என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று).
    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-உற்சாகம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-அன்பு

    கன்னி-இன்சொல்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- புகழ்

    மகரம்-வரவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பக்தி

    • செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.

    கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.

    மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.

    இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

    சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.

    இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.

    தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம்

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-21 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி மாலை 5.47 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: பரணி காலை 7.10 மணி வரை பிறகு கார்த்திகை மறுநாள் விடியற்காலை 4.54 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம், கோவை ஸ்ரீ கோணியம்மன் ரதோற்சவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-பயணம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-வெற்றி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- நன்மை

    மகரம்-ஓய்வு

    கும்பம்-சலனம்

    மீனம்-குழப்பம்

    • அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
    • ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.

    நாகர்கோவில்:

    சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.

    இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

    ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.

    அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.

    ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.


    ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.

    அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.

    இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர். 

    • தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
    • 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.

    பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.

    நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.

    கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.

    தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.

    தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.

    தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.

    அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
    • கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்

    அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.


    அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.

    அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.

    அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
    • மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.

    ''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே

    அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''

    அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.

    அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.

    நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.

    படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.

    கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.

    எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.

    இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.

    அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.

    அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.

    இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.

    அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.

    இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.

    அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.

    அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.

    (இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.

    இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.

    • வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை “தவ வாசல்” என்றும் அழைப்பார்.
    • திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு.

    அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் வடக்கு வாசல்....

    தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். வந்ததும் அய்யாவை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார்.



    சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார்.

    அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

    அடுத்த 2 ஆண்டுகள் தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.

    மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.

    இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன.

    தலைமைபதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர்.

    வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் அய்யா நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.


    நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

    இந்த திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிக மகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.

    பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது.

    " நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார்.

    பக்தர்களின் வாழ்வில் மேன்மையும், புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.

    உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்கு வாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்கு வாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.

    • உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு
    • அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

    ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.

    அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.

    அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார்.

    இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர். 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர்.

    3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-20 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: பஞ்சமி இரவு 8.14 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: அசுவினி காலை 8.57 மணி வரை. பிறகு பரணி.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் காப்புக்கட்டு விழா. கோவை ஸ்ரீகோனியம்மனுக்கு திருக்கல்யாணம். குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வெள்ளி இந்திர விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தெளிவு

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-பரிவு

    கன்னி-பாசம்

    துலாம்- நலம்

    விருச்சிகம்- நிறைவு

    தனுசு- வரவு

    மகரம்-லாபம்

    கும்பம்-பக்தி

    மீனம்-பண்பு

    • பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
    • தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது.

    விழாவின் 5-வது நாளான நேற் று தீமிதி திருவிழா நடைபெற் றது. இதை யொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறை யில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

    உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.

    தொடர்ந்து பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மனுக்கும், அக்னி குண்டத்திற்கும் தீபாராதனை காட்டிய உடன் தீக்குழிக்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு தலைமை பூசாரி மற்றும் பூசாரிகள் தீக்குழிக்குள் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சில பக்தர்கள் இரும்பு கொக்கிகளை முதுகில் அலகு குத்தி லாரி, வேன் ஆகியவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு பறவை க் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழியை சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். மேல்மலையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவின் 6-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

    • மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×