என் மலர்tooltip icon

    இந்தியா

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை - சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்
    X

    சபாநாயகர் ஓம் பிர்லா

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை - சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

    • வரும் 31-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நடைபெறும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் முடிந்து தயாராகி விட்டது. வரும் 31-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியானது. இதில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், ஜனாதிபதி உரை பழைய கட்டிடத்தில்தான் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக ஓம் பிர்லா டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவார் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×