என் மலர்
ஆன்மிகம்
- மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார்.
- நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான்.
நன்னீர், தூய காற்று, பருவகால மழை, நல்ல மனிதர்கள் அனைத்தும் இன்று அரிதாகிவிட்டது. மண்வளம், மழைவளம், நீர்வளம், மலைவளம், மனித வளம் அனைத்தும் குறைந்துவிட்டது. காரணம் புத்திக்கூர்மை நிறைந்த மனிதன் அறிவில் தேறி, ஆடம்பரத்தில் ஊறி, தன்னலத்தில் மூழ்கி, தான் வாழ பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.
கடவுள் மனிதனை தன் சொந்த கைகளினாலே அழகாகவும், அற்புதமாகவும் படைத்தார். அனைத்தையும் ஆளுகின்ற அதிகாரத்தையும், சுயமாகவே தெரிந்தெடுக்கிற சுதந்திரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.
சுதந்திரம் அளிக்கின்ற கடவுள்
படைப்பின் வேளையிலே மனிதனுக்குக் கடவுள் சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆதிமனிதன் ஆதாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கீழ்படிதல் நிறைந்த அல்லது கீழ்படிதலற்ற வாழ்வை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கிறார்.
'நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்' (ஆதி.2:16,17).
'இதோ ஜீவனையும், நன்மையையும், மரணத்தையும், தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்' (உபா.30:15) என்கிறார்.
'கர்த்தரை சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்' (யோசு.24:15) என்று அவர்கள் விரும்பியதை வழிபடுவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
கடவுளின் கட்டளைகளை கைக்கொண்டால் ஆசீர்வாதம், கைக்கொள்ளா விட்டால் சாபம் என்று கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்வதில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் என்று செய்கின்ற செயலில் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்கிறார்.
நியாயம் தீர்க்கின்ற கடவுள்
மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார். ஒவ்வொரு கிரியையும், ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும், தீமையானாலும் நியாயத்திற்குக் கொண்டுவருவார். பட்சபாதமின்றி நியாயந்தீர்ப்பார். இதிலிருந்து யாரும் தப்பவோ, ஓடி ஒளியவும் முடியாது. இது எல்லாருக்கும் பொதுவானது. இதை எல்லோரும் எதிர்கொண்டேயாக வேண்டும்.
நியாயத்தீர்ப்பின் வேளையில் கடவுள் பின்வாங்குவதும், தப்பவிடுவதும், மனஸ்தாபப்படுவதும் இல்லை. அவர் நீதியோடும், நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். பட்சபாதமில்லாமல், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளுக்கும் தக்கதாக நியாயந்தீர்ப்பார். மனிதன் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (மத்.12:36).
நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். நாம் நினைப்பது போல் அவர் தாமதிப்பதுமில்லை, மாறாக, அவர் நாம் கெட்டு அழிந்து போவதை அவர் விரும்பாதபடியினால் நாம் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் நம்மிடத்தில் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார். மனந்திரும்பி நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பை மீண்டும் மீண்டும் தந்து கொண்டேயிருக்கிறார்.
கோதுமையை களஞ்சியத்திலும், பதரையோ அவியாத அக்கினியில் சேர்ப்பார். நித்திய வாழ்வுக்கென்று சிலரையும், நித்திய அக்கினிக்கென்று சிலரையும் பிரித்தெடுப்பார். ஐசுரியவான் லாசரு உவமையில் மண்ணில் ஆடம்பரமாய் வாழ்கிறவன் மரித்தபின் எரிநரகில் வேதனைப்படுகிறான். ஆனால், மண்ணில் வறுமையில் வாடியவன் மரித்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். இரக்கமும், கருணையும் நிறைந்த நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பிருந்தும் வாழாதவன், இப்போது ஒரு துளி நீருக்காய் ஓலமிடுகிறான். வறுமை, வியாதி, பசி என்று வேதனையில் வாடியவன், இப்போது சமாதானத்தோடே இளைப்பாறுகிறான். மரணத்தைப் போல நியாயத்தீர்ப்பும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
நம் செய்கைக்குத் தக்க பலனளிக்கிற கடவுள்
'தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது முதுமொழி. 'மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்' என்பது மறைமொழி.
மனிதன் தான் விரும்பிய செயல்களை செய்வதற்குரிய சுதந்திரம் அவனுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவனவன் செய்வதற்கேற்ற பிரதிபலனையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தெளிவும் அவனுக்கு வேண்டும். நன்மையை விரும்பி செய்வதும், தீமையை வெறுப்பதும், தீமைகளை அடுக்கடுக்காய் செய்து நன்மை செய்ய மறுப்பதும் அவரவர் விருப்பம் தான்.
ஆனாலும், அவனவன் செய்கைக்குத் தக்க பலன் அவனவன் கூட வருகிறது. நன்மை செய்தவர் மேன்மையையும், தீமை செய்தவர் அதற்குரிய பிரதிபலனையும் அடைவர். நற்கிரியைகளை செய்வதற்கென்றே நாம் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.
நம் நற்கிரியைகளால் பிதாவின் நாமம் மகிமைப்பட வேண்டும். நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான். 'நற்செய்தியின் நறுமணத்தை உள்ளடக்கிய நற்செயல்களை ஆற்ற இயலும் வகையில் இயேசுவுடனான அன்புறவில் நம்மை ஈடுபடுத்துவோம்' என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
மகிமையான வாழ்வுக்கென்று மகத்தான செயல்களைச் செய்வோம்!
- ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும்.
- அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. த்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம். அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.
பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.
பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.
லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.
அமாவாசை தர்ப்பணம்
வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.
அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

மூன்று தலைமுறை தர்ப்பணம்
அமாவாசை திதி நாளை அதிகாலை 03.06 மணிக்கு தொடங்கி, மறுநாளான 25-ந்தேதி அதிகாலை 01.48 வரை உள்ளது. இதனால் நாளை காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
அகத்திக்கீரை
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.
கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும் நாள். செல்வ நிலை உயரும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆதரவோடு எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
ரிஷபம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாகத் தேடிவரும்.
மிதுனம்
கனவுகள் நனவாகும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கடகம்
நட்பால் நன்மை கிட்டும் நாள். செல்வாக்கு உயரும். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
சிம்மம்
வெற்றிச்செய்திகள் வீடு தேடி வரும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
துலாம்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வங்கிச் சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதால் பிரச்சனைகள் ஏற்படும். திடீர் செலவுகளை சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகலாம்.
தனுசு
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
மகரம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.
மீனம்
நினைத்தது நிறைவேறும் நாள். முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொடுப்பர். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சி உண்டு.
- இன்று மாத சிவராத்திரி.
- கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-7 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி பின்னிரவு 3.05 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : திருவாதிரை இரவு 6.51 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
இன்று மாத சிவராத்திரி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன் வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்தவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் உலா. கூற்றுவ நாயனார் குரு பூஜை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அனுகூலம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-முயற்சி
கடகம்-துணிவு
சிம்மம்-நற்சொல்
கன்னி-மேன்மை
துலாம்- பக்தி
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- ஆசை
மகரம்-ஆதரவு
கும்பம்-லாபம்
மீனம்-உயர்வு
- மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
- சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவியில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்தாண்டு ஆடி அமாவாசை விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (22-ந் தேதி) முதல் 25-ந் தேதி வரை கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்று நள்ளிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப் பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மலைப்பகுதியில் வெயில் இல்லாத நிலையில், காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பக்தர்கள் ஆர்வமுடன் மலையேறினர்.
இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை சிவராத்திரி, நாளை மறுநாள் 24-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 25-ந் தேதி மதியம் 1.15 வரை அமாவாசை திதி இருப்பதால் 24-ந் தேதி ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று மதுரை சரக டி.ஐ.ஜி. அபினோ குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்கள் செல்வதற்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதையையும், வனத்துறை கேட்டில் இருந்து பக்தர்கள் செல்லக்கூடிய பாதையையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் கண்ணன், ஏ.டி.எஸ்.பி. அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டி. எஸ்.பி. ராஜா, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர் மாலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா ஆகியோர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
- தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாடல் முழவும் விழவும் ஓவாப்
பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெருங்கொடி விண்தடவு
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேஇடமாக ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
எல்லாக் காலங்களிலும் முழவின் ஒலியுடன் கூடிய இசைப்பாடலும், திருவிழாக்களும் நடைபெற, வேதங்கள் கற்ற அந்தணர்கள் போற்ற, வானத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களை கொண்டது திருமருகல் திருத்தலம். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே!
வளைந்த நெருக்கமான இலைகளை உடைய பெருமைமிக்க மலர்ச் சோலை சூழ்ந்த செங்காட்டங்குடியில் இடுகாட்டினை இடமாக கொண்டு நடனம் ஆடுவதற்கு கணபதி ஈச்சரத்தினை விரும்பியதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
- திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.
இந்த வார விசேஷங்கள்
22-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.
* நயினார்கோவில் அன்னை சவுந்திர நாயகி அம்மானை ஆடி வரும் காட்சி.
*சமநோக்கு நாள்.
23-ந் தேதி (புதன்)
* திருவாடானை சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி வேணுகான கிருஷ்ண மூர்த்தி அலங்காரம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
24-ந் தேதி (வியாழன்)
* ஆடி அமாவாசை.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.
* காரையார் சொரி முத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.
* மதுரை கள்ளழகர் கருட சேவை.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (வெள்ளி)
* திருவாடனை சிநேகவல்லியம்மன் வெண்ணெய் தாழி சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
26-ந் தேதி (சனி)
* நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை காட்சி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் இரவு மகிசாசூரசம்காரம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
27-ந் தேதி (ஞாயிறு)
* மதுரை மீனாட்சி முளைக்கொட்டு விழா தொடக்கம்
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்க மன்னார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
28-ந் தேதி (திங்கள்)
* ஆடிப்பூரம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.
* மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.
- அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.
அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் உண்டான இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.
சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கணிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.
எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை வரப்போகிறது.
அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.
அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.
முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும், பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.
ரிஷபம்
யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு தொகை கிடைக்கும்.
மிதுனம்
முன்னேற்றம் கூட முக்கிய முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கடகம்
போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
சிம்மம்
குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஒருவர் உங்கள் காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவார்.
கன்னி
பிரச்சனைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
துலாம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள்.
விருச்சிகம்
பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம்.
தனுசு
பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.
கும்பம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரியும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்
எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-6 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி காலை 6.45 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 7.52 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்
இன்று பிரதோஷம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்திலும், மாலை வேணுகோபால அலங்கா ரத்திலும் காட்சி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி அம்மன் ஆடி வரும் திருக்கோலமாய்க் காட்சி. திரு மயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் ஸ்ரீ சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-நன்மை
கன்னி-நலம்
துலாம்- பொறுமை
விருச்சிகம்-போட்டி
தனுசு- நற்செய்தி
மகரம்-இன்சொல்
கும்பம்-லாபம்
மீனம்-பாராட்டு
- இன்று சர்வ ஏகாதசி.
- நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-5 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி காலை 8.56 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 9.06 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி,
திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நன்மை
கடகம்-உற்சாகம்
சிம்மம்-நிறைவு
கன்னி-முயற்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-உயர்வு
தனுசு- புகழ்
மகரம்-சுகம்
கும்பம்-அமைதி
மீனம்-பொறுமை






