என் மலர்
ஆன்மிகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மிதுனம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
சிம்மம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பணிகள் விரைந்து நடைபெற அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலையை சக பணியாளர்களும் பகிர்ந்துகொள்வர்.
துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும்.
விருச்சிகம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.
தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
மகரம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றிச் செய்திகள் விடிகாலையிலேயே வரலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதம் நடைபெறும்.
கும்பம்
சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
மீனம்
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
- வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள் இந்திராணி.
- இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரியின் ஆறாம் நாளன்று அன்னை பராசக்தி, இந்திராணியாக வழிபாடு செய்யப்படுகிறாள். இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
இந்திராணியை வழிபட பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலம் போட வேண்டும். 16 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். வாழை நார் திரி போட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். தேங்காய் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். செம்பருத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் சந்தன இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பொன்னான அன்னை இந்திராணியே புகழ்பாடி வந்தேன் இந்திராணியே கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன உள்ளாரைக் மேன்மையெல்லாம் உண்டாகுமே"
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
இந்திராணி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் குரு. எனவே இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும். கட்டுமஸ்தான உடல்வாகு, நிரந்தரமான வெற்றி, மற்றும் மரியாதை பெறும் நிலையை அருள்வாள். நல்ல உறவுகள் விசுவாசமான மனைவியையும் குழந்தைகளையும், உயிருக்கும் மேலான நண்பர்களையும் பெற்று வாழலாம். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு மேன்மையைத் தருவாள்.
- பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை ஏழுமலையான் கல்ப விருட்ச வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற உள்ளது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை பைக்குகள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அலிபிரி சோதனை சாவடி, கருடா சந்திப்பு, அரசு பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த ஆங்காங்கே கியூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.
கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாகனங்கள் எந்த வழியாக சென்று வாகன நிறுத்தங்களை அடையாளம் என தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் முடிந்த அளவு அரசு பஸ்களில் திருப்பதி மலைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிநவீன டிரோன் கேமராக்கள் மூலமும் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரோவுடன் இணைந்து மேக் எ கால் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது. பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 300 போலீசார் வரைய வைக்கப்பட்டுள்ளனர்.
அவசர உதவி தேவைப்படும் பக்தர்கள் போலீசாரையோ அல்லது தேவஸ்தான அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளலாம்.
முடியாத பட்சத்தில் 112 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும்.
- பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் தினந்தோறும் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை மற்றும் தேசிகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வேண்டி சாலக்கரை இலுப்பை தோப்பில் மொட்டை அடிக்கும் கூடாரத்தில் திரண்டு மொட்டை அடித்து சென்றனர். சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 6வது நாளான இன்று கடலை பருப்பு சுண்டல், வெண்பொங்கல் மற்றும் கோதுமை அல்வா செய்து காத்யாயனி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், கடலை பருப்பு சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
தண்ணீர் - வேகவைக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - ¼ கப்

செய்முறை
* 1 கப் கடலைப்பருப்பை எடுத்து நன்றாகக் கழுவி, 1 ½ கப் தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
* ஊறவைத்த பருப்புடன் போதுமான தண்ணீர் மற்றும் ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து, குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவைத்து, தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். பருப்பு குழைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
* வேகவைத்த கடலைப்பருப்பை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு சுண்டல் தயார்.
வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
தண்ணீர் – 3 ¾ கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1/2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – 1 அங்குலம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் – 2 (நறுக்கியது)
முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை
* ஒரு குக்கரில் 1/2 கப் பாசிப்பருப்பை எடுத்து, வாசனை வரும் வரை குறைந்த தீயில் நெய் சேர்த்து வறுக்கவும்.
* அதனுடன் 1/2 கப் அரிசி, 3 ¾ கப் தண்ணீர், மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
* குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
* குக்கரின் அழுத்தம் குறைந்ததும், வெந்த அரிசி-பருப்பு கலவையை சரிபார்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலவையை சரிசெய்யவும்.
* ஒரு வாணலியில் 1/2 கப் நெய் விட்டு, சீரகம் மற்றும் மிளகை சேர்த்து பொரிய விடவும்.
* பின்னர் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், மற்றும் முந்திரியை சேர்த்து முந்திரி பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
* கடைசியாக பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, இந்த தாளிப்பை வெந்த அரிசி-பருப்பு கலவையின் மீது ஊற்றவும். எல்லாவற்றையும் மெதுவாகக் கலந்து பரிமாறவும்.
* வெண்பொங்கலை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப் முதல் 1.5 கப் வரை
நெய் - 1 கப்
தண்ணீர் - 2 கப் (அல்லது சர்க்கரைக்கு ஏற்ப)
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - நறுக்கியது.

செய்முறை:
* ஒரு கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கோதுமை மாவைச் சேர்த்து, குறைந்த தீயில் பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும்.
* மாவை வறுக்கும்போதே, மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து சர்க்கரை கரையும் வரை பாகு தயார் செய்யவும் (அடுப்பை அணைத்துவிடவும்).
* வறுத்த கோதுமை மாவுடன் இந்த சர்க்கரை பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
* மாவில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நெய் பிரியும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
* கோதுமை மாவு அல்வா பதம் வந்ததும், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும்.
* இறுதியாக, நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்து அலங்கரித்து, சூடாகப் பரிமாறலாம்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று, துர்கா தேவியின் காத்யாயனி தேவி வடிவத்தை வழிபடும் நாளாகும்.
காத்யாயனி மந்திரம் துர்கா தேவியின் ஒரு அம்சமான காத்யாயனி தேவியை வணங்க உதவும்.
காத்யாயனி மந்திரங்கள்:
*காத்யாயனி மகாமாயே மகாயோகின்யதீஸ்வரி.
*நந்தகோபசுதம் தேவி பதிம் மே குரு தே நமஹ.
இந்த மந்திரம் திருமண வயதுடைய பெண்கள் விரும்பிய கணவனை அடைய வேண்டி உச்சரிக்கும் மந்திரம் ஆகும்.
- இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
- அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. அப்படியான நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவி வழிபடப்படுகிறார்.
புனித விழாவாக கருதப்படும் நவராத்திரி முழுவதும், மக்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்கின்றனர். இன்று, வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க உதவும் ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றி பார்ப்போம்.
தேங்காய் பரிகாரத்தின் முக்கிய அம்சங்கள்...
இந்த எளிய பரிகாரத்தின் நோக்கமும் செயல்முறையும் பின்வருமாறு:
தேவையான பொருள்: ஒரு முழுமையான தேங்காய்.
செய்யும் முறை:
* பூஜை அறையில் அல்லது சுத்தமான இடத்தில் அமர்ந்து தேங்காயை மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
* முழுமையான நம்பிக்கையுடன் 'ஓம் தும் துர்காயை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
* மந்திரத்துடன் சேர்ந்து, உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் மற்றும் தடைகளை நீக்குமாறு துர்கா தேவியிடம் மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
* பிரார்த்தனை முடிந்ததும், அந்தத் தேங்காயை எடுத்துச் சென்று அருகில் உள்ள அரச மரத்தின் அடியில் வைத்து விட வேண்டும்.
நம்பிக்கை:
* தேங்காய் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் (Negative Energy) மற்றும் தடைகளையும் தனக்குள் உறிஞ்சிக் கொள்ளும் என்று நம்பப்படுகிறது.
இந்த பரிகாரத்தால் கிடைக்கும் பலன்கள்:
* இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பின்வரும் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காரியத் தடைகள் நீங்கும்:
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு செயலிலும் இருக்கும் தடைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
கடன் பிரச்சனைகள் தீரும்:
பணப்புழக்கம் சீராகி, கடன் சுமை குறைய வழிவகுக்கும்.
உறவுகள் மேம்படும்:
குடும்ப உறவுகள், நண்பர்கள் மற்றும் பிறருடனான உறவுகளில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நல்லிணக்கம் உண்டாகும்.
திருமணத் தடை விலகும்:
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தைச் செய்தால், விரைவிலேயே நல்லபடியாகத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஆறாம் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஆறாம் நாள் போற்றி
ஓம் பொன்னரசியே போற்றி
ஓம் நவமணி நாயகியே போற்றி
ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி
ஓம் சிங்கார நாயகியே போற்றி
ஓம் செம்பொன் மேனியளே போற்றி
ஓம் மங்காத ஒளியவளே போற்றி
ஓம் சித்திகள் தருவாய் போற்றி
ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி
ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
ஓம் மகாமந்திர உருவே போற்றி
ஓம் மாமறையுள் பொருளே போற்றி
ஓம் ஆநந்த முதலே போற்றி
ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகா சண்டிகையே போற்றி
- காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார்.
- கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 6-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காத்யாயனி தேவி'. காத்யாயனி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காத்யாயன முனிவர் அம்பாளை நோக்கித் தவம் இருந்து, தேவியை தன் மகளாகப் பெற்றார். காத்யாயனரின் தவப் பலனாக தேவி காத்யாயனியின் வடிவம் பெற்றதால், அவளுக்கு 'காத்யாயனி' என்று அழைக்கப்படுகிறார்.
மகிஷாசுரன் என்ற அசுரன் தேவகோட்டங்கள் அனைத்தையும் துன்புறுத்தியபோது, விஷ்ணு, சிவன், பிரம்மன் ஆகியோரின் சக்திகள் இணைந்து உருவானவள் துர்கை. அந்த சக்தியே காத்யாயனி. இவர் கடுமையான போரில் மகிஷாசுரனை வதம் செய்து, உலகத்தை அசுரரிடமிருந்து காப்பாற்றினார். காத்யாயனி தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பார்.
நவராத்திரி வழிபாடு:
துர்கா வழிபாட்டில் நவராத்திரியின் ஆறாவது நாளில் காத்யாயனி வழிபாடு செய்யப்படுகிறாள். மகாசுரனை வதம் செய்ய துர்கா தேவி எடுத்த அவதாரங்களில் இதுவும் ஒன்று.
பாகவத புராணத்தில், யமுனையின் கரையில் கோபிகைகள் 'காத்யாயனி விரதம்' இருந்து, "கிருஷ்ணனை எங்கள் வாழ்க்கைத்துணையாக வேண்டும்" என வேண்டினார்கள். அவர்களின் விருப்பம் நிறைவேறியது. அதனால் இவர் திருமண ஆசீர்வாதம் வழங்குபவள் என்றும் கருதப்படுகிறார்.
திருமண வரம் அருளும் தேவியாக குன்றத்தூரில் காத்யாயனி அம்மன் கோவில் கொண்டுள்ளாள்.
மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் இளம்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணையை வேண்டி "காத்யாயனி விரதம்" அனுசரிக்கின்றனர்.
காத்யாயனி தேவியை வழிபடுவதால் துணிவு, திருமண சௌபாக்கியம், அசுர சக்திகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பக்தர்களை பாபங்களிலிருந்து காப்பாற்றி, சௌபாக்கியமும் துணிவும் அருள்பவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காத்யாயன்யை நமஹ' என்று ஜபிக்க வேண்டும்.
- மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
- சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!
அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
நவராத்திரி முதல் மூன்று தினங்கள் துர்க்கைக்கு உரியதாகும். அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமிக்கு உரியதாகும். இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கு உரியதாகும்.
நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அம்பாள் ஒன்பது வகையான திருக்கோலங்களுடன் ஆராதிக்கப் பெறுகிறாள்.
முதல் நாளில் மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாம் நாளில் ஒன்பது வயதுள்ள குமாரியாகவும்,
மூன்றாம் நாளில் பதினைந்து வயதுள்ள தருணியாகவும், நான்காம் நாளில் பதினாறு வயதுள்ள சுமங்கலியாகவும்,
ஐந்தாம் நாளில் ரூபிணியாகவும், ஆறாம் நாளில் ஸ்ரீவித்யா ரூபிணியாகவும், ஏழாம் நாளில் மகா துர்க்கையாகவும்,
எட்டாம் நாளில் மகாலட்சுமியாகவும், ஒன்பதாம் நாளில் சும்பன், நிசும்பனைக் கொன்ற சரஸ்வதி தேவியாகவும்,
பத்தாம் நாளில் சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாகவும் வழிபடுதல் வேண்டும்.
யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீதுநன்மை எல்லாம் காளி தெய்வ லீலையன்றோ
பூதம் ஐந்துமானாய் காளி பொறிகள் ஐந்துமானாய்
துன்பம் நீக்கிவிட்டாய் காளி தொல்லை போக்கிவிட்டாய்
-என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முப்பெரும் தேவியர்களும் ஒன்றாகி நாம் ஒவ்வொருவருடைய துன்பங்களையும், தொல்லைகளையும் போக்கி இன்ப வாழ்வு வழங்க நவராத்திரி விழாவையே நாம் கொண்டாடுகிறோம்.
மன உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதிற்கு அமைதியை அளித்து, ஆனந்த பெருவாழ்வுக்கு அழைத்து செல்வது தான் இந்த நவராத்திரி வழிபாடு.
நவராத்திரியின் ஆறாம் நாளில் காத்யாயனி தேவிக்கு விருப்பமான சாம்பல் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் சமநிலை மற்றும் நிலத்தன்மையை குறிக்கிறது. சக்தி மற்றும் அநீதியை அழித்தல் கடவுளான காத்யாயனி தேவியை மனமுருக வணங்கி ஆசியை பெறுவோமாக!
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம்.
- திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-11 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி காலை 10.17 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : அனுஷம் நள்ளிரவு 12.09 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சனம், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் மோகினி அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கீர்த்தி
ரிஷபம்-துணிவு
மிதுனம்-தனம்
கடகம்-லாபம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-கடமை
துலாம்- நட்பு
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- உயர்வு
மகரம்-அமைதி
கும்பம்-அன்பு
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வங்கி சேமிப்பு உயரும்.
மிதுனம்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம்.
கடகம்
வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தேடிச்செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்ப்பாடுகள் வந்து அகலும்.
கன்னி
தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும்.
துலாம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும்.
விருச்சிகம்
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு
வளர்ச்சி கூடும் நாள். பேசும் நண்பர்களிடம் நாசூக்காகப் பேசுவது நல்லது. வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.
மகரம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வர வேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
கும்பம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.
மீனம்
யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.






