என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாழிக்கிணறு தீர்த்தம்"

    • திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும்
    • கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும், முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்திலும் பல அதிசயங்களை பக்தர்களின் வாழ்வில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் நடத்தி வருவதால் இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.

    திருச்செந்தூரில் உள்ள மிக முக்கியமான இடம், கோவிலுக்கு எதிரில் உள்ள நாழிக்கிணறு. இங்கு நீராடினாலே நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கோவிலுக்கு தெற்கு புறம் உள்ள நாழிக்கிணற்றில் நீராடி விட்டு, பிறகு கடலில் சென்று நீராடி விட்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் கோவிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும், பிறகு மணலால் மற்ற தீர்த்தங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது நாழிக்கிணறு மட்டுமே இங்கு உள்ளதாகவும் தல புராணம் சொல்கிறது.

    இந்த நாழிக்கிணற்றிற்கு, கந்த தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது முருகப் பெருமான் தன்னுடைய திருக்கை வேலால் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுரடி பரப்பும், 7 அடி ஆழமும் கொண்ட இந்த தீர்த்தம் பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறு இருப்பது போன்ற அமைப்பில் இருக்கும்.

    கடலுக்கு மிக அருகிலேயே இருந்தும் இந்த தீர்த்தத்தின் தண்ணீர் உப்புக்கரிப்பது கிடையாது. மிகவும் சுவை தன்மை கொண்டதாகவும், எந்த காலத்திலும் வற்றாமலும் இருக்கும் இந்த தீர்த்தம் மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்கீழ் நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ×