாடெமியில் பயிற்சி பெற்று ஐஏஎஸ் ஆன அஞ்சலி பிர்லா தற்போது ரயில்வே அமைச்சகத்தின்கீழ் பணியாற்றி வருகிறார்.

     

     தனது வெற்றி குறித்து தற்போது PTI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அஞ்சலி பிர்லா, தந்தை ஓம் பிர்லாவின் பொது சேவையே சிவில் சர்வீஸ் எழுத தனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களுக்காக தனது தந்தை செய்து வரும் சேவையைபோல தானும் இந்த சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் ஆவதற்கு முன்னதாக அஞ்சலி பிர்லா மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். மேலும்  தேர்வு எழுத்தமேலேயே அஞ்சலி பிர்லா ஐஏஎஸ் ஆனதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டப்பட்டது வருவது குறிப்பிடத்தக்கது.

     

     

    • ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன.

    தெலங்கானாவில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிவரும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். தனது பதியேற்பின்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடந்தி வரும் போரைக் கண்டிக்கும் வகையில் ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஒவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் அப்படி கூறக்கூடாது என்று எங்காவது விதி உள்ளதா காட்டுங்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் தற்போது பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருவதால் டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் ஒவைசி தங்கியுள்ள நிலையில் நேற்று [ஜூன் 28] இரவு அவரது இல்லத்தின் பெயர் பலகை உள்ள முன் புற சுவரின் மீது மர்ம நபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.

    வீட்டின் சுவர் மீது உள்ள கருப்பு மையை காவலர்கள் நீக்கும் காட்சிகளை படம்பிடித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இந்த சம்பவத்துக்கு ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மர்ம நபர்கள் எனது வீட்டின் மீது கருப்பு மையை ஊற்றி அத்துமீறியுள்ளனர். டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதல் குறித்து டெல்லி போலீசிடம் கேட்டபோது அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் குறிப்பிட்டு, இது உங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் நடக்கிறது என்றும், மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவைக் குறிப்பிட்டு எம்.பிக்களுக்களின் பாதுகாப்பு ஊறுதிப்படுத்தப்படுமா என்று எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், குண்டர்கள் எனது வீட்டை மீண்டும் மீண்டும் குறிவைக்கின்றனர். இது என்னை பயமுறுத்தாது, சாவர்க்கர் பாணியிலுள்ள இதுபோன்ற கோழைதனத்தை நிறுத்திவிட்டு என்னோடு நேருக்கு நேராக மோதுங்கள். ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மையையும் சில கற்களை வீசுவதாலும் என்னை விரட்டி விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    • பதவி ஏற்றதும் எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து ஓம் பிர்லா பேசினார்.
    • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

    எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் எம்ர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறியதாவது:-

    சபாநாயகர் ஓம் பிர்லா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ராகுல் காந்திதான் எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதன்பின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று ராகுல் காந்தி ஓம் பிர்லாவை சந்தித்தார்.

    நாடாளுமன்ற செயல்பாடு பற்றி பல விசயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, ஓம் பிர்லாவிடம், எமர்ஜென்சி விவகாரம் குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறிப்பில் இருந்து அதை தவிர்த்திருக்கலாம். அது அரசியல் தொடர்பான குறிப்பு என்பது தெளிவாக தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    மேலும், தனியாக வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் "பதவி ஏற்ற நிலையில் உங்கள் இருக்கையில் இருந்து சுமார் 50 வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது அதிர்ச்சி அளித்தது. தலைவர் பதவியில் இருந்து இப்படி ஒரு அரசியல் குறிப்பை வெளியிடுவது நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார்.
    • பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    புதுடெல்லி:

    மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

    சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

    ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார்.
    • ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

    நேற்றும், நேற்று முன்தினமும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பாராளுமன்ற சபாநாயகரை பெரும்பாலும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது எதிர்க் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தருவதாக இருந்தால் சபாநாயகரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.

    இந்த நிபந்தனையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பாராளுமன்ற சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே சமயத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    நேற்று மதியம் அவர்கள் இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முதல் பலப்பரீட்சை உருவானது.

    இதற்கிடையே இன்று காலை சபாநாயகரை ஏக மனதாக தேர்வு செய்ய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.

    தற்காலிக சபாநாயகர் மகதாப் சபாநாயகர் தேர்தலை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார். மத்திய மந்திரிகள் ராஜ் நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் சிரக்பஸ்வான் உள்பட பலர் வழிமொழிந்தனர்.

    இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை காங்கிரஸ் எம்.பி. பிரேமசந்திரன் முன்மொழிந்தார். அகிலேஷ் யாதவ், கனிமொழி, சுப்ரியா சுலே உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.

    அதன்பிறகு 11.13 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. டிவிசன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்படலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் எம்.பி.க்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கப்படாததால் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகர் மகதாப் முடிவு செய்தார்.

    அதன்படி ஓம்பிர்லாவை ஆதரிப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று அவர் அறிவித்தார். அடுத்த வினாடி பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மிக பலத்த சத்தத்துடன் ஓம்பிர்லாவை ஆமோதித்து குரல் எழுப்பினார்கள். அதன் பிறகு எதிர்ப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    அப்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நோ என்று குரல் எழுப்பினார்கள். இதையடுத்து ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வானார்.

    அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியும், ராகுலும் புன்னகைத்தபடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அதன் பிறகு புதிய சபாநாயகர் பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றது.

    ஓம்பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பாரம்பரிய முறைபடி அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமர்ந்திருந்த தற்காலிக சபாநாயகர் மகதாப் எழுந்து நின்று வணங்கி ஓம்பிர்லாவை வரவேற்று கை குலுக்கினார்.

    பிறகு அவர் தனது இருக்கையை விட்டு விலகி நிற்க ஓம்பிர்லா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வுக்கு ஒத்துழைப்பு தெரிவித்த அனைவருக்கும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நன்றி தெரிவித்தார்.

    ×