என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளால் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    ரிஷபம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மிதுனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.

    கடகம்

    பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சிக்கு அதிகாரிகள் உறுதுணைபுரிவர்.

    சிம்மம்

    முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    கன்னி

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். பிறருக்கு வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    துலாம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

    விருச்சிகம்

    கடவுள் வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு உண்டு.

    தனுசு

    குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் அகலும்.

    மகரம்

    வருமான பற்றாக்குறை அகலும் நாள். இல்லத்தில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

    கும்பம்

    பகை அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம்.

    மீனம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கும் அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது. 

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது. அதன்படி, நவராத்திரியின் முதல் நாளான இன்று பிரசாதமாக கொண்டைக்கடலை சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை அல்லது கருப்பு கொண்டைக்கடலை

    தேங்காய் துருவல்

    வெங்காயம் (விருப்பப்பட்டால்)

    மிளகாய் (விருப்பப்பட்டால்)

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    எண்ணெய்

    உப்பு.

     

    செய்முறை:

    கொண்டைக்கடலை சுண்டல் செய்ய, முதலில் கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    பின்னர், ஊறவைத்த கொண்டைக்கடலையை தேவையான உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

    வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து, கலவையை நன்கு கிளறி, உப்பு சரிபார்த்து இறக்கவும். கொண்டைக்கடலை சுண்டல் தயார்.

    வெண்ணெய் தயிர் சாதம்

    தேவையான பொருட்கள்:

    அரிசி

    தயிர்

    பால்

    வெண்ணெய்

    தாளிக்க :

    கடுகு

    உளுத்தம் பருப்பு

    கறிவேப்பிலை

    பெருங்காயம்

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    கேரட் (துருவியது)

    கொத்தமல்லி தழை

    எண்ணெய் அல்லது நெய்

     

    செய்முறை

    அரிசியை நன்கு கழுவி, போதுமான தண்ணீருடன் குக்கரில் 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    பின்னர், வேகவைத்த சாதத்தை சற்று ஆறவிட்டு, வெண்ணெய் சேர்த்து நன்கு மசிக்கவும்.

    மசித்த சாதத்துடன் பால் சேர்த்து கிளறி, சற்று க்ரீமியாகவும், மிருதுவாகவும் ஆக்கவும். பின், தயிரையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடாக்கவும். கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பின் பச்சை மிளகாய், துருவிய கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கொத்தமல்லி தழையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இந்த தாளிப்பை தயிர் சாத கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.

    இனிப்பு: தேங்காய் பர்பி

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள்ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    தண்ணீர் - தேவைப்பட்டால்.

     

    செய்முறை:

    ஒரு தட்டில் நெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயில் சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை முழுவதுமாக கரையும் வரை காத்திருக்கவும்.

    சர்க்கரைப் பாகுடன் துருவிய தேங்காயை சேர்த்து, நீர் வற்றி கெட்டியாகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

    கலவை கெட்டியானதும், ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி சமன் செய்யவும். கலவை சற்று ஆறியதும், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும்.

    முழுமையாக ஆறியதும், பர்பியை தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும். முந்திரி, பாதாம் போன்றவற்றை சேர்த்து, மேலும் சுவையான பர்பி செய்யலாம்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-6 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பிரதமை பின்னிரவு 2.49 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : உத்திரம் நண்பகல் 12.25 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று நவராத்திரி பூஜை ஆரம்பம், சிவன் கோவில்களில் சோமவார பூஜை

    இன்று தவுஹத்ர பிரதமை. நவராத்திரி பூஜை ஆரம்பம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிஷேகக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-பணிவு

    கடகம்-சிந்தனை

    சிம்மம்-உறுதி

    கன்னி-முயற்சி

    துலாம்- ஊக்கம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- பாசம்

    மகரம்-விருத்தி

    கும்பம்-தெளிவு

    மீனம்-லாபம்

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். இதில்,"சைலபுத்ரி" என்பது துர்க்கையின் முதல் வடிவம் ஆகும்.

    நவராத்திரியின் முதல் நாளான இன்று ஷைல புத்ரி தேவிக்கான மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்:

    ஷைல் புத்ரி மந்திரம் என்பது துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல் புத்ரியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

    சிறப்பு மந்திரங்கள்:

    * ஓம் தேவி ஷைலபுத்ரியை நமஹ

    விளக்கம்: தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    * வந்தே வாஞ்சிதலாபாய சந்திரார்த கிருதஷேக்ராம்। விருஷாரூடாம் ஷூலதாரிணீம் ஷைலபுத்ரீம் யஷஸ்விநீம்

    விளக்கம்: என் ஆசைகளை நிறைவேற்றும், சந்திரனை கிரீடமாக அணிந்த, காளையின் மீது அமர்ந்திருக்கும், திரிசூலத்தை ஏந்திய, புகழ்மிக்க தேவி ஷைலபுத்ரிக்கு என் வணக்கம்.

    இந்த மந்திரங்கள் நவராத்திரியின் முதல் நாளில் உச்சரிக்கப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களையும் ஆன்மீக பலத்தையும் பெற உதவுகிறது.

    • எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும். 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    அதன்படி, 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் முதல் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    -இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    • மகிஷாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக துர்காதேவி செய்த போரின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
    • ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார்.

    "நவராத்திரி" என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையைத் தொடர்ந்து வரும் இந்த ஒன்பது நாட்கள் பெண் தன்மையை வழிபடுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான ஒரு மிகச் சிறப்பான காலமாகும்.

    இந்த வருடம் நவராத்திரி 22-ந்தேதியான இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அக்.2-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் முதல் நாளில் அன்னை சக்தி துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைலபுத்ரியை வழிபட வேண்டும். ஷைலபுத்ரியை இமயமலையின் மகள் என்றும், இயற்கையின் முதன்மையான சக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் துர்கா தேவியின் முதல் வடிவமாக வணங்கப்படுகிறார். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் இவரை வழிபட வேண்டும்.

    துர்காதேவி, மகிஷாசுரன் என்ற அரக்கனை வதம் செய்வதற்காக போர் புரிந்தார். இந்தப் போரின் தொடக்கமே நவராத்திரி. இந்த முதல் நாள் வழிபாடு துர்கா தேவி மகிஷாசுரனை வென்றதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

    நவராத்திரி முதல் நாளில் வழிபடும் தெய்வம் ஷைலபுத்ரி தேவி

    ஷைலபுத்ரி தேவி முன் பிறவியில் சதி தேவியாக இருந்தார். சதி தேவி தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். அவருக்கு பரமசிவனுடன் திருமணம் ஆனது.

    ஆனால், தந்தை தட்சன் சிவனை அவமதித்து யாகத்திற்க அவரை அழைக்கவில்லை. அதை சகிக்க முடியாமல் சதி யாகக் குண்டத்தில் தன்னைத் தானே அர்ப்பணித்தார்.

    இதன் பின் சதி மறுபிறவியாக மலைராஜன் இமவானின் மகளாக பிறந்தார். அதனால் தான் அவர் ஷைலபுத்ரி (மலைமகள்) என்று அழைக்கப்படுகிறார்.

    வழிபாட்டின் சிறப்பு: முதல் நாளில் ஷைலபுத்ரியின் தெய்வீக சக்தியை வழிபடுவது, வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறுவதற்கு உகந்ததாகும்.

    ஷைலபுத்ரி தேவி துர்கா தேவியின் முதல் வடிவமாகவும், சதி தேவியின் மறு அவதாரமாகவும் உள்ளார். ஷைலபுத்ரி தேவி இயற்கை அன்னையின் முழுமையான வடிவம் மற்றும் சிவபெருமானின் துணை என்று குறிப்பிடப்படுகிறார்.

    நவராத்திரியின் முதல் நாளில், புனிதமான கலசம் நிறுவப்படுகிறது.

    ஷைலபுத்ரி தேவி காளையின் (நந்தி) மீது அமர்ந்து ஒரு கையில் திரிசூலத்தையும் மறுகையில் தாமரையையும் ஏந்தியிருக்கிறாள். இந்த வடிவம் தூய்மை, நிலைத்தன்மை மற்றும் புதிதாகத் தொடங்குவதற்கான தைரியத்தில் வேரூன்றிய வலிமையைக் குறிக்கிறது.

    ஸ்லோகம்

    'ஓம் தேவி சைலபுத்த்ரியை நமஹ' என்ற மந்திரம், துர்கா தேவியின் முதல் அம்சமான ஷைலபுத்ரி தேவியை வணங்குவதற்கான மந்திரமாகும்.

    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
    • விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது. 

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள்.

    அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும். நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். 

    கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்துவிட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளை சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்திரன் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனேபோற்றி!

    ஓம் கற்பக களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பனே விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    • அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார்.
    • ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

    எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

    இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

    வரம் பெற்ற பிறகு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப்படுத்தினான். மகிஷாசுரனின் ஒழுக்கமற்ற செயல்களால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்தனர்.

    அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் "மகிசாசுரவர்த்தினி" (அல்லது மகிஷாசுரமர்த்தினி) என்று சக்தியைப் போற்றினார்கள்.

    இந்த ஒன்பது நாட்கள் துர்கா தேவி மகிசாசூரனை எதிர்த்து போராடிய நாட்களே 'நவராத்திரி'யாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் 'விஜயதசமி' என்று கொண்டாடப்படுகிறது.

    • ரிஷபம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம்.
    • மிதுனம் அதிர்ஷ்டகரமான வாரம்.

    மேஷம்

    துணிச்சலும் தைரியமும் மிகுந்த வாரம். 2,7-ம் அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் இணைகிறார். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமண முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பூர்வீகம் சென்று வருவதில் சற்று சிரமம் இருக்கும். பணம் பொருள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

    அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறிமுகம் அல்லாத நபர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது அதேபோல் உங்களுக்கு உதவி செய்வதாக கூறும் அன்னியர்களை நம்ப வேண்டாம். எது எப்படி இருந்தாலும் ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் எந்த நிலையிலும் தைரியம் குறையாது.

    26.9.2025 அன்று மாலை 3.24 மணி முதல் 29.9.2025 அன்று அதிகாலை 3.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொருளாதார முன்னேற்றத்தில் தடை உருவாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களுக்கு குங்குமம் வாங்கித் தருவதால் மங்களம் உண்டாகும்.

    ரிஷபம்

    ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். சோர்வான பலவீனமான மனநிலையில் இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பாதிப்புகள் வரலாம். சொத்துக்கள் விஷயத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். சிலர் சொத்துக்களின் பராமரிப்பு பணியில் ஈடுபடலாம்.

    தொழில் மூலம் நல்ல வருமானம் வரும். தீபாவளிக்கு சற்றேறக் குறைய ஒரு மாதம் மட்டும் இருப்பதால் நம்பகமற்ற விளம்பரங்களை நம்பி பொருளுக்கு பணம் கட்டி ஏமாறலாம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் தொடர்பான முயற்சிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். மாணவர்கள் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

    சிலருக்கு தீபாவளி முடிந்தவுடன் வேலை மாற்றம் செய்யும் எண்ணம் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் அது கானல் நீராக மறைந்துவிடும். நவராத்திரி காலங்களில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்க மங்களம் பெருகும்.

    மிதுனம்

    அதிர்ஷ்டகரமான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு சனிப் பார்வை உள்ளது. ராசி அதிபதி புதன் பாக்கியாதிபதி சனியின் பார்வை பெறுவது மிக உன்னதமான அமைப்பாகும். உங்கள் செயல்பாட்டில் இருந்த தடுமாற்றம் குழப்பங்கள் மறையும். சனிபகவான் மிதுனத்திற்கு அஷ்ட மாதிபதியாகவும் இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம்.

    இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடு வீர்கள். எதிர்பார்த்த தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். உத்தியோக சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    புதிய நம்பிக்கை பிறக்கும். எதிர்கால இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். குடும்பத் தேவைக்காக சில ஆடம்பரப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைந்த பிறகு திருமண முயற்சிகள் வெற்றி தரும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் அகலும். நவராத்திரி காலங்களில் பச்சைப்பயிறு சுண்டல் தானம் வழங்கவும்.

    கடகம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சந்திரன் 2,3,4,5-ம் இடங்களில் சஞ்சரிப்பது கடக ராசிக்கு சுபத்துவத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். உடல் மனம் ஆன்மா இவை மூன்றும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உள்ளமும் உடலும் ஒன்றுபடுவதால் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். கோப உணர்வு குறையும் வெற்றிப் பாதையை நோக்கி பயணித்து இலக்கை அடைவீர்கள்.

    புதிய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அனுகூலமான சூழ்நிலைகள் நிலவும். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியனை சனி பகவான் பார்ப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. திருமணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும்.

    மறுமணம் முயற்சிகள் பலன் தரும். விட்டுச்சென்ற காதல் மீண்டும் தொடரும். புதிய சொத்துக்கள் சேரும். ஆன்மீக நாட்டம் கூடும். குழந்தைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நவராத்திரி நாட்களில் பெண் தெய்வங்களை வழிபாடு செய்வதால் நிம்மதி கூடும்.

    சிம்மம்

    கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். இது கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகளை அதிகரிக்கும். விண்ணப்பித்த கடன் தொகை இந்த வாரத்தில் கிடைத்துவிடும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

    விடா முயற்சியும், உழைப்பும் சிந்திக்கும் திறனும் உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தந்தை வழி உறவுகளை அனுசரித்து சென்றால் இன்னல்கள் குறையும். குடும்ப வழக்குகளை ஒத்தி வைப்பதால் நிம்மதி அதிகமாகும். அதிக பொறுப்புகள், பணிச்சுமையால் சில நேரங்களில் சோர்வாகவும், விரக்தியுடனும் இருப்பீர்கள்.

    பதவி உயர்வு ஊதிய உயர்வு பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகும். வாழ்க்கைத் துணைக்கு அரசு வேலை கிடைக்கும். மாணவர்கள் கவனத்தை கல்வியில் செலுத்தினால் மிகப் பெரிய வெற்றியை அடைய முடியும். நவராத்திரி காலங்களில் கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்க தனவரவு இரட்டிப்பாகும்.

    கன்னி

    தொழில் அபிவிருத்தி ஏற்படும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று உள்ளார். இவரே உங்களுக்கு தொழில் ஸ்தான அதிபதியாகவும் இருப்பதால் தொழில் ரீதியான முன்னேற்றம் அபிவிருத்தி உண்டாகும். முதல் தொழிலில் தோல்வியுற்றவர்கள் இரண்டாவது தொழிலை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் என வாழ்க்கை ஒளிமயமாக மாறப் போகிறது.

    பிற கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய வழி தென்பட போகிறது. மனரீதியாக உடல்ரீதியாக அனுபவித்த வேதனைகள் விலகிச் செல்லும். வாழ்க்கைத் துணையின் உறவுகள் மூலமாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறையத் துவங்கும். நிதிநிலை, குடும்ப சூழ்நிலை, உடல் ஆரோக்கியம் ஆகிய அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது.

    புதிய வாகனம் வாங்குதல் வீடு கட்டுதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். மாணவர்கள் தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி கற்பதன் மூலம் மன அமைதியுடன் படிக்க முடியும். நவராத்திரி காலங்களில் அம்மன் கோவில்களில் விளக்கேற்றுவதால் உயர்வு உண்டாகும்.

    துலாம்

    எதிர்ப்புகள் அகலும் வாரம். ராசியில் தனாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பணம் குடும்பம் பற்றிய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். பொருள் சார்ந்த விஷயங்களில் கவனம் கூடும். விரும்பிய இலக்கை அடைய திட்டமிடுவீர்கள். உங்களை சூழ்ந்து நின்ற வெறுமை எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் குறையும். வருமானம் உயரும்.

    பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் வெற்றி பெறும். அன்புடன் பேசினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அற்புதமான இந்த காலகட்டங்களில் உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் வெகு விரைவில் வெற்றி கனியை எட்டிப் பறிப்பீர்கள். துலாம் ராசிக்கு திருமண தடைகள் விலகி நல்ல பலன்கள் வந்து சேரும்.

    மன அழுத்தத்தால் ஏற்பட்ட தூக்கமின்மை கோளாறு சீராகும். புதிய எதிர்பாலின நட்புகள் உருவாகும். புகுந்த வீட்டு உறவுகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நவராத்திரி காலங்களில் சக்தி வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவதால் வருமானம் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    வளமான வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை சனி பகவானின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாபாதிபதி புதனும் தொழில் ஸ்தான அதிபதி சூரியனும் இணைவதால் செல்வாக்கு அதிகரிக்கும். இழு பறியாகக் கிடந்த அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். பிறர் வியக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையில் வளம் உண்டாகும்.

    பேச்சிலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் தெளிவு இருக்கும். சிறிய முதலீடுகள் பெரிய லாபத்தை பெற்று தரும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் சீராகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு, வாகனம், ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். உங்களின் குடும்ப, தனிப்பட்ட விஷயங்களை அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். கை கால் மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கட்சிக்காக உழைத்து சளைத்த அரசியல்வாதிகள் பிரபலமாகும் நேரமாகும். நவராத்திரி காலங்களில் துர்க்கை காளி வழிபாடு செய்வதால் வெற்றி நடை போட முடியும்.

    தனுசு

    செயல்களில் வெற்றி கிடைக்கும். பாக்கியாதிபதி சூரியன் கர்மஸ்தான அதிபதி புதனுடன் தொழில் ஸ்தானத்தில் இணைவது தர்ம கர்மாதிபதி யோகம் ஆகும். இதுவரை முடங்கி கிடந்த அனைத்து திறமையும் வெளிப்படும். மனமும் உடலும் ஒன்றுபட்டு செயல்வேகம் கூடும். உபரி லாபத்தை சொத்துக்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.

    திருமணத்தடை அகலும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். அரசாங்க காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பெண்களுக்கு தாய் வழி சொத்துக்கள் நகைகள் பணங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

    இதுவரை புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். செயற்கை கருத்தரிப்பு முறையை அணுகியவருக்கு குலதெய்வ அருளால் இயற்கையாகவே குழந்தை பிறக்கும். நவராத்திரி காலங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும்.

    மகரம்

    பெற்றோர்களின் ஆசிர்வாதம் நிறைந்த வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாயின் நல் ஆசியும், தாய் வழிச் சொத்துக்களும் கிடைக்கும். தீபாவளிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபரில் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.

    மனைவி வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மாறும். படித்த இளைஞர்களுக்கு திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும். புதிய தொழில், உத்தியோக முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.

    நீண்ட நாள் நோய் தாக்கம் மாற்று முறை வைத்தியத்தில் சீராகும். மறைமுகத் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகுவார்கள். 21.9.2025 அன்று மாலை 3.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் கோவில்களுக்கு தேவையான மலர் தானம் வழங்க குடும்ப குழப்பங்கள் சீராகும்.

    கும்பம்

    செல்வநிலை உயரும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்கிரனின் பார்வை உள்ளது.இந்த கிரகங்களின் பார்வை ராசியில் உள்ள ராகுவால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகளை குறைக்கும். நடைமுறை வாழ்வில் நிலவிய சிக்கல்களை சரி செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நிறைவேறும். அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டீர்கள்.

    பொன் பொருள் பூமி சேரும் வாய்ப்புகள் உள்ளது. கோச்சார ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறைந்து திருமணம் நடக்கக்கூடிய சூழல் உருவாகும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தொழிலுக்கு வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும்.

    21.9.2025 அன்று மாலை 3.58 மணி முதல் 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்படுத்த முடியாத திடீர் முடிவுகளால் மன வருத்தங்கள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கு சிறு சிறு மனச் சங்கடங்கள் உண்டாகும். நவராத்திரி காலங்களில் ஆதிபராசக்தியை வழிபட்டால் சுய ஜாதகத்தில் ராகு கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அகலும்.

    மீனம்

    நீண்ட கால ஆசைகள், கனவுகள் நிறைவேறும் வாரம். ராசியில் உள்ள சனி பகவானுக்கு சூரியன் மற்றும் புதனின் பார்வை உள்ளது. அரசாங்க காரியங்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். நிர்வாகத்திறனும் பொறுப்புகளும் கூடும் எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். வரவேண்டிய கமிஷன் தொகைகள் வந்து சேரும் தந்தை வழி உறவுகளை பகைக்க கூடாது.

    ஜாமின் மற்றும் கடன் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி வரை வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். சிலர் புதியதாக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். குடும்ப முக்கிய பிரச்சினைக்காக வழக்கறிஞரின் ஆலோசனையை நாடுவீர்கள்.

    திருமணம் மற்றும் குழந்தை பேரில் நிலவிய தடைகள் அகலும். 24.9.2025 அன்று அதிகாலை 2.56 மணி முதல் 26.9.2025 அன்று மாலை 3.24 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தின் சின்னச் சின்ன பிரச்சினைகளை லேசாக எடுத்து கொள்ள வேண்டும். வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். சிலருக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நவராத்திரி காலங்களில் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

    • சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேன், கார், பஸ்களில் வந்த பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள தோப்புகளில் தங்கினர். இன்று அதிகாலை 6 மணிக்கு அடிவார நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் சுமார் 5 மணி நேரம் மலை பாதையில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    சதுரகிரிக்கு செல்ல மலை அடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

    கட்டுக்கடங்காத கூட்டத்தால் மலை பாதைகளில் நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் மற்றும் போலீசார் அதனை ஒழுங்குபடுத்தினர். மகாளய அமாவாசயை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
    • அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.

    ராமேசுவரம்:

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு நிகரானதாகவும் கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசை காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து 15 நாட்கள் மகாளய பட்சம் அமாவாசையில் பித்ருபட்ச காலத்தில் மேலுலகில் வாழும் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் ஆத்மா தன் குடும்பத்தினரை காண பூலோகம் வருவதாக இந்துக்களின் நம்பிக்கை.

    அவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசிகளுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாத சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது. 

    பின்னர் புனித நீராடிய பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்து முன்னோர்களின் பசி தீர்க்க பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர்கர்மா பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பிற்காகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் உத்தரவின் பெயரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாவட்டத்தின் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவி பட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

    • முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
    • ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

    கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

    முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

    இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

     

    மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.

    நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

     

    ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.

    ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

     

    எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

    ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

    ×