என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். குடும்பத்தினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

    ரிஷபம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். கவுரவம், உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வங்கி சேமிப்பு உயரும்.

    மிதுனம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாயப்புகள் வந்து சேரலாம்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகளில் இன்று மாற்றங்கள் ஏற்படலாம். சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

    சிம்மம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தேடிச்செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சிறு சிறு இடர்ப்பாடுகள் வந்து அகலும்.

    கன்னி

    தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும்.

    துலாம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி சச்சரவு அகலும்.

    விருச்சிகம்

    தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். பேசும் நண்பர்களிடம் நாசூக்காகப் பேசுவது நல்லது. வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    மகரம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வர வேண்டிய பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கும்பம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    மீனம்

    யோகமான நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    • திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள் வைஷ்ணவி தேவி.
    • வைஷ்ணவி தேவியை மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று அன்னை பராசக்தி, வைஷ்ணவியாக வழிபாடு செய்யப்படுகிறாள். கரங்களில் சங்கு சக்கரம், வில் ஆகியவற்றை கொண்டு திருமாலை போல் காட்சியளிப்பவள். திருமாலின் அம்சமாக திகழக்கூடியவள். கருட வாகனம் கொண்டவள். தீய சக்திகளை அழிக்க வல்லவள். செல்வம் மற்றும் செல்வாக்கை அருளக்கூடியவள்.

    வைஷ்ணவி தேவியை வழிபட கடலை மாவு கொண்டு பறவை கோலம் 66 போட வேண்டும். தீபம் ஏற்ற நல்லெண்ணெய் சிறந்தது. 17 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். தயிர் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மற்றும் விபூதிபச்சைஇலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "வருவாய் வருவாய் வைஷ்ணவியே

    வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே அனுதினம் வருவாய் வைஷ்ணவியே

    அனுக்கிரகம் செய்வாய் வைஷ்ணவியே"

    என பாடி துதித்தால் வரம் தருவாள்.

    வைஷ்ணவி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் புதன். எனவே வைஷ்ணவியை வழிபடுவதன் மூலம் புதன் தோஷம் நிவர்த்தியாகும். கல்வியில் சிறந்து விளங்கவும், அறிவாற்றலைப் பெருக்கவும் உதவும். புத்திசாலித்தனம் பெருகும். புத்தியைக் கொண்டு வளர்ச்சியைக் காண்பதற்கும், வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவதற்கும் அருள் செய்வாள். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கி, நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.

    • சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.
    • வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள்.

    ஐப்பசி பவுர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற் கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில் சிவனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று வில்வார்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

    பிள்ளையார் பக்தரான கிருச்சமத முனிவரின் மகன் பலி. அவனும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களை பெற்றான். அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான பறக்கும் கோட்டைகள். அவற்றை கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான். திரிபுரங்களுக்கு அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர்.

    அவர்களை ரட்சிக்க திருவுளம் கொண்ட பிள்ளையார் அசுரன் மீது போர் தொடுத்தார். போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது சிவகணை. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றில் கலந்தான். அப்படி அவன் பீடுபேறடைந்த திருநாள் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினமாகும்.

    அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்த புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களை துன்பங்கள் நெருங்காது.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்ய, முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல் இந்த பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாைல பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் எல்லாமே நீங்குவதுடன் விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும்.

    • திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும்.
    • தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இது.

    ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து திருமகள் துதிப்பாடல்களை படித்து திருமகளை வழிபட்டு வந்தால் நம் வறுமைகள் நீங்கும். வாழ்கைக வளம் பெறும்.

    இந்த 16 தினங்களில் அனுதினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து  லட்சுமி ஸ்தோத்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.

    மேலும் தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகியயாவையும் நீங்கி புது நம்பிக்கை பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 5வது நாளான இன்று பச்சை பட்டாணி சுண்டல், தேங்காய் சாதம் மற்றும் கீர் செய்து ஸ்கந்தமாதா தேவிக்கு படைக்கலாம்.

    முதலில், பச்சை பட்டாணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..

    பச்சை பட்டாணி சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பச்சை பட்டாணி - 1 கப்

    தேங்காய் துருவல் - 1/4 கப்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 2

    கறிவேப்பிலை - 4-5 இலைகள்

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    பெருங்காயம் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவையான அளவு 

    செய்முறை:

    * உலர்ந்த பச்சை பட்டாணியை இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணி நேரம் ஊறவைக்கவும்.

    * பின்னர், குக்கரில் பட்டாணியை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.

    * பட்டாணி குழைந்துவிடாமல் மென்மையாக இருக்க வேண்டும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும்.

    * பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * வதக்கிய தாளிப்புடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

    * கடைசியாக, தேங்காய் துருவலை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

    சுவையான நவராத்திரி பச்சை பட்டாணி சுண்டல் தயார். இதை சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம்.

    தேங்காய் சாதம்

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த சாதம் - 1 கப்

    துருவிய தேங்காய் - 1/4 முதல் 1/2 கப் (தேவைக்கேற்ப)

    நெய் அல்லது எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 2 (அல்லது பச்சை மிளகாய்)

    முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

    இஞ்சி - 1/2 இன்ச் துண்டு, பொடியாக நறுக்கியது

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    உப்பு - தேவைக்கேற்ப 

    செய்முறை:

    * சாதத்தை வேகவைத்து, ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும். ஆறின சாதத்தை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும், இதனால் சாதம் உதிரியாக இருக்கும்.

    * ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * முந்திரி பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் (பயன்படுத்தினால்), கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து, முந்திரி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    * தீயைக் குறைத்து அல்லது அணைத்து, துருவிய தேங்காயைச் சேர்த்து, லேசாக வதக்கி மணம் வரும் வரை கிளறவும்.

    * துருவிய தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் ஆற வைத்த சாதத்தை கடாயில் சேர்க்கவும். எல்லா பொருட்களையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.

    * சுவையான நவராத்திரி தேங்காய் சாதம் தயார்!

    நவராத்திரி கீர்

    நவராத்திரி கீர் என்பது, பொதுவாக நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பவர்கள் உண்ணும் ஒரு இனிப்புப் பண்டமாகும். இவை பால், சர்க்கரை, பழங்கள் மற்றும் நட்ஸ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன.

    பிரபலமான நவராத்திரி கீர் வகைகள்:

    ஜவ்வரிசி கீர் : ஜவ்வரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த இனிப்பு, நவராத்திரி காலத்தில் பொதுவாக உண்ணப்படும் கீர்களில் ஒன்றாகும்.

    மக்கானா கீர் : இந்த கீர் மக்கானாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, மேலும் இது நவராத்திரியின் போது உண்ணப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான இனிப்பு வகையாகும்.

    குட்டு கீர்: குட்டு மாவைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த கீர், நவராத்திரி காலத்தில் விரதத்தின் போது உண்ணப்படும் ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும்.

    இன்று நாம், நவராத்திரிக்கு மிகவும் பிரபலமான மக்கானா கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. 

    தேவையான பொருட்கள்

    மக்கானா (தாமரை விதைகள்) - 1 கப்

    பால் - 2½ கப்

    சர்க்கரை - 4 டீஸ்பூன்

    ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா (நறுக்கியது) - தலா 1 டீஸ்பூன்

    குங்குமப்பூ - 10 கோடுகள்

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    * ஒரு கடாயில் நெய் சேர்த்து, அதில் மக்கானாவை சேர்த்து மிருதுவாக வறுக்கவும்.

    * மக்கானாவை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

    * ஒரு கடாயில் பாலை சூடாக்கி, அதில் வறுத்த மக்கானாவையும், சர்க்கரையையும் சேர்த்து நன்கு கரைய விடவும்.

    * சர்க்கரை கரைந்ததும், ஏலக்காய் தூள், குங்குமப்பூ, நறுக்கிய உலர் பழங்கள் சேர்த்து, 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * சுவையான மக்கானா கீரை தயார்! இதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறலாம்.

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் ஐந்தாம் நாளான இன்று, துர்கா தேவியின் ஸ்கந்தமாதா வடிவத்தை வழிபடும் நாளாகும்.

    சிறப்பு மந்திரங்கள்:

    ஓம் ஸ்கந்தமாதாயை நமஹ.

    ஹ்ரீம் க்லீம் ஸ்வாமினியை நம.

    இந்த மந்திரம், தாமரை மலர் ஏந்திய, சிம்மாசனத்தில் அமர்ந்த, மங்களகரமான ஸ்கந்த மாதா தேவியை போற்றி வணங்குவதாகும். இவரது பூஜை சக்தி, பாதுகாப்பு மற்றும் செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஐந்தாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கவுரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையே போற்றி

    ஓம் போற்றுவோர் துணையே போற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய் போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி

    • குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    விரதமிருந்த பக்தர்கள் பலரும் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றிலான காப்பு அணிந்து கொண்டனர். 2-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கூடும் என்பது ஐதீகம். 3-ம் நாள் திருவிழாவான நேற்று காலை 7.30 இரவு 7.30 வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிகின்றனர். அவர்கள் 6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் 10-ம் திருவிழாவான 2-ந் தேதி வரை மேளம், டிரம் செட், செண்டா மேளம், தாரை தப்பட்டம் மற்றும் கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவதோடு, மக்களிடம் இருந்து காணிக்கைகளை பெற்று கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

    எனவே வேடம் அணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேடம் அணிபவர்களின் உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும். காப்பு கட்டிய பின்னரே வேடம் அணிய வேண்டும். எந்த வேடம் அணிந்தாலும் அதன் புனித தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும்.

    அன்னையின் நாமங்களை மட்டுமே உச்சரிக்க வேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.

    காளிவேடம் அணியும் பெண் பக்தர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்களாகவோ அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ இருத்தல் வேண்டும்.

    வருகிற 2-ந் தேதி நள்ளிரவில் மகிஷா சுரசம்ஹாரம் முடிந்தபிறகு அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.

    காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊரில் உள்ள கோவில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • "ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர்.
    • சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 5-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் ஸ்கந்தமாதா. ஸ்கந்தமாதா என்பவர் நவதுர்கைகளில் ஐந்தாவது வடிவம். இவர் முருகனின் தாயார், சிம்மத்தின் மீது அமர்ந்திருப்பவர். இவர் நான்கு கரங்களைக் கொண்டவர்.

    "ஸ்கந்த" என்பது போர் கடவுளான முருகனின் மற்றொரு பெயர். தேவர்களின் சேனாபதியே முருகன்! முருகனின் ஒரு பெயர் 'ஸ்கந்தன்' ஆகும். 'ஸ்கந்த மாதா என்றால் 'முருகனின் அன்னை' என்று பொருள்.

    நவராத்திரியின் பஞ்சமி திதியில் ஆதிசக்தியின் 'ஸ்கந்தமாதா' ரூபத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரூபத்தில் அம்பாளின் மடியில் குழந்தை முருகன் அமர்ந்துள்ளான். நான்கு கரங்களுடைய ஸ்கந்தமாதா சிம்மத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

     ஸ்கந்தமாதா

    ஒருகாலத்தில் தாரகாசுரன் என்னும் அசுரன், கடுமையான தவம் செய்து "சிவபெருமான் மகன் தவிர வேறு யாராலும் என்னை வதம் செய்ய முடியாது" என்ற வரத்தைப் பெற்றான். இந்த வரத்தால் அவன் தேவர்களையே துன்புறுத்த ஆரம்பித்தான்.

    ஆனால் அப்போது சிவபெருமான் யாருடனும் திருமணம் செய்து கொள்ளாமல் தவம் செய்து கொண்டிருந்தார். இதனால் தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

    சிவனைத் திருமணம் செய்ய பார்வதி (சதீயின் மறுபிறப்பு) கடுமையான தவம் செய்தார். அவருடைய தவத்தால் சிவபெருமான் சம்மதித்து திருமணம் நடந்தது.

    சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் ஸ்கந்தன் (கார்த்திகேயன், முருகன், சுப்பிரமணியன்). இவர் பிறந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏனெனில் இவர் தான் தாரகாசுரனை அழிக்கக் கூடியவன்.

    தன் தாயின் அருளும், சக்தியையும் பெற்று ஸ்கந்தன் (முருகன்) தாரகாசுரனை வதம் செய்து தேவர்களை காத்தார்.

    பார்வதி, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார். அந்த நிலையிலேயே இவர் ஸ்கந்தமாதா எனப் போற்றப்பட்டார்.

    பின்னர் ஸ்கந்தன் (முருகன்) தனது வீரத்தால் தாரகாசுரனை வதம் செய்து, தேவர்களுக்கு அமைதி கொண்டுவந்தார். இதன் மூலம் தாய் ஸ்கந்தமாதா மகிமை உலகம் முழுவதும் பரவியது.

    ஸ்கந்தமாதாவை 5-வது நாளில் வழிபடுவதால் தனது அருள் மற்றும் நலத்தை வேண்டுபவர்களுக்கு வழங்குகிறார்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி ஸ்கந்தமாதாயை நமஹ" என்று ஜபித்தால் ஸ்கந்தமாதாவின் அருள் கிடைக்கும்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-10 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி காலை 8.15 வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : விசாகம் இரவு 9.37 வரை பிறகு அனுஷம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சிம்ம வாகனத்தில் பவனி

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வைஷ்ணவ கருட வாகனத்தில் பவனி குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்துடன் காட்சி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை சிம்ம வாகனத்தில் பவனி. இரவு முத்துப்பந்தல் அருளிய லீலை. திருமலை நம்பி திருநட்சத்திர வைபவம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு, திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.

    லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-நிறைவு

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-போட்டி

    கன்னி-புகழ்

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- நட்பு

    மகரம்-சுகம்

    கும்பம்-சுபம்

    மீனம்-வெற்றி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு கூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறுகள் ஏற்படும்.

    ரிஷபம்

    ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

    கடகம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமண பேச்சுகள் முடிவாகலாம்.

    சிம்மம்

    வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.

    கன்னி

    அமைதி கிடைக்க ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

    துலாம்

    திறமை பளிச்சிடும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். சிநேகிதர்கள் செல்வநிலை உயர வழிகாட்டுவர்.

    விருச்சிகம்

    யோகமான நாள். வருமானம் உயரும். புகழ் பெற்றவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவோடு நல்ல காரியம் நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். சொத்துகளால் லாபம் உண்டு.

    மகரம்

    மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு கைகூடிவரும். வியாபார விருத்தி உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கும்பம்

    உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.

    மீனம்

    நட்பு பகையாகும் நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை.

    • நவராத்திரி விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.
    • விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது.

    நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள்.

    நவராத்திரி விழாவை தமிழகத்தில் பொம்மைக் கொலு என்றும்; வங்கத்தில் துர்க்கா பூஜை எனவும்; வடக்கே ராம் லீலா உற்சவமாகவும், கர்நாடகா, குலசேகரப்பட்டினம், குலுமணாலி, ஜகதல்பூர் தண்டேஸ்வரி ஆலயம் போன்ற இடங்களில் தசரா பண்டிகையாகவும் கொண்டாடுகின்றனர். இவ்விழாக் கொண்டாட்டத்தில் பெண் குழந்தைகளுக்குத்தான் ஏக குஷி.

    ஏனெனில் அவர்களை தினம் ஒரு வேடமிட்டு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொலு பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுக்க அனுப்புவார்கள். நவராத்திரி கொண்டாடுவதில் குடும்பத்தில் பெரியவர் முதல் சின்னஞ்சிறுவர்கள் வரை அனைவர் பங்கும் உண்டு. இதனால் ஒற்றுமை, மரியாதை, பக்தி உணர்வு அதிகமாகும். கலைத்திறன், கற்பனைத்திறன், பொறுமை, சுறுசுறுப்பு, கைவேலைத்திறன், பாட்டு, நடனத் திறன்களும் வெளிப்படும். நிவேதனப் பொருட்கள் விதம் விதமாய் செய்வதால் சமையல் கலை போற்றப்படுகிறது. விதவிதமான வேடங்கள் போடும்போது ஒப்பனைத்திறன் ஒளிர்கிறது. இவை அனைத்தினாலும் மன மகிழ்ச்சியும், பாராட்டும் கிடைக்கும். பூஜை மகிமையால் மனை சிறக்கும்; மகாசக்தி அருளால் மங்களம் பெருகும்; நினைத்தது நிறைவேறும். எனவே தான் நவராத்திரி சுபராத்திரி எனப்படுகிறது.

    நவராத்திரியின் ஐந்தாவது நாளில் தாய்மை, கருணையின் வடிவமான ஸ்கந்தமாதா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பச்சை நிற ஆடையை அணிய வேண்டும். இதனால் அவள் தனது பக்தர்களுக்கு அனைத்து விதமான செழிப்பை வழங்குவாள். பூஜை அறையை மா இலைகள் மற்றும் சாமந்தி தோரணங்களை கொண்டு அலங்கரியுங்கள். 

    ×