என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று சித்திதாத்ரி தேவி வணங்கப்படுகிறாள். துர்கா தேவியின் 9வது அம்சமான சித்திதாத்ரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.

    மந்திரங்கள்:

    ஓம் தேவி ஸித்திதாத்ர்யை நமஃ.

    ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் ஸித்திதாத்ர்யை நமஃ.

    இந்த நாள் பக்தர்களுக்கு வெற்றிகளையும், செல்வத்தையும், செழிப்பையும் தரக்கூடியதாகக் கருதப்படுகிறது. 

    • சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
    • சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும்.

    நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் - பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.

    இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.

    அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

    நவராத்திரியின் 9-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'சித்திதாத்ரி தேவி'. சித்திதாத்ரி தேவி நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும். சித்திதாத்ரி என்பவர் பார்வதி தேவியின் ஒன்பதாவது மற்றும் இறுதி வடிவமான நவதுர்க்கைகளில் ஒருவர்.

    "சித்தி" என்றால் சக்தி அல்லது படைப்பு, இருப்பின் இறுதி மூலத்தை உணரும் திறன், "தாத்ரி" என்றால் கொடுப்பவர் அல்லது தருபவர் எனப் பொருள்படும்.

    எனவே, சித்திதாத்ரி என்பது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் தருபவர் என்று பொருள்படும். இவர் நவராத்திரியின் இறுதி நாளான நவமி அன்று வணங்கப்படுகிறார்.

    சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு அனைத்து தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, வாழ்வின் வெற்றியை அருள்பவள்.

    சித்திதாத்ரி தேவி கதை:

    பிரபஞ்சம் படைக்கப்படுவதற்கு முன்னர் எதுவுமே இல்லாமல் இருந்தது. இந்த நேரத்தில்தான் சித்திதாத்ரி, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை உருவாக்கி, அவர்களுக்கு முறையே படைப்பு, காத்தல் மற்றும் அழித்தல் பணியை வழங்கினார்.

    அந்த தெய்வங்களுக்கு தத்தம் கடமைகள் கொடுக்கப்பட்டபோதும், பிரபஞ்ச படைப்பு நடைபெற வேண்டுமெனில் அஷ்டசித்திகள் (அனிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராக்யம், பிராகாம்யம், ஈஷித்துவம், வசித்துவம்) தேவைப்பட்டது. அந்த சித்திகளை தெய்வங்களுக்கு அருளியதே சித்திதாத்ரி தேவி.

    புராணக் கதையின்படி, சித்திதாத்ரி தேவியே சிவபெருமானுக்கே அஷ்டசித்திகளை அருளினாள்.

    மூன்று பிரபுக்களும், மகாதேவியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்கள் சக்திகளை அடைய ஆழ்ந்த தவம் செய்ய கடலை நோக்கிச் சென்றனர். அவர்களின் அர்ப்பணிப்பால் திருப்தியடைந்த சித்திதாத்ரி, அவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு சித்திகளை வழங்கினார். இப்படித்தான் பிரபஞ்சம் மும்மூர்த்தியால் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

    சிவபெருமான் மிகுந்த தவம் செய்து தேவியைத் தரிசித்தார். அப்போது சித்திதாத்ரி தேவியே அவருக்கு அஷ்டசித்திகளை அருளினாள். அந்த அருளால்தான் சிவன் அர்த்தநாரீசுவரன் (அரை ஆண் – அரை பெண்) வடிவில் வெளிப்பட்டார். இதனால் பிரபஞ்சத்தில் ஆண் – பெண் சமநிலை உருவானது. இந்த வடிவத்தில், சிவபெருமானின் உடலின் ஒரு பாதியும், சித்திதாத்ரியின் மறுபாதியும் ஒன்றிணைந்து, பிரபஞ்சத்தில் மிகவும் சக்திவாய்ந்த வடிவத்தை உருவாக்குகின்றன. அதனால் தான், சித்திதாத்ரி தேவியை சகல சித்திகளின் தாயான தேவி என்கிறார்கள்.

    சித்திதாத்ரி தேவி நான்கு கரங்கள் உடையவள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை தாங்கியவள். இவரது முகத்தில் எப்போதும் சாந்தமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

    ஸ்லோகம்:

    "ஓம் தேவி சித்திதாத்ரியாயை நமஹ" என்று ஜபிக்க வேண்டும்.

    • வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள்.
    • தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    நவராத்திரி விழாவில் தேவியை ஒன்பதாவது நாளில் நாம் சித்திதாத்ரி என்ற பெயரில் வழிபடுகிறோம். சித்தி என்றால் வெற்றி என்று பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தாத்ரி என்றால் தருபவள் என்று பொருள். சித்திதாத்ரி என்றால் அனைத்திலும் வெற்றியை தருபவள் என பொருள்.

    நவராத்திரியின் 9 ஆம் நாளில் அம்பிகையை மகேஸ்வரி என்ற ரூபத்திலும், நவதுர்க்கை வழிபாட்டில் சித்திதாத்ரி என்ற பெயரிலும் வழிபடுகிறோம். இன்று தாமரை வகை கோலமிட்டு அம்பிகையை வழிபடலாம். தாமரை மலர் கொண்டும், மரிக்கொழுந்து இலை கொண்டும் அர்ச்சனை செய்யலாம்.

    சித்திதாத்ரி தேவியை வழிபடுவதால் வாழ்வில் முழுமை நிலையை பெறுவதுடன், போதும் என்ற நிறைவான நிம்மதியான மனதையும் இந்த அம்பிகை வழங்குகிறாள். வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து விட்டது என்றால், அதற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் வேண்டுவது மன நிம்மதியை தான். அந்த நிறைவான நிம்மதியை இந்த அம்பிகை நமக்கு அருள்வாள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் பக்தர்கள் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடை அணிய வேண்டும். இளஞ்சிவப்பு நிறம் அன்றைய நாளில் நம்பிக்கை, எழுச்சி மற்றும் அன்பு மற்றும் நல்லிணக்கத்தை வரையறுக்கிறது. நவராத்திரி கொண்டாட்டத்தின் போது இளஞ்சிவப்பு நிறத்தை அணிவது உங்களை வசீகரமாகவும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது. அதே நேரத்தில் உலகளாவிய அன்பின் அருளையும் உங்களுக்கு வழங்குகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

    முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஒன்பதாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி..!!

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். சொத்துப் பிரச்சனை சுமூகமாக முடியும். நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும்.

    ரிஷபம்

    ஆலய வழிபாட்டில் அமைதி காண வேண்டிய நாள். வருமானப்பற்றாக்குறை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

    மிதுனம்

    உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும். உத்தியோகத்தில் திடீரென எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம்.

    கடகம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

    சிம்மம்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கன்னி

    குறைகள் அகல கோவில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம்.

    துலாம்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    தொழில் வளர்ச்சிக்கு துர்க்கையை வழிபட வேண்டிய நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வருமானம் உயரும். புண்ணிய காரியங்களுக்கு கொடுத்து உதவுவீர்கள்.

    தனுசு

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம்.

    மகரம்

    தடைகள் அகலும் நாள். காணாமல் போன பொருள் ஒன்று கைக்கு கிடைக்கலாம். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.

    மீனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய கூடுதல் செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம்.
    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-14 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி பிற்பகல் 2.52 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம் : பூராடம் மறுநாள் விடியற்காலை 5.44 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்

    இன்று துர்காஷ்டமி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுர மர்த்தினி அலங்கார காட்சி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் சிம்மவாகினி அலங்காரம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ எம்பெருமாள் புறப்பாடு. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்த கோட்டம், வல்லக்கோட்டை, முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுநதருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆைச

    மிதுனம்-அமைதி

    கடகம்-பரிசு

    சிம்மம்-புகழ்

    கன்னி-சாதனை

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- நன்மை

    மகரம்-மேன்மை

    கும்பம்-களிப்பு

    மீனம்-கவனம்

    • நரசிம்மியை பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
    • நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு.

    நவராத்திரியின் எட்டாம் நாளன்று அன்னை பராசக்தி, நரசிம்மியாக வழிபாடு செய்யப்படுகிறாள். நரசிம்மரின் சக்தியாக விளங்கக்கூடியவள். நரசிம்மி மனித உடலும், சிங்க முகமும் கொண்டவள். சிங்க வாகனத்தில் அமர்ந்து இருப்பவள். எதிரிகளை அழித்து நம்மை காத்து அருளக்கூடியவள்.

    நரசிம்மியை வழிபட காசு கொண்டு தாமரை கோலம் போட வேண்டும். 18 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். பன்னீர் ரோஜா, செவ்வரளி பூக்கள் மற்றும் பன்னீர் இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.

    "நாமகளே சரஸ்வதியே நான்முகனின் நாயகியே!

    நாடி வந்தோம் சந்நிதியே நம்பி வந்தோம் அம்பிகையே! அம்புடன் வில் சங்கு சக்கரம் மணிசூலம் உடையவளே சும்பன் வதம் புரிந்தவளே சுடர்விழியே மலர்மகளே."

    என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.

    நரசிம்மி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் ராகு. எனவே நரசிம்மியை வழிபடுவதன் மூலம் ராகு தோஷம் நிவர்த்தியாகும். வெளிநாடு அல்லது வெளிநாட்டுத் துறைகளில் இருந்து தொழில் மற்றும் வியாபார வாய்ப்புகளை வழங்குவாள். மனதில் உற்சாகம் பிறக்கும், அரசு வழியில் ஆதரவு கிடைக்கும், எதிர்பாராத திடீர் செல்வத்தையும், புகழையும் தருவாள்.

    • தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.
    • பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும்.

    பெருமாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட நீரால் இந்த தீர்த்தம் புனிதமாகிறது. இந்த புனித தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. பெருமாளின் ஆசியையும், அருளையும் பெறுவதற்காக தீர்த்தம் வழங்கப்படும்.

    பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும். துளசி இலைகளுக்கே மகத்துவம் உண்டு, அது பெருமாளின் பிரசாதமாக இருக்கும் போது இன்னும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தீர்த்தத்தை பெறும் முறை

    முதலில் தீர்த்தத்தை வாங்குவதற்கு முன், பக்தர் சடாரி அல்லது சடகோபம் மீது தலையை வைத்து இறைவனின் பாதங்களை வணங்க வேண்டும். இறை தரிசனத்திற்குப் பிறகு, பக்தரின் தலையில் சடாரி (பெருமாளின் திருவடியாக பாவிக்கப்பட்டது) வைக்கப்படும்.

    பின்னர் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படும். பெண்கள் தங்களின் இடது கையில் புடவையின் முந்தானையை பிடித்து, வலது கையை அதற்கு மேல் வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும். தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.

    • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
    • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

    அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் 8வது நாளான இன்று நவதானிய சுண்டல், மாங்காய் சாதம், அரிசி கீர் செய்து மகாகௌரி தேவிக்கு படைக்கலாம். முதலில், நவதானிய சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

    நவதானிய சுண்டல்

    தேவையான பொருட்கள்:

    நவதானியங்கள் (கொண்டைக்கடலை, பாசிப்பயறு, துவரம்பருப்பு, எள்ளு, மொச்சை, தட்டைப்பயறு, உளுந்து, கடலைப்பருப்பு, காராமணி போன்ற ஒன்பது தானியங்கள்)

    தேங்காய் துருவல்

    கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

    சமையல் எண்ணெய்

    பெருங்காயத்தூள்

    எலுமிச்சை சாறு

    உப்பு

     செய்முறை:

    * நவதானியங்களை தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ, குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.

    * ஊறவைத்த தானியங்களை குக்கரில் உப்பு சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

    * வெந்த தானியங்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    * அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    * பின்னர், வேகவைத்த தானியங்களை சேர்த்து, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

    * கடைசியாக, தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சத்தான நவதானிய சுண்டல் தயார்.

    மாங்காய் சாதம்

    தேவையான பொருட்கள்:

    வடித்த சாதம்

    பச்சை மாங்காய்

    எண்ணெய்

    கடுகு

    உளுத்தம்பருப்பு

    கடலைப்பருப்பு

    வேர்க்கடலை

    பச்சை மிளகாய்

    இஞ்சி

    பெருங்காயம்

    கறிவேப்பிலை

    மஞ்சள் தூள்

    உப்பு

    கொத்தமல்லி தழை.

     செய்முறை:

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

    * கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

    * அதனுடன் வேர்க்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.

    * மாங்காயின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி கடாயில் சேர்க்கவும்.

    * மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, மாங்காய் மென்மையாகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.

    * வடித்த சாதத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து, மாங்காய் கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

    * சாதம் கலவையை நன்றாக கலந்த பிறகு, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

    அரிசி கீர்

    தேவையான பொருட்கள்

    சாமா அரிசி (பார்ன்யார்ட் மில்லெட்) - 1/4 கப்

    பால் - 2 1/2 கப்

    குங்குமப்பூ - சில இழைகள்

    சர்க்கரை - 1/4 முதல் 1/2 கப் (உங்கள் இனிப்பு சுவைக்கு ஏற்ப)

    நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரி - சிறிதளவு

    ஏலக்காய் தூள் - 1/4 முதல் 1/2 டீஸ்பூன்

     

    செய்முறை

    * சாமா அரிசியை நன்றாக கழுவி, போதுமான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * ஒரு கனமான பாத்திரத்தில் பாலை மிதமான சூட்டில் வைத்து சூடாக்கவும்.

    * பால் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

    * குங்குமப்பூ இழைகள், நறுக்கிய பாதாம், மற்றும் முந்திரி சேர்த்து கிளறவும்.

    * அரிசி நன்கு வெந்து, பால் கெட்டியாகும் வரை மிதமான தீயில் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

    * அரிசி வெந்ததும் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

    * கீர் சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பரிமாறவும். 

    • சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
    • நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.

    ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள். நவராத்திரியில் மா துர்க்கையின் இந்த ஒன்பது வடிவங்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்யப்படுகிறது.

    அதன்படி, நவராத்திரியின் எட்டாம் நாளான மகாகௌரி வணங்கப்படுகிறது. துர்கா தேவியின் எட்டாவது அம்சமான மகாகௌரி தேவியை தியானிக்கவும், அவளுடைய நற்கருணையைப் பெறவும் உதவுகிறது.

    மந்திரம்:

    *ஸ்வேத விருஷப சமாருத ஷ்வேதாம்பர தாரா ஷுச்சின் மகாகௌரி சுபம் தத்யான் மகாதேவ பிரமோததா.

    இந்த மந்திரத்தை உச்சரிப்பது, எதிர்மறைகளை நீக்கி, உள் அமைதியைப்பெறவும், செழிப்பு மற்றும் மகிழ்ச்சி போன்ற நன்மைகளைப் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

    • முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
    • ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

    பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் எட்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும்

    அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம்

    நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-13 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சப்தமி நண்பகல் 1.41 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : மூலம் மறுநாள் விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சரஸ்வதி ஆவாஹனம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸ்ரீ அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்துடன் காட்சி.

    திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். நத்தம் ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-பெருமை

    கடகம்-களிப்பு

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-விருத்தி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- ஆசை

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-பயணம்

    மீனம்-கடமை

    ×