என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி மாதம் - திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
    X

    மார்கழி மாதம் - திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு

    • மார்கழி மாதம் வருகிற 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது.
    • மார்கழி 17-ந் தேதியான ஜனவரி 1-ந் தேதி ஆங்கில வருடப்பிறப்பு என்பதால் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத முதல் நாளான வருகிற 16-ந் தேதி முதல் மார்கழி 30-ம் நாளான ஜனவரி 14-ந் தேதி வரை கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்கள் குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மார்கழி மாதம் வருகிற 16-ந் தேதி தொடங்கி ஜனவரி 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணியில் இருந்து 5 மணிக்குள் உதய மார்த்தாண்ட தீபாராதனை, காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை நடக்கிறது.

    காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணியில் இருந்து 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை மற்றும் நடை திருக்காப்பிடல் நடக்கிறது.

    17-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந் தேதி மற்றும் 6-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பிரதோஷம் என்பதால் பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி 17-ந் தேதியான ஜனவரி 1-ந் தேதி ஆங்கில வருடப்பிறப்பு என்பதால் அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மார்கழி 19-ந் தேதி (3-ந்தேதி) ஆருத்ரா தரிசனம் என்பதால் அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×