என் மலர்
ஆன்மிகம்
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-13 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி நண்பகல் 1.41 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : மூலம் மறுநாள் விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று சரஸ்வதி ஆவாஹனம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி.
திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-பணிவு
மிதுனம்-பெருமை
கடகம்-களிப்பு
சிம்மம்-உழைப்பு
கன்னி-விருத்தி
துலாம்- நன்மை
விருச்சிகம்-பக்தி
தனுசு- ஆசை
மகரம்-ஆக்கம்
கும்பம்-பயணம்
மீனம்-கடமை
- மகாகௌரி நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார்.
- மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 8-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'மகாகௌரி'. மகாகௌரி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
மகாகௌரி என்பவர் நவதுர்க்கைகளில் எட்டாவது அவதாரமான துர்க்கையின் வடிவமாவார். இவர் நவராத்திரியின் எட்டாம் நாளில் வழிபடப்படும் சக்தி வாய்ந்த தெய்வமாகும். மகாகௌரி தூய்மை, அமைதி, அழகு, கருணை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
நவராத்திரி பண்டிகையின் எட்டாம் நாளில் வழிபடப்படும் மகாகௌரி வெண்மை நிற மேனியைக் கொண்டவர். மகாகௌரி என்றால் "வெண்மை" என்று பொருள்படும். மகாகௌரி தனது பக்தர்களின் பாவங்களை நீக்கி, மனதில் அமைதியையும், விருப்பங்களையும் நிறைவேற்றுபவர்.
"மகா" - பெரிய, "கௌரி" - பிரகாசம்.
மிகச் சுத்தமான பளிங்கு போன்ற பொன்னிற-வெண்மையான உடல் கொண்டவள். மகாகௌரியின் வாகனம் வெள்ளை காளை (நந்தி). அவரது ஆடை வெண்மை நிறம்.
சிவ மகாபுராணத்தில் மஹாகௌரி தேவி வரலாறு:
பார்வதி தேவி சிறுவயதிலிருந்தே சிவபெருமானையே தனது கணவனாக அடைய விரும்பினாள். அவரது விருப்பத்தை கண்டு, நாரதர் அவருக்கு கடுமையான தவம் செய்ய அறிவுரை கூறினார்.
இமயமலையின் காட்டில் பார்வதி தேவி பல வருடங்கள் கடுமையான தவம் செய்தாள். இதனால், அவளது உடல் மிகவும் வாடி, கருமையான நிறமடைந்தது.
அப்போது, அவளது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அவளை அருளால் ஏற்றுக்கொண்டார். அவரது கருமை நிறம் நீங்குவதற்காக சிவபெருமான், பார்வதியை கங்கை நதியில் நீராடச் செய்தார்.
நீராடிய பின்னர் பார்வதியின் உடல் பளிங்கு போன்ற வெண்மையுடன் மிளிர்ந்தது. அவள் மிகச் சுத்தமான, ஒளிவீசும் வடிவில் தோன்றினாள். அந்த உருவமே மஹாகௌரி என்று அழைக்கப்பட்டது.
வெள்ளை நிறம், அவளது முழுமையான சுத்தத்தின் அடையாளமாகக் கூறப்படுகிறது. சிவனின் சக்தியாக, அனைத்து பாவங்களையும் அழித்து, பக்தர்களுக்கு புதிய வாழ்வு, அமைதி, முக்தி தருகிறாள்.
நல்லவர்களைப் பாதுகாப்பதும், தீய செயல்களைச் செய்பவர்களைத் தண்டிப்பதும் மகாகௌரியின் நோக்கம். மகாகௌரி தேவி தனது பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி, அனைத்து துன்பங்களையும் நீக்கும் சக்தி கொண்டவள்.
ஸ்லோகம்:
'ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் மஹாகௌர்யை நம' என்று ஜபிக்க வேண்டும்.
மகாகௌரியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். குடும்பத்தில் சாந்தி நிலைக்கும். திருமண வாழ்வில் நல்லிணக்கம் ஏற்படும்.
- ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
- முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.
இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
அப்படியான நவராத்திரியின் எட்டாம் நாளில் மகாகவுரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் மயில் பச்சை நிறத்திலான ஆடையே பக்தர்கள் அணிந்து வழிபட வேண்டும். நீலம் மற்றும் பச்சை கலவையானது தனித்துவத்தை குறிக்கும் நிறமாகுகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வ தில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோக மாற்றம் உண்டு.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
நட்பால் நலம் கிடைக்கும் நாள். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.
கன்னி
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். நீண்டதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடலாம். தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வை முன்னிட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
விருச்சிகம்
முயற்சிகளில் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
தனுசு
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களைச் செய்ய முடியாமல் போகலாம்.
மகரம்
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும்.
கும்பம்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். கல்யாண முயற்சி கைகூடும்.
மீனம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
- மிதுனம் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம்.
- மீனம் சகாயங்கள் நிறைந்த வாரம்.
மேஷம்
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்வீர்கள். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கூடும். புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்திக் கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். தடைபட்ட பத்திரப்பதிவு இந்த வாரம் நடந்து முடியும்.
புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். சிலருக்கு அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
ஆரோக்யத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகலாம்.சிலர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். 29.9.2025 அன்று 3.55 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். பணம் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.
ரிஷபம்
முக்கிய தேவைகள் பூர்த்தியாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவானின் பார்வையில் சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்ம பலம் பெருகும். எடுக்கும் முயற்சியில் சில தடைகள் வந்தாலும் வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் நிலவிய நெருக்கடிகள் சங்கடங்கள் குறையும்.பதவி உயர்வு இடமாற்றம் போன்றவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்கள் சீராகும்.
அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.தொழில் போட்டிகளை சமாளிக்கும் திறமை கூடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பிரபஞ்சம் வழங்கும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் போது நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய நேரம் உள்ளது.
29.9.2025 அன்று 3.55 காலை முதல் 1.10.2025 அன்று மதியம் 2.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் யோசித்துப் பேச வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் மகாவிஷ்ணுவை வழிபட தனவரவில் நிலவிய தடைகள் அகலும்.
மிதுனம்
பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார்.இது அதிர்ஷ்டம் அரவணைக்கும் காலமாகும். லட்சியங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு சாதகமான நேரம். குடும்பத்தில் அன்பு கூடும். அமைதி நிலவும். பண வரவு அமோகமாக இருக்கும்.
பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.முக்கியமான பணிகளை தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம். அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும்.மறு திருமண முயற்சி பலிதமாகும்.
திருமணத்திற்கு அதிக வசதியுள்ள வரன் அமை யும்.1.10.2025 அன்று மதியம் 2.27 முதல் 3.10.2025 இரவு 9.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும்.ஆரோக்கி யத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும்.புரட்டாசி சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகமாகும்.
கடகம்
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.கடக ராசிக்கு வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது.கடக ராசியினருக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும்.புதிய தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும்.குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும்.
தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருக்கும். பிள்ளை களின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.இழந்த பதவி தேடி வரும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும். 3.10.2025 இரவு 9.27-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகள் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.
கை,கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடு வதால் சர்ப்ப தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.
சிம்மம்
சங்கடங்கள் நீங்கும் வாரம்.உச்சம் பெற்ற தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் ராசி அதிபதி சூரியன் சேர்க்கை பெற்றுள்ளார். புகழ், அந்தஸ்து கவுரவம் கூடும். நம்பிக்கை, நாணயம் உயரும். தங்கு தடையில்லாத பணவரவு ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.
வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். போட்டி, பொறாமைகள் அகலும். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. நோய்,நொடிகள் நிவர்த்தியாகும்.சுப செலவுகள் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும்.மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும்.எதிர்கால தேவைக்காக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் அல்லது சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடு வதால் அஷ்டம சனி காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்கள் குறையும்.
கன்னி
கடன் சுமை குறையும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் தன ஸ்தானம் சென்று செவ்வாயுடன் இணைகிறார். 2, 8 என்ற பண பர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குகிறது.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை தேடிச் செல்லலாம்.
வாழ்க்கைத் துணை, நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு.
சனி வக்ரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். புரட்டாசி மாத சனிக்கிழமை மகா விஷ்ணுவை வழிபடுவதால் கண்டகச் சனியால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறையும்.
துலாம்
சுதிர சொத்துக்கள் சேரும் வாரம். ராசியில் உள்ள செவ்வாயை குரு பகவான் பார்க்கிறார். இது குரு மங்கள யோகமாகும்.இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கும் சொத்து சேரும். சிலருக்கு அரசாங்கத்தின் மூலம் இலவச வீடு மனைகள் கிடைக்கலாம். விற்க முடியாமல் கிடந்த பழைய குடும்ப சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
புத்திர பாக்கி யத்தில் நிலவிய தடைகள் நீங்கி கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பிள்ளை களுக்கு திருமணம் செய்து மருமகன், மருமகள் வரக் கூடிய அமைப்பு உள்ளது. கலைத் துறையி னருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கிடைக்கும். கணவன்-மனை விக்குள் எற்பட்ட கருத்துவேறுபாடு குறையும். ஆன்மீக நாட்டம் உண்டாகும்.
பணம் பல வழிகளில் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும்.திட்டமிட்டு செயலாற்றினால் காரிய வெற்றி உண்டாகும். இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உண்டாகும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கர்ம வினை தாக்கம் குறையும்.
விருச்சிகம்
முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சாரம் செய்கிறார்.சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கூடும்.சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்ற வர்களின் விருப்பம் நிறைவேறும்.
இளம் வயதி னருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கத் துவங்கலாம். தள்ளிப் போன வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சி சாதகமாகும். பெண்கள் நண்பிகளுடன் இணைந்து தீபாவளிக்கு ஏற்ற சீசன் வியாபார முயற்சியில் ஈடுபடுவார்கள்.
நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். புரட்டாசி மாத சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகள் அகலும்.
தனுசு
எதிர்மறை பலன்கள் சீராகும் வாரம். ராசிக்கு குரு சனி பார்வை உள்ளது. யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்ற பாடத்தை குருவும் சனியும் கற்பிப்பார்கள். நோய் விபத்து கண்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும்.மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை மாறும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும்.
குடும்ப ஸ்தானத்திற்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.இது வரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.
விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். வீடு, வாகனம் வாங்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். புரட்டாசி மாதத்தில் மகா விஷ்ணுவை வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.
மகரம்
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம்.பாக்கியாதிபதி புதன் உச்சம் பெறுவதால் மகர ராசிக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து சுப பலன்களும் நடக்கும். தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும்.புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும்.
வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும்.
வீடு கட்ட, அல்லது புதிய தொழில் துவங்க கடன் கிடைக்கும்.வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். வரவுக்கு மீறிய செலவை தவிர்க்க வேண்டும்.புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபட மகத்தான மாற்றங்கள் வந்து சேரும்.
கும்பம்
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சனி தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.கும்ப ராசியினருக்கு ராஜயோக அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் வாரமாகும்.பேச்சில் தெளிவு இருக்கும்.பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.
ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகன்று எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும்.கோச்சார சர்ப்ப தோஷத்தால் சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். அரசு வழி காரியங்கள் சித்திக்கும்.
தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் நிலவிய போட்டி பொறாமைகள் மறையும்.பய உணர்வு நீங்கும்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்கு பிரயோகங்களை தவிர்க்க வேண்டும்.புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.
மீனம்
சகாயங்கள் நிறைந்த வாரம்.ராசி அதிபதி குரு 4ம்மிடத்தில் நிற்பதால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும். வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழிச் சொத்துக்கள் பணம் நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவுகளின் அன்பு. அனுசரனை மகிழ்ச்சியை கூட்டும். சுகபோக வாழ்க்கை உண்டாகும்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பரிபூரண குல தெய்வ அருள் உண்டாகும். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு.பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.
மகன், மகளின் முதல் மாதச் சம்பளம் உங்களை ஆனந்தப்படுத்தும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். ஆன்லைன் மோகத்தில் பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். புரட்டாசி மாதம் மகா விஷ்ணுவை வழிபடுவதால் குடும்ப சங்கடங்கள் குறையும்.
- பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி.
- தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியின் ஏழாம் நாளன்று அன்னை பராசக்தி, பிராம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். பிரம்ம தேவரின் அம்சமாகவும், சரஸ்வதி தேவியின் உருவமும் கொண்டவள் பிராம்மி. நான்கு கரங்களை கொண்டு அன்னப்பறவையில் வீற்றிருப்பவள். வெண்ணிற ஆடை தரித்தவள். தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்.
பிராம்மியை வழிபட மலர் கொண்டு திட்டாணி கோலம் போட வேண்டும். நல்லெண்ணெய் கொண்டு 19 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். தாழம்பூ, தும்பை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பிராம்மி தாயே கலைமகள் நீயே! அருள் நவராத்திரி ஆண்டருள் வாயே ஏழாம் நாள் இன்று உன் திருக்காட்சி இன்னும் இருநாள் உனதருளாட்சியே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
பிராம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சனி.எனவே பிராம்மியை வழிபடுவதன் மூலம் சனி தோஷம் நிவர்த்தியாகும். கர்ம வினைகள் தீரும், நிலையான தொழில் சிறக்கச் செய்வாள். தீர்க்க ஆயுசு வாழ அருள் புரிவாள்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 7வது நாளான இன்று காராமணி சுண்டல், வெஜிடபிள் சாதம், இனிப்பு பொங்கல் செய்து காலராத்திரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், காராமணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
காராமணி (கறுப்பு கண் பட்டாணி) - 1 கப்
எண்ணெய் - 1-2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கு ஏற்ப)
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
துருவிய தேங்காய் - 2-3 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* காராமணியை இரவில் அல்லது குறைந்தது 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, காராமணியுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
* காராமணி குழையாமல், உதிரியாக இருப்பது முக்கியம். வெந்ததும் நீரை வடிக்கட்டி தனியே வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
* பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்ப்பதாக இருந்தால்), காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும்.
* விருப்பப்பட்டால், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கலாம்.
* இப்போது வேகவைத்து வைத்துள்ள காராமணியை கடாயில் சேர்த்து, தாளிப்புடன் நன்கு கலக்கவும்.
* காராமணியுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1-2 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும்.
* கடைசியாக, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து (விருப்பப்பட்டால்), நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
* சுவையான காராமணி சுண்டலை சூடாக அல்லது வெதுவெதுப்பாக மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.
இந்த சுண்டலை நவராத்திரி காலத்தில் நிவேதனமாகவும் படைக்கலாம்.
வெஜிடபிள் சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
கலப்பு காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் (விரும்பினால்)
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:
* முதலில், குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
* பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* அதனுடன் பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.
* இப்போது நீங்கள் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* ஊறவைத்து, கழுவிய அரிசியை சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.
* தேவையான அளவு உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
* 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
* குக்கரின் ஆவி அடங்கியதும், திறந்து சாதத்தை மெதுவாக கிளறவும்.
* இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, ரய்தா அல்லது குழம்புடன் பரிமாறவும்.
இனிப்பு பொங்கல்:
நவராத்திரியின் போது பிரசாதமாக படைக்கப்படும் இனிப்பு பொங்கல் என்பது சர்க்கரைப் பொங்கல் ஆகும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப் முதல் அரை கப் வரை
வெல்லம் - 2 கப் அல்லது தேவைக்கேற்ப
நெய் - கால் கப் முதல் 3 டேபிள் ஸ்பூன் வரை
முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் - ஒரு ஸ்பூன் அல்லது தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
* ஒரு குக்கரில், லேசாக வறுக்கப்பட்ட பாசிப்பருப்பு, கழுவிய அரிசி, தேவையான அளவு தண்ணீர், மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவிடவும்.
* ஒரு கடாயில் வெல்லத்தை எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.
* வெல்லப் பாகை வடிகட்டி, குக்கரில் உள்ள அரிசி-பருப்பு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* வெந்த அரிசி-பருப்பு கலவையில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, மற்றும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
*நவராத்திரி ஸ்பெஷல் இனிப்புப் பொங்கல் தயார்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று, துர்கா தேவியின் காலராத்திரி தேவி வடிவத்தை வழிபடும் நாளாகும்.
காலராத்திரி தேவிக்கு உரிய மந்திரம்:
"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே வராஹி மனோகராய தீமஹி தன்னோ உன்மத்தபைரவ ப்ரசோதயாத்"
கலாரத்ரா மந்திரம் என்பது கால பைரவர் அல்லது சிவனின் காலாதீத ரூபத்தைப் போற்றும் மந்திரமாகும். இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் வாழ்வில் பல நன்மைகளைப் பெறலாம்.
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஏழாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
ஏழாம் நாள் போற்றி
ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி
- காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
- காலராத்திரி தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காலராத்திரி தேவி
காலராத்திரி என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகவும், துர்கைகளில் ஏழாவது உருவமாகவும் கருதப்படுகிறார். துர்கையில் 9 வடிவங்களிலும் மிகவும் உக்கிரமான வடிவமாக தேவி காலராத்திரி விளங்குகிறார். நவராத்திரி ஏழாம் நாளில் காலராத்திரி தேவியை வழிபட வேண்டும்.
காலராத்திரி தேவியின் சிறப்பு அம்சங்கள்:
காலராத்திரி என்பது "கால" என்றால் காலம் அல்லது இருள், "ராத்திரி" என்றால் இரவு என்று பொருள். எனவே காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
ஷும்பன் – நிஷும்பன் வதம்
மார்கண்டேய புராணத்தின் தேவி மாஹாத்மியம் படி, அசுரர்களின் அரசனான ஷும்பன் - நிஷும்பன் இருவரும் உலகையும் தேவர்களையும் துன்புறுத்தினர்.
அவர்களை அழிக்க அம்பிகை தேவியின் உடலிலிருந்து பல உக்கிர வடிவங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காலராத்திரி.
காலராத்திரி தோன்றியதும், மஹாசுரர்களின் படைகள் அனைத்தும் இருளில் மூழ்கின. தேவியின் மூச்சில் இருந்து தீக்கதிர்கள் பீறிட்டன. யுத்தத்தில் காலராத்திரி தேவி பல அசுரர்களை அழித்து, ஷும்பன்–நிஷும்பன் படைகளை முறியடித்தார்.
ரக்தபீஜன் வதம்
மார்கண்டேய புராணத்தில் ஷும்பனுக்கு உதவியாக ரக்தபீஜன் என்ற அசுரன் இருந்தான். அவன் ரத்தத்தின் ஒரு துளி பூமியில் விழுந்தால், அதிலிருந்து மற்றொரு ரக்தபீஜன் உருவாகும் என்று வரத்தை பெற்று இருந்தான். இதனால் அவன் அசுரர்களின் பெரும் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அந்த அசுரனை யாராலும் அழிக்க முடியவில்லை.
அப்போது காலராத்திரி தோன்றி, போர்க்களத்தில் அவன் ரத்தத்தை குடித்தார். அதன் மூலம் அவன் ரத்தம் தரையில் சிந்தாமல் தடுத்துவிட்டு, அவனை முழுமையாக அழித்தார்.
இந்த தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும். தன் பக்தர்களுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், செல்வத்தையும், இருளை நீக்கும் சக்தியையும் தருபவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காலராத்ரியாயை நம' என்று ஜபிக்க வேண்டும்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-12 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 12.09 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : கேட்டை பின்னிரவு 2.24 மணி வரை பிறகு மூலம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்
இன்று சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்துடன் காட்சி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-நன்மை
கடகம்-நட்பு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-மேன்மை
துலாம்- நேர்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஜெயம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-விருத்தி
மீனம்-நிறைவு
- பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள்.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
மேலும், வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் கொலுவை காண வருமாறு நண்பர்கள், உறவினர்களை அழைத்து அவர்களை உபசரிக்கின்றனர். பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று பக்தர்கள் பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள். காலராத்திரி பயமின்மை மற்றும் துணிச்சலின் பண்புகளை உள்ளடக்கியதால், வலிமை மற்றும் பாதுகாப்பை நாடுபவர்களுக்கு இந்த நாள் குறிப்பிடத்தக்கது.
காலராத்திரி தேவியை வழிபட இன்று பக்தர்கள் ஆரஞ்சு நிறத்திலான ஆடையே அணிய வேண்டும். ஆரஞ்சு நிறமானது மகிழ்ச்சி, சக்தி மற்றும் அரவணைப்பின் நிறம். இன்றைய நாளில் ஆரஞ்சு நிற ஆடையே அணிந்து பூஜை அறை மற்றும் இல்லத்தை ஆரஞ்சு நிறத்திலான மலர்களை கொண்டு அலங்கரியுங்கள்.






